குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 29 October 2012

பொறுமை - இதனை அற்புதமாக விளக்கும் A B C D - இது தமிழ் ஆர்வலர்களுக்கும்

 வணக்கம்


இந்தப் பதிவை முடிந்த வரை இல்லை பொறுமையாகவே படியுங்கள். பொறுமை பற்றி தமிழில் பல வகையான சொற்றொடர்கள் உண்டு.குறிப்பாக திருக்குறளில் 

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

 "ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்"

 "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்"


இதனை தவிர சொல் வழக்கத்தில் சில சொற்றொடர்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. பொறுமையை சோதிக்காதே என்றும் பொறுமைக்கு ஒரு அளவு இருக்கு என்றும்  கோபத்தில் கூட பொறுமை பற்றியே பேசி வருகிறோம் . தலைப்பு ஒன்ன வச்சிக்கிட்டு எங்க பொறுமையை சோதிக்காதே என்று கோவப்படக்கூடாது .


A B C D இந்த நான்கு எழுத்தும் தங்களின் பங்களிப்பினை எப்போது தருகிறது பாருங்கள்.1 முதல் 99 வரை ஆங்கிலத்தில் இந்த எங்களை எழுதும் போது இந்த நான்கு எழுதும் வராது . ஆனாலும் பொறுமை இழக்கவில்லை . 




D என்கிற இந்த எழுத்து 100 என்கிற என்னை ஆங்கிலத்தில் எழுதும் போது வருகிறது .HUNDRED


A என்கிற இந்த எழுத்து 1000 என்கிற என்னை  ஆங்கிலத்தில் எழுதும் போது வருகிறது. THOUSAND


B என்கிற இந்த எழுத்து BILLION என்கிற வார்த்தையில் தான் வருகிறது.


C என்கிற இந்த எழுத்து CRORE என்கிற வார்த்தையில் தான் வருகிறது.


பொறுமை பற்றி சில 


 1. இறைவனாகிய சிவபெருமான் பொறுமையையே மலராக ஏற்றுக் கொள்பவனாவான்.

2. அன்பென்னும் விதை முளைத்துப் பயிராகி வளர்வதற்குப் பொறை என்னும் நீரை வற்றாது பாய்ச்ச வேண்டும்.

3. பொறுமையாக இருக்கின்ற இறைவன் நம்மின் தவறுகளைப் பொறுத்துக் கொள்பவன்.

4. உடலிலிருந்து நீங்கிப் பிரிகின்ற காலத்தில் சிறிதும் பொறுமையில்லாமல் சென்றுவிடும்.

5. பொறுமையே வைராக்கியத்தை தந்துதவும் என்பதனை நாவுக்கரசரின் வரலாறு எடுத்துரைக்கின்றது.


 

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா







Saturday 27 October 2012

சட்டசபை வளாகத்தில் அம்மா வாய்த்த A T M மிஷின் - for DMDK

வணக்கம்


தமிழகத்தை ஒளிமயமான ( கரண்ட் இல்லன்ன ஒளிமயமான எதிர்காலம் இருக்காதா என்ன ) எதிர்காலம் நோக்கி கொண்டு செல்லும் தங்கத் தாரகை அம்மா பல திட்டங்களை மக்களுக்கு வாரி வழங்கி வரும் வேளையில் ( விலையில்லா வெட்டி ச்சி வேட்டி , சேலை வாங்கிட்டேன்.) தன கட்சிக்காகவும் சில திட்டங்களை தீட்டி வருகிறார்.


திட்டத்தை விளக்கும் முன் 


ஒரு ஊர்ல ஒரு ஜிம் இருந்துச்சாம் . அங்க பலரும் வந்து போனாங்க . ஒரு பெரியவர் தொடர்ச்சியாய் வந்துகொண்டிருந்தார் .அதாவது இப்படி இருந்தார். 




புதுசா ஒரு பொண்ணு ஒன்னு வந்துச்சு . ஒருநாள் அந்தப் பண்ண பார்த்த பெரியவர் ஆடி போயுட்டார். அந்த பொண்ணு இப்படி இருந்துச்சு.





இப்படி இருக்கிறத பார்த்துட்டு தன்னோட டிரைனர் கிட்ட கேட்டாரு. இந்த பொண்ணு என்னை பார்த்து ஆடி போகனும்ன என்ன மிஷின் வாங்கணும் அப்படின்னு கேட்க அவரும் சிம்பிளா A T M மிசின் ஒன்னு வங்கி வச்ச இந்த பொண்ணு மாத்திரம் இல்ல , எந்த பொன்னும் ஆடி போயுருங்க. ( பெண்கள் மன்னிக்கணும் , இது சும்மா நகைசுவைக்காக மட்டும். ) .


இந்த கதை கணக்கா குடிமகன் , கருப்பு எம் ஜி ஆர் என்கிற பெயரை யூஸ் பண்ண கூடாது  அப்படின்னு அரசியல் பண்ணி மறுபடியும் ச்சி பன்னி இப்போ அம்மாவோட நிரந்தர ஆயுதம் மன்னிக்கவும் அம்மா மட்டும் அல்ல அணைத்து அரசியல் தலைவர்களின் ஆயுதம் ஆகிய பணத்தை வாரி வழங்க ஆரம்பித்து விட்டார்கள் போலும் .

அ தி மு க உறுப்பினர்களை பார்த்து நாமும் எப்படி இப்படி ஆவது என்று யோசித்தனர் போலும்.தே  மு தி க உறுப்பினர்கள் நால்வர் . எதற்க்காக சந்தித்தோம் என்று பேட்டியை  பார்க்க இன்றைய மாலை செய்தித்தாள் பார்க்கவும் , பார்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை நாளை காலை செய்திதாள்களில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் .
பின்ன இதனை நாட்கள் தன்னுடைய தொகுதி மக்கள் பிரச்சனைக்காக போகாத ( அம்மாவை பார்க்க ) இப்போ போயுருக்காங்க  எதுவும் அம்மா சபை வளாகத்தில் காசு போடும் இயந்திரம் ஒன்று வைத்திருக்கலாம் .அல்லது சரி போதும் இதுக்கு மேல என்னத்த சொல்ல . 


விஜயகாந்த் ஒரு படத்தில சொன்ன மாதிரி எல்லாருக்கம் பெப்பே .(  பொது மக்கள் )

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 


Thursday 25 October 2012

பழமையான , பாதுகாக்க வேண்டிய , அறிதான புகைப்படங்கள் - விளக்கங்களுடன் - 1

வணக்கம்


நேரடியாக படத்திற்கு போய் விடலாம் .

இந்தியா ஆகஸ்ட் 15 1947  சுதந்திரம் அடைந்ததை அறிவித்த டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாள். 




















குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் DAIRY MILK சாக்லேட் 






ஸ்டாலின் , லெனின் , ட்ராஸ்கி மூன்றும் இணைந்த புகைப்படம் .






டாவின்சியின் அற்புதாமான பெய்ண்டிங் 






 

ஏப்ரல் 16 போஸ்டன் குளோப் முதல் பக்க செய்தி , டைட்டானிக் விபத்தை பற்றி விரிவாக 






 1858 ல் யானை மலை ( மதுரை )







 M G M - சிங்கம்  லோகோவின் படபிடிப்பு - ஆண்டு 1924





 ஸ்டார் திரையரங்கம் 1948 ல் - தற்போது பாகிஸ்தானில் 



 பிரிட்டிஷ் போலீசாரால் கடைசி முறையாக நேதாஜி கைது செயப்பட்டப் போது .


 காந்தி தன மனைவி கஸ்துரிபா காந்தியுடன். 




பதிவு உங்களுக்கு ( அதாவது படங்கள் ) பிடித்துப் போனால் கண்டிப்பாய் பின்னூட்டம் இடுங்கள் , இந்தப் பதிவின் இரண்டாம் , மூன்றாம் பகுதி என தொடர.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 
















Wednesday 24 October 2012

சுஜாதா - மீண்டும் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்.

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட்  பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.


"எதுக்குப்பா?"
"தொடுங்களேன்!" சற்று வியப்புடன் தொட்டார்.
"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.

"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."
"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.

"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.
அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"

"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!"
என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம்
இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.

மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள்.
இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்!

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள்
ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர் தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது. மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு
பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை...
இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!

சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இ டையில் எங்கோ இருக்கிறது!".

ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக
இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.

இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால்,
நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது. ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்
பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்...
முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது
லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.

தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும்,
ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில்

இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
அம்பலம் இணைய (www.ambalam. com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்...

"நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள்.

கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில்
இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன்.
அதுதான் என்னுடைய நோபெல்!
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா
 

Sunday 21 October 2012

நித்யா சரி - அருணகிரி நாதர் சரியா - மீடியா தெரிவிக்காது

வணக்கம்


நித்யா நீக்கப்பட்டது எதோ உலக சாதனை போல் மீடியா அறிவிக்கிறது . செய்திதருகிறது , படம் தருகிறது , த்து .


அவரின் மேலான ஆன்மிகவாதி அப்படி ஒன்றும் அழகில்லை மன்னிக்கவும் அப்படி ஒன்றும் ஆன்மிகவாதி அல்ல என்பதை இந்த செய்தி தெரிவிக்கும் .பல உதாரணங்கள் இருந்தாலும் இது இப்போதைக்கு .


நித்யானந்தாவை, இளைய ஆதீனம் பதவியில் இருந்து நீக்கி விட்டேன். இந்த முடிவுகள் எல்லாம், இறைவன் சித்தமே. 2004ல், ஏற்கனவே, சுவாமிநாதனை தவிர்க்க முடியாத காரணத்தால், நீக்கினேன். தற்போது, நித்யானந்தாவையும், தவிர்க்க முடியாத காரணத்தால் நீக்கியுள்ளேன். - ஆதினம்

முன்னாள் முரசொலி பத்திரிகையின் ஊழியர் இந்த ஆதீனம் , பத்திரிக்கை நிர்வாகம் செய்த முரசொலி மாறனால் எப்போதும் " இந்த பயல் சுத்த வேஸ்ட்" என்று தகுதி சான்றிதல் வாங்கிய அருணகிரி எப்படி மதுரை ஆதீனம் ஆக்கபட்டார் என்பதுவே , திமுக விற்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக உள்ளது.

மொத்தத்தில் இந்த மடத்தையே அரசு இப்போதைக்கு எடுத்து மீனாக்ஷி கோவில் அரகட்டளையோடு சேர்த்து விட வேண்டும்.
 
இது தின இதழ்  கண்ணன் சொன்ன செய்தி 
 
ஆன்மிகம் மாறுமா அல்லது ஆசாமிகள் மாறுவார்களா ?
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Saturday 20 October 2012

வேண்டாங்க திறந்தவெளி - கழிப்பறை தான் நல்ல வழி

வணக்கம்


பருவம் தவறாமல் வெயில் ,  மழை  வருகிறதோ இல்லையோ நோய்கள் மட்டும் தவறாமல் வந்து விடுகிறது ஒவ்வொரு பருவத்திலும். சில ஆண்டுகளுக்கு முன் சிக்குன் குனியா வந்து பல பேருக்கு உடல் நலம் பதிக்கப் பட்டு பின்பு மீண்டு எழுந்தார்கள். இப்போது  டெங்கு காய்ச்சல் என்கிற பூதம் ஒன்று கிளம்பி சிலரின் உயிரை பறித்து கொண்டுள்ளது.அரசும் சில நடவடிக்கை எடுத்துக்கொண்டுள்ளன. போதிய அளவில் மருந்துகளை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கையுருப்பு வைத்துள்ளன.டெங்கு காய்ச்சல்களில் இருந்து நம்மை எப்படி பாதுகாப்பது என்றும்  அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றும்  நடிகர்களை வைத்தும் பிரச்சாரம் செய்து அதனை திரை அரங்குகளிலும் , தொலைகாட்சிகளிலும் ஒளி பரப்பி வருகின்றனர். உண்மையில் பாராட்டப் பட வேண்டிய விஷயம் இது.இது ஒரு புறம் இருக்க மதுரை மாநகராட்சி ஒரு சுற்றறிக்கை நகர் முழுவதும் கொடுத்து வருகின்றனர். எல்லோருக்கும் சேர வேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை தருகிறேன்.


அதற்க்கு முன் ஒரு விஷயம் .என்ன தான் வெளியே போவதற்கு வெஸ்டர்ன் டோஇலேட் இருந்தாலும் நம்ம மக்கள் அந்த கடமையை செய்வதற்கு வெளியே தான் போகிறார்கள் . மாற்றி கொள்வார்கள் என்று நம்புவோம்.

இனி அதன் சாராம்சம்


நமது நாட்டில் நீர் தொடர்பான நோய்களால் ஒவ்வொரு பதினைந்து வினாடிக்கு ஒரு குழந்தை இறக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 3.77 கோடி பேர் நீரால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 58 விழுக்காடு பேர் திறந்த வெளியில் மலம் கழிகின்றனர்

 திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏரி , குளம் , சாலை ஓரம் , கண்மாய் , வயல் வெளிகள் சீர்கேடு அடைகின்றனர்.

 இருட்டும் வரை காத்திருந்து இயற்கை கடன்களை களிக்க செல்லும் பெண்கள் மலச்சிக்கல் உடல் குறைவு ,பாலியல் தொந்தரவு , விசக்கடிகள் , எதிர்பாராத விபத்துகள் உளநல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு இடர்களுக்கு ஆளாகின்றனர்.

ஒரு கிராம் மலத்தில் 1 கோடி வைரஸ் கிருமிகள் ,10 லட்சம் பாக்டீரியா , 1000 ஒட்டுண்ணிகள் , 100 ஒட்டுண்ணி முட்டைகள் உள்ளன.

மனித கழிவுகளின் கிருமிகள் சுத்தமற்ற நம் கைகள் மூலமும், ஈக்கள் ,நீர் வாயிலாகவும் வாய் வழியாக நம் உடலுக்கு பரவுகின்றன.இதனால் மலேரியா படை, சொறி , சிரங்கு , வய்ற்றுப்போக்கு , இளம்பிள்ளை வாதம் , தொழு நோய் , டைபாடு உருவாகும்.

மனித கழிவு , செடியுலுள்ள காய்கறி , பழங்களில் ஒட்டி அதை கழுவாமல் சாப்பிடும் போது  கிருமிகள் நம் உடலுக்குள் செல்கின்றன.

 செருப்பு அணியாத கால்களால் நடக்கும் போது நம் பாதங்களில் ஓட்டும் மலம் வாயிலாக கொக்கிப் புழு தொற்று உடம்புக்குள் செல்கிறது . இதனால் ரத்த  சோகை ஏற்படுகிறது.


அதனால் நாம் மறக்காமல் செய்ய வேண்டியது


திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டி முறையாக பயன் படுத்த வேண்டும்.

சொந்த கழிப்பறை இல்லாதவர்கள் பொது கழிப்பறையை பயன் படுத்துதல் வேண்டும் . அதனை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.


மலம் கழித்தப் பின்பு கை , கால் , முகத்தினை சோப் போட்டு கழுவ வேண்டும்.


மழை  நீர் வாய்காலில் மலம் , சலம் கழிக்காமலும் , கழிவு நீர், கழிவு நேர் கலக்காமலும் பாதுகாப்போம்.

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பெருகுவதை தடுக்க கண்ட இடங்களில் மழைநீர் மற்றும் தண்ணீர் தேங்கமால் பார்த்துக் கொள்வோம்.


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா




Thursday 18 October 2012

அ தி மு க வில் வையாபுரி - என்ன கொடுமை வடிவேலு இது

வணக்கம்


                அம்மா ஆட்சிக்கு வந்து பல சாதனைகள் செய்தார்களோ இல்லையோ  ( என்னது ஒரு சாதனை கூட கிடையாதா ) சரி சரி அத விட்டுட்டு விசயத்திற்கு வருவோம் .


அ தி மு க வின் 41 வது ஆண்டு கொண்டாட்டமாக மதுரையில் கட்சியினர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்பதை போஸ்டர்களிலும் பிளக்ஸ்சிலும் காண முடிகிறது . அதில் ஒரு பகுதியில் சிறப்பு பேச்சாளராக நகைச்சுவை நடிகர் திரு .வையாபுரி சிறப்புரை ஆற்றுவார் என்று போஸ்டர். எனக்கு தூக்கி வாரி போட்டாது எப்போதும் போல் . 


 ஒவ்வொரு நடிகருக்கும் எதாவது ஒரு சில படங்கள் அந்த நடிகர்களை , நடிகைகளை நினைவு படுத்தும்.( பிரபல நடிகர்கள் நம்மளை தான் படுத்துகிறார்கள் என்பது வேறு ) அப்படி வையாபுரி நடித்த படங்களில் டும்,டும்,டும் படம் நிச்சயம் அவருக்கு பெருமை சேர்க்கும் படம் தான். வேறு படம் தேடி பார்த்தாலும் கிடைக்க மறுக்கிறது. 


நடிப்பில் தான் அவரை தொட முடியவில்லை அரசியலில் ஒரு கை பார்க்கலாம் என்று கழகத்தில் இணைந்தாரோ என்னவோ. அல்லது வடிவேலுக்கு ஒரு மாற்று வேண்டும் என்று அவரை போலவே இருக்கும் (கவனிக்க உருவத்தில் ) அவரை பிடிச்சு போடுங்க என்று கட்டளை வந்தது போலும். 

இவர் எப்போது இந்த கட்சியில் இணைந்து பணியாற்றினார் என்பது தெரியவில்லை என்பது பொது அறிவு சம்மந்தம் உள்ள விஷயம். அது எனக்கு கொஞ்சம் குறைவு தான். உறுத்தும் விஷயம் இவரை எப்படி பேச்சாளர் என்று அழைக்கிறார்கள் என்பது தெரியவில்லை . ராமராஜன் அவர்களையும் இப்படி தான் அழைத்தார்கள்.


வடிவேலு உண்மையில் எதிலும் வெடிவேலு தான் . நடிப்பிலும் , பேச்சிலும்.பாவம் வையாபுரி எதிலும் தேறமாட்டார்.சரி அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன ? சேர்ந்தது மட்டும் தெரியும் .

இருந்தாலும் நமக்கு கேட்குதில்ல ? 

என்ன கொடுமை வடிவேலு 


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 


Wednesday 17 October 2012

அவனை நிறுத்த சொல் , நான் நிறுத்துறேன் - டாஸ்மாக் வழக்கில் உயர்நீதி மன்றம்

வணக்கம்

பொது நல வழக்காளர் ? திரு .ராமசாமி அவர்கள் சமீபத்தில் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கினை தொடர்ந்திருந்தார் போலும் . அது  செய்தியாக பார்த்த நினைவு இல்லை.ஆனால் அந்த வழக்கின் தீர்ப்பினை செய்திகளில் பார்த்த போது கொஞ்சம் அதிர்ச்சியை இருந்தது..


பொது மக்களின் உயிரை குடிக்கும் மதுவை விற்பனை செய்ய அரசே டாஸ்மாக் என்னும் பெயரில் நடத்தி வருகிறது.இதனை மக்களின் நலன் கருதி தடை செய்ய வேண்டும். பல கட்ட விசாரணைக்குப் ? பிறகு உயர்நீதி மன்றம் டாஸ்மாக் நிறுவனத்தை தடை செய்ய முடியாது என தீர்ப்பு கூறியது.


அதாவது அரசின் கொள்கைப் படி அரசில் பணிபுரிபவர்கள் மதுவை அருந்தவே கூடாது என விதிகள் உள்ளன.( அப்படி எல்லாம் இருக்குமா ) அவற்றை பின்பற்ற முயன்றால் நிர்வாகம் நடத்த முடியாது எனவும் அதே நேரத்தில் மனுதாரர் மதுவினால் பலரின் உயிர் பறிபோகிறது என கூறுகிறார். மதுவினால் உயிர் இழப்பதை காட்டிலும் சாலை விபத்தில் அதிகமானோர் இறப்பதால் அதன் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறுகிறது.


நீதி மன்றத்திற்கு தெரிந்தது இது தான் போலும்.- மதுவின் தீமை குறித்து.





இந்த வழக்கினை ஒரு சின்ன கவுண்டர் அல்லது ஒரு நாட்டாமை போன்றவர்கள் நீதி வழங்கி இருந்தால் ஏதாவது ஒரு நல்லது நடந்து இருக்கலாம்.




மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா


Saturday 13 October 2012

ஆசைபட்டா அம்மாவை கூட வாங்கலாம் - கரண்டை தான் வாங்க முடியாது

வணக்கம்

ஒரு மிக நீண்ட  இடை வெளியில் மீண்டும் இன்று பதிவிடுகிறேன் . சுமார் முப்பது நாட்கள் ஆகி விட்டது பதிவிட்டு . மறுபடியும் முதல்ல இருந்தா என யாரும் பயப் பட வேண்டாம். இந்த ஒரு வருடம் சில நல்ல பதிவையும் , பல சுமாரான .பதிவையும் , சில மோசமான பதிவையும் பதிவிட்டேன். . வாழ்த்தியவர்களுக்கும், வசைபாடினவர்களுக்கும் என்ன சொல்ல முடியும் , நன்றியை தவிர . நெஞ்சார்ந்த நன்றி .இனி பதிவிற்கு செல்வோம்.

இந்த ஒரு வருடத்தில் நான்கு வேலை மாறிவிட்டேன். எல்லா அலுவலகத்திலும் எனக்கு பதிவிட எங்கும் ஆட்சேபனை ஏற்பட்டது கிடையாது.. இப்போது வேலை பார்க்கும் அலுவலகத்தை தவிர. இடைப்பட்ட நேரத்தில் வெளியில் காசு கொடுத்து பதிவிடும் அளவிற்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது..இப்போ காசு கொடுத்துக் கூட பதிவிட முடியாத நிலை . ( காசு இல்லன்னு சொன்னாலும் ) கரண்டு சுத்தமாய் இல்லை.


ஆசைப்பட்ட   எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் . அம்மாவை வாங்க முடியுமான்னு ஒரு பாட்டு , துட்டு இருந்தா அம்மாவை கூட வாங்கலாம் , கரண்டை வாங்க முடியாதுன்னு இப்போ எழுதியுருப்பாங்க போலும். காலையில் ஆறு மணிக்கு எழுந்திருப்பது என் வழக்கம் . அப்போ இருக்காது.வேலைக்கு போகிற வரை வராது. . அலுவலகம் பத்து  போனா அங்கயும் இருக்காது.. இரண்டு மணிக்கு சாப்பிட வெளியே வந்தா அங்க அப்ப தான் போயுருக்கும் . திருப்பி அலுவலகம் போனா இப்போதான் வந்து போச்சு அப்படின்னு சொல்வாங்க ஒரு வழியா அலுவல் முடிச்சு ஆறு மணிக்கு கிளம்பி வீட்டுக்கு ஏழு மணிவாக்கில் போனா அங்கயும் இப்போ தான் போச்சுன்னு சொல்ல , சரி சனியன் வரும் போது வரட்டும் நம்ம வேலையாவது பார்க்கலாம் அப்படின்னு உட்காரும் போது ஒரு ஒன்பது வாக்கில் வந்துரும் . அப்பாடான்னு சாப்பிட உட்கார்ந்து பத்து நிமிடம் ஆகியுருக்கும் மறுபடியும் போயுரும் , நனைச்ச கையை மறுபடியும் கழுவதற்கு பதிலா சாப்பிட்டு முடிச்சு தூங்க போகும் போது வந்து நிம்மதியை கொடுக்கும்.. நல்லா தூக்கம் வரும் போது மறுபடியும் போயி துக்கம் வந்துரும்.அப்புறம் அப்பப்ப வந்து வந்து போகும் . மறுபடியும் விடியும் மறுபடியும் சனியன் பிடிக்கும்.


எனக்கு என்ன புரியல்லன்னா ஆற்காடு வாங்கின அளவுக்கு நத்தம் அவங்களுக்கு கிடைக்கல . அய்யாவை வாங்கு வாங்குன்னு வாங்கின் மீடியா அம்மாவை ஒண்ணும் செயல்ல .

இந்த பாராவை எழுதின பிறகு யாரும் நான் அய்யா கட்சியை சேர்ந்தவர்னு நினைக்க வேணாம் .


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா