குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday 8 August 2013

இந்தியான்ன செங்கல் - ஆஸ்திரேலியான்ன ஆப்பிள்

வணக்கம்  

ஆன் லைனில் 2 ஆப்பிள் பழங்களை ரூ.73 ஆயிரத்திற்கு வாங்கி ஏமாந்த பெண்!
####################################

நவீன ரக ஆப்பிள் போன்கள் என்று நினைத்து ‘ஆன் லைன்’ மூலம் ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த இளம் பெண்ணை பற்றிய சுவாரஸ்ய செய்திகள் ஆஸ்திரேலிய ஊடகங்களில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றன


ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் 21 வயது இளம்பெண் தனக்கு 2 ஆப்பிள் ரக நவீன கைபேசிகள் தேவை என ‘ஆன் லைன்’ மூலம் விளம்பரம் செய்தார்.சில நாட்களில் அவரை ஆன் லைன் மூலம் தொடர்பு கொண்ட மற்றொரு பெண் தன்னிடம் புத்தம் புதிதாக ’2 ஆப்பிள்கள்’ இருப்பதாகவும் குறைந்த விலைக்கு விற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஒரு நாளில் இருவரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். விளம்பரம் செய்த பெண்ணிடம் ஆயிரத்து 200 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.73 ஆயிரம்) பெற்றுக் கொண்டு 2 புதிய கைபேசி பெட்டிகளை அளித்தார்.மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்த அந்த இளம்பெண் பெட்டிகளை திறந்து பார்த்தபோது ஒவ்வொரு பெட்டியிலும் செக்கச்சிவந்த 2 ஆப்பிள் பழங்கள் இருப்பதை கண்டு திகைப்படைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பிரிஸ்பேன் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். ஆன் லைனில் பொருட்களை வாங்குபவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று குற்ற தடுப்பு காவலர் ஜெஸ் ஹாப்கின் என்பவர் எச்சரித்துள்ளார்.




மீண்டும் சிந்திப்போம் 

அவனி சிவா

Wednesday 7 August 2013

சேரன் - டி , ராஜேந்தர் இருவரும் முதலில் தகப்பனே.

வணக்கம் 

புகழின் விலை சமயத்தில் மிகக் கொடூரமாய் இருக்கிறது.சேரன் எனும் திரைப்பட இயக்குனர் இளைய  சமுதாயத்தினருக்கு காதலை மட்டும் விளக்கி படம் எடுக்கவில்லை.பல நல்ல சமுதாய கருத்தையும், அவலத்தையும் எடுத்து இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்த்தவர் . இன்று அவரின் புகழ் வெளிச்சம் அவரின் கண்களையே பறித்துக் கொண்டிருக்கிறது. இது அவரின் குடும்ப  விசயமாய் இருப்பதால் இதனை பற்றி  ஊடகங்கள் இனி எழுதாமல் இருந்தாலே அவருக்கு வெற்றி தான் .


இது ஒரு பக்கம் இருக்க , சகலகலா வல்லவர் என புகழப்படும் டி .ஆர் . தன்னுடைய மகன் சிம்புவின் காதலை பற்றி கருத்தை பதிவு செய்தார்.அவருக்கும் உள்ளே ஒரு தகப்பன் இருப்பதை வெளிக்கொணர்ந்துள்ளார்.சமீபத்தில் ஆர்யா சூர்யா திரைபடத்தின் பாடல் வெளியிடு நிகழ்ச்சியில் அவரின் ஆதங்கம் தெரிகிறது.


விழாவில் டி.ராஜேந்தர் பேசியதாவது: “என் மகன் யாரைக் காதலித்தாலும் எந்த நடிகையை காதலித்தாலும் நான் மருமகளாக ஏற்பேன் என்று ஒரு பத்திரிகையாளரிடம் சொன்னேன். அவரோ ஒரு குறிப்பிட்ட நடிகையின் பெயரைப் போட்டு அவரை நான் மருமகளாக ஏற்பேன் என்று சொன்னதாக செய்தி வெளியிட்டார். ஆனால் நான் எந்த நடிகையின் பெயரையும் சொல்லவில்லை. 






இப்படித்தான் முன்பு நயன்தாரா என்ற நடிகையையும் என் மகனுடன் சேர்த்து எழுதினார்கள். ஆனால் அந்த நடிகையோ வேறொருவருடன் சேர்ந்து, அவர்களது குடும்பத்தை பிரித்து, இப்போது புதிதாக ஒருவருடன் என இப்படி செல்வதையெல்லாம் நீங்கள் எழுதுவது கிடையாது. ஆனால் என் மகன் சிம்பு அடுத்து ஒரு நடிகையை காதலிக்கிறான் என்று மட்டும் தொடர்ச்சியாக எழுதுறீங்க...உங்களுக்கு ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். நாங்களும் மனுஷங்க தான். அதை மறந்துட்டு இஷ்டத்துக்கு இப்படி எழுதாதீங்க.
கோடிக்கணக்குல பணம் சம்பாதிச்சாலும் இப்போதும் கூட அவன் எங்களை மதிக்கிறான். ஐ.டி கம்பெனியில 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிட்டாலே பசங்க அப்பாவையும், அம்மாவையும் மதிக்காம இருக்கிற இந்த காலத்துல என்னோட பையன் என்னை மதிக்கிறான். அந்தளவுக்கு அவன் ரொம்ப நல்லவன். இதுதான் தமிழ்ப்பண்பாடு அப்படிப்பட்ட ஒரு நல்ல பையன் சிம்பு என்று கண்கலங்கியவாரே உணர்ச்சிவசப்பட்டார் டி.ராஜேந்தர்.


நல்லதே நடக்கட்டும் .


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Saturday 3 August 2013

மது , மருத்துவர் , மனுஷ்யபுத்திரன் மற்றும் மக்கள்

வணக்கம்


மதுக்கடையை மூடுவதைப் பற்றி பலருக்கு பலர் அபிப்பிராயம் இருந்தாலும் , நாட்டுல நடக்கிறதப் பார்த்தா மூடுவதில் சிக்கல் இருப்பது போல் தான் தெரிகிறது. மதுரையில் ஒரு பொண்ணு உண்ணாவிரதம் நேற்று வரை  இருந்தது. அந்தப் போராட்டம் பெரிய அளவில் அளவில் வெற்றி பெறவில்லை. பா ம கா எப்படிப்பட்ட கட்சியாய்  இருந்தாலும் , இரண்டு விசயத்தில் அவர்களின் நிலைப்பாட்டை காப்பாற்றி வருவது மற்ற கட்சியினரும் கவனிக்க வேண்டியது. ( தமிழில் தொலைகாட்சி மற்றும் மதுவுக்கு எதிரான பிரசாரம் ) ஆனால் அவர்களின் கட்சிகள் சார்ந்தவர்களே இதனை பின் பற்றாததால் வெற்றி  அவர்களுக்கு எல்லா இடத்திலும் உண்மையான  வெற்றி கிடைப்பதில் சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது .


அடுத்து எந்த தொலைகாட்சியை பார்த்தாலும் , எந்தப் பொருளாக இருந்தாலும் ( மதுவை பற்றிய ஒரு நேரலையிலும் அவர் ) மனுஷ்யபுத்திரன் உரையாடிக்கொண்டே இருக்கிறார்.அவர் விஷயம் அறிந்தவர் தான் . வெவ்வேறு அறிஞர்கள் கலந்துக்  கொண்டால் சில நல்ல முடிவுகள் கிடைக்குமே .


இந்தப் படத்தை பாருங்கள் .......... மூட விட்ருவாங்க 





பதிவு பா ம க வுக்கு சாதகமா எழுதின மாதிரி தெரிந்தால் ,  கண்டிப்பாய் உங்களுக்கு மருத்துவரை பிடிக்க அதிக வாய்ப்புள்ளது - எனக்கல்ல 


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

Friday 2 August 2013

சுடப்பட்ட பதிவல்ல இது - கூகுள் ஆண்டவருக்கு நன்றி .

வணக்கம் 

ஆடி மாதம் நடக்கும் அம்மன் திருவிழா தமிழ்நாட்டில் அணைத்து இடங்களிலும் அம்சமாய் நடந்துக் கொண்டிருக்கிறது . நான் இருக்கும் அவனியாபுரத்தில் ( மதுரை ) , மந்தை திடலில் ( இப்போது அது தான் அவனியாபுரம் பஸ் ஸ்டான்ட் ) அமைந்திருக்கும் அம்மன் கோவிலில் திருவிழாவின் அட்டகாசம் ஆரம்பித்திருந்தது.


இன்று காலை வழக்கம் போல் வீட்டிலுருந்து அலுவலகம் கிளம்பினேன்.பஸ் ஸ்டான்ட் தாண்டி வரும் போது , ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.ஒளவையார் 1 லிருந்து 10 வரை வரிசைப்படுத்தி முருகனை பற்றி பாடிகொண்டிருந்தார் . எப்போதும் போல் கேட்டு விட்டு மறந்து போய் விடுவது வழக்கமாகி இருந்தது.இன்று அப்படி  நடக்க வில்லை . காலையில் என்னுடைய குழந்தை ( மேடம் இப்போ LKG ) ஆத்திச்சுடி சொல்லிகொண்டிருந்தது. அறஞ்செய விரும்பு  முதல் அஃகஞ் சுருக்கேல்.வரை படித்துகொண்டிருந்தார். தொடர்ச்சியாய் ஒளவையார்  எனக்குள் தொடர்ந்தார்.நமக்கும் அதுக்குப் பிறகு எதுவும் தெரியவில்லை . சரி ஆத்திச்சுடி 108 அனைத்தும் இன்று பதிவாக போடலாம் என்று நினைத்து கூகுள் ஆண்டவரிடம் தேடச்சொன்னேன் . அவரும் எப்போதும் போல் வினாடிகளில் லட்சக்கணக்கில் விடைகளை அளித்தார்.


என்ன ஒரு ஆச்சரியம் ஒரு தளம் என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரு நல்ல பதிவை நாம போடலாம்னு நெனைச்சது எவ்வளவு பெரிய குத்தம்னு தோணிச்சு .( நீ எல்லாம் போடறது நல்ல பதிவு ? - உங்க மைண்ட் வாய்ஸ் ) 2008 ல் இரண்டு பேரின் பங்களிப்பில் ஒரு  வலைப்பதிவு இருக்கிறது . தமிழன் ஆச்சரிய ப்படும் அளவிற்கு  தமிழ் பற்றியும் , தமிழின் எழுத்தைப் பற்றியும் பல தொகுப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.2010 க்கு பிறகு தொடர்வது இல்லை என நினைக்கிறேன்.தல முகவரி  தளம் தான்  http://tamiltechy.blogspot.in  
 
படித்துப் பாருங்கள் பரவசம் அடையலாம் .

தல  அஜித் இப்போ விரும்பி படிக்கும் நூல் இந்த ஆத்திச்சுடி தானாம் .



ஆத்திச்சுடி மொத்தம் 108:- படிச்சு வசிக்கிறது நல்லது .

1. அறஞ்செய விரும்பு.

2. ஆறுவது சினம்.

3. இயல்வது கரவேல்.

4. ஈவது விலக்கேல்.

5. உடையது விளம்பேல்.

6. ஊக்கமது கைவிடேல்.

7. எண்ணெழுத் திகழேல்.

8. ஏற்ப திகழ்ச்சி.

9. ஐய மிட்டுண்.

10. ஒப்புர வொழுகு.

11. ஓதுவ தொழியேல்

12. ஒளவியம் பேசேல்.

13. அஃகஞ் சுருக்கேல்.

14. கண்டொன்று சொல்லேல்.

15. ஙப்போல் வளை.

16. சனிநீ ராடு.

17. ஞயம்பட வுரை.

18. இடம்பட வீடெடேல்.

19. இணக்கமறிந் திணங்கு.

20. தந்தைதாய்ப் பேண்.

21. நன்றி மறவேல்.

22. பருவத்தே பயிர்செய்.

23. மண்பறித் துண்ணேல்.

24. இயல்பலா தனசெயேல்.

25. அரவ மாட்டேல்.

26. இலவம்பஞ்சிற் றுயில்.

27. வஞ்சகம் பேசேல்.

28. அழகலா தனசெயேல்.

29. இளமையிற் கல்.

30. அறனை மறவேல்.

31. அனந்த லாடேல்.

32. கடிவது மற.

33. காப்பது விரதம்.

34. கிழமைப் படவாழ்.

35. கீழ்மை யகற்று.

36. குணமது கைவிடேல்.

37. கூடிப் பிரியேல்.

38. கெடுப்ப தொழி.

39. கேள்வி முயல்.

40. கைவினை கரவேல்.

41. கொள்ளை விரும்பேல்.

42. கோதாட் டொழி.

43. கௌவை அகற்று.

44. சான்றோ ரினத்திரு.

45. சித்திரம் பேசேல்.

46. சீர்மை மறவேல்.

47. சுளிக்கச் சொல்லேல்.

48. சூது விரும்பேல்.

49. செய்வன திருந்தச்செய்.

50. சேரிடமறிந்து சேர்.

51. சையெனத் திரியேல்.

52. சொற்சோர்வு படேல்.

53. சோம்பித் திரியேல்.

54. தக்கோ னெனத்திரி.

55. தானமது விரும்பு.

56. திருமாலுக் கடிமைசெய்.

57. தீவினை யகற்று.

58. துன்பத்திற் கிடங்கொடேல்.

59. தூக்கி வினைசெய்.

60. தெய்வ மிகழேல்.

61. தேசத்தோ டொத்துவாழ்.

62. தையல்சொல் கேளேல்.

63. தொன்மை மறவேல்.

64. தோற்பன தொடரேல்.

65. நன்மை கடைப்பிடி.

66. நாடொப் பனசெய்.

67. நிலையிற் பிரியேல்.

68. நீர்விளை யாடேல்.

69. நுண்மை நுகரேல்.

70. நூல்பல கல்.

71. நெற்பயிர் விளை.

72. நேர்பட வொழுகு.

73. நைவினை நணுகேல்.

74. நொய்ய வுரையேல்.

75. நோய்க்கிடங் கொடேல்.

76. பழிப்பன பகரேல்.

77. பாம்பொடு பழகேல்.

78. பிழைபடச் சொல்லேல்.

79. பீடு பெறநில்.

80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.

81. பூமி திருத்தியுண்.

82. பெரியாரைத் துணைக்கொள்.

83. பேதைமை யகற்று.

84. பையலோ டிணங்கேல்.

85. பொருடனைப் போற்றிவாழ்.

86. போர்த்தொழில் புரியேல்.

87. மனந்தடு மாறேல்.

88. மாற்றானுக் கிடங்கொடேல்.

89. மிகைபடச் சொல்லேல்.

90. மீதூண் விரும்பேல்.

91. முனைமுகத்து நில்லேல்.

92. மூர்க்கரோ டிணங்கேல்.

93. மெல்லினல்லாள் தோள்சேர்.

94. மேன்மக்கள் சொற்கேள்.

95. மைவிழியார் மனையகல்.

96. மொழிவ தறமொழி.

97. மோகத்தை முனி.

98. வல்லமை பேசேல்.

99. வாதுமுற் கூறேல்.

100. வித்தை விரும்பு.

101. வீடு பெறநில்.

102. உத்தம னாயிரு.

103. ஊருடன் கூடிவாழ்.

104. வெட்டெனப் பேசேல்.

105. வேண்டி வினைசெயேல்.

106. வைகறைத் துயிலெழு.

107. ஒன்னாரைத் தேறேல்.

108. ஓரஞ் சொல்லேல்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Thursday 1 August 2013

ஆத்தா , நானும் பிரபல பதிவர் ஆயிட்டேன் - தொடர்பதிவு 0

வணக்கம்


எல்லா பதிவர்களை போல் தொடர் பதிவு எழுத எனக்கும் ஆசை தான் ஒரு காலத்தில்.நான் எழுதுற பல பதிவை சமயத்தில் திரட்டிகளில் கூட இணைக்காமல் இருந்தன  . சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் விடாமல் முயற்சித்தேன். இப்போது அந்த பிரச்னை இல்லை. இருக்கிற பதிவர்கள் எல்லாம் கணினியின் முதல் அனுபவம் என்கிற தொடர் பதிவை எழுத நினைத்து கண்ணியின் முதல் அனுபவத்தையும் சேர்த்தே எழுதுகின்றனர்.அந்தப் பதிவை எல்லாம் பார்க்கும் போது , சரி நாமளும் எழுதலாம் போல என நினைத்துக் கொண்டேன் . நம்ம போடற பதிவை படிக்க வரதே கஷ்டமா இருக்கிற நிலைமையில் ,நண்பர் ஜோக்காளி http://jokkaali.blogspot.com  அழைத்தார்.  .பதிவர் சந்திப்புக்கு போறதுக்குள்ள நம்மளையும் அழைத்து பெருமை படுத்திய அவருக்கு நன்றி ,நன்றி


அவருக்கு தெரியுமோ ? தெரியாதோ ? நமக்கும் கணினுக்கும் பல கிலோ மீட்டர் இருக்கும் .ஆனாலும் நமக்கு இருக்கிற அனுபவத்தையும் எழுதிதான் ஆகணும் . அதையும் நீங்க படிச்சுத் தான் ஆகணும் .


நமக்கும் கணினி வந்த புதுசல இருந்து , இப்போ வரைக்கும் அது சம்மந்தப் பட்ட ஒரு படிப்பையும் படிக்கல்ல.எல்லாம் நண்பர்களிடம் கேட்டு , பார்த்துப் பழகியது.அலுவலகத்திலும் அப்போ நம்மளை நம்பி , ஒரு லெட்டரை அடிக்கவும் குடுக்க மாட்டாங்க , இப்போ அப்படி இல்லை , தடவி , தடவி, பழகி பழகி ( கவனிக்க கணினி )  ஒரு  வழியா பதிவு போடற வரைக்கும் வந்தாச்சு.


இப்போ அனுபவம் 


அநேகரை போல நானும் முதல்ல பலான படத்தயும் , பாடத்தையும் தான் பார்த்தேன்.நண்பனின் அலுவலகம் ஒன்று இருந்தது .( நண்பனா அவன் , மஜா கதைன்னு ஒரு தளம் இருக்குன்னு , என்னோட தாளத்தையும் மாத்தினான்.) அவன் இல்லாத நேரத்தில் , எனக்கு தெரியாமலே திரட்டியின் பக்கம் கவனம் சென்றது.அப்போ இந்த தமிழ்மணத்தை காட்டிலும் , சங்கமம் என்கிற திரட்டி தான் பல பதிவுகளை திரட்டி தரும் . ( இப்போ என்னாச்சு )

ஒரு மாதிரியா போற மாதிரி இருக்கா . விடுங்க தொடர் பதிவு 0 ன்னு போட்டாதால்   இப்படி .தொடர் பதிவு 1 அப்படின்னு ,  அடுத்தப்  பதிவில்  அசத்திரலாம் . 



மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா