சொல்லை ஆள்பவன் ,எழுத்தை ஆள்பவன் எழுத்தாளான் ஆகிறான் ".எல்லா சொல்லும் பொருள் குறிப்பிடுவனவே " என்பது தொல்காப்பியம் . சொல் சுடும் ,சொல் எறிக்கும், சொல் கொல்லும்.சொல் எல்லாம் செய்யும்.
தமிழில் எந்த வகை எழுத்து ஆனாலும் ,கதை,கவிதை,கட்டுரை,வரலாறு,சமூகம்,இவை தவிர வேறு பல தளங்களில் இருந்தாலும் தமிழில் வெளி வந்த , வெளி வர போகின்ற எந்த வகை இலக்கியம் ஆனாலும் எல்லா காலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். இந்த பதிவு பல எழுத்தாளர்களின் படைப்புக்களை ,நான் மற்றும் பலரும் விரும்பி படித்த அல்லது வாழ்ந்த படைப்புகளின் தொகுப்பாக செய்யலாம் என விரும்பியுள்ளேன். அதற்கு கூட்டஞ்சோறு என தலைப்பிட்டு பதிவு போடலாம் என நினைத்தபோது ,ஒரு சின்ன கதை நினைவிற்கு வந்தது .அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
உலக நாடுகளை எல்லாம் சுற்றி பார்த்து வந்தார் ஒரு அன்பர். சுற்றி பார்த்த பிறகு வந்ததால் அவர் சொன்னார்.அய்யா பிரான்சு,ரஷ்யா,ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடைதெருவுகளில் நடக்கிறப்போ ,அந்தந்த நாட்டின் தெரிகிறது.அனால் தமிழ் நாட்டின் கடைதெருவில் நடக்கும்போது தமிழ் நாடு தெரியவில்லை ,இங்கிலாந்து தான் தெரியுது என்றார்.
ஏன் அப்படி
எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆங்கிலத்தில் தானே பெயர் பலகை கண்ணில் படுத்து, தமிழில் யாரும் எழுதிவைக்கவில்லையே ,என தலை குனிந்தவாறு சொன்னார்.
அய்யா குனியதீர் ,நிமிரும்
இன்னொரு நண்பர் சொன்னார்,அமெரிக்காபோயிருந்தேன் ,நயாகரா நீர் வீழ்ச்சிக்கு போய் பார்த்தேன்.அங்கே முகப்பிலே நல்வரவு என எழுதியுருந்தது.இங்கே ஏன் இப்படி தமிழில் எழுதி உள்ளீர்கள் என கேட்டேன் " உலகத்தின் மூத்த மொழி தமிழ், உலகத்தில் உயர்ந்த மொழி தமிழ்,உலகத்தின் உயர்ந்த நீர் வீழ்ச்சி அதனாலே "
ஜப்பானிய பல்கலைகவாயில் முகப்பில் " யாதும் ஊரே ,யாவரும் கேளிர் "என்கிற சங்கத்தமிழ் பாடல் வரியை மொழிபெயர்த்து எழுதி வைத்துள்ளர்கள்.
ஜெருசலம் நகரில் உள்ள ஒரு மலையில் யோசு கோவில் ஒன்றில் ,யோசு கற்பித்த வழிபாட்டின் கருத்து உலகினிலே உள்ள 68 மொழிகளில் எழுதி உள்ளனர்.அதில் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே.
திருக்குறள் படித்த பிறகு நான் தமிழனவே பிறக்க விரும்புகிறேன் - காந்தி
தமிழ் - உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி.தோன்றிய இடம் குமரி. அங்கிருந்து தான் பல நாடுகளுக்கும் குடியேறின.ஆங்கில புலமையாளர் g .u .போப் இப்படி கூறுகிறார்.
மங்கோலிய சீன மொழிக்கும் ஒற்றுமை உண்டு.ஈரோப்பிய மொழிகளுக்கும் தமிழ் மொழிக்கும் நெருக்கம் உண்டு
இப்படி பல உண்மைகள் ( கூறியவை சில பதமே ) இருப்பதால் ,தமிழை தாய் மொழியாக கொண்ட நானும் கர்வத்துடன்,பெருமையுடன்,இந்தப் பதிவை தொடரலாம் என எண்ணுகிறேன்
தாங்கள் படித்ததையும் என்னிடம் பகிர்ந்து கொண்டால் அதை நான் பல பேரிடம் பகிர்வேன்.
உண்மையுடன்
அவனிசிவா
அருமையான பதிவு
ReplyDelete//அய்யா பிரான்சு,ரஷ்யா,ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடைதெருவுகளில் நடக்கிறப்போ ,அந்தந்த நாட்டின் தெரிகிறது.அனால் தமிழ் நாட்டின் கடைதெருவில் நடக்கும்போது தமிழ் நாடு தெரியவில்லை ,இங்கிலாந்து தான் தெரியுது என்றார்.//
இந்த நிலை மாற வேண்டும் நண்பரே
பகிர்வுக்கு நன்றி
அன்பரே கொஞ்சம் எழுத்துகளை ஓட்டு பட்டை வரை இறக்குங்கள் இடையில் நிறைய இடைவேளி இருக்கு
ReplyDeleteகருத்துக்கு நன்றி ,திருத்தி கொள்கிறேன் நண்பரே
ReplyDelete"கூட்டாஞ்சோறு" சாப்பிட நான் ரெடி.
ReplyDelete