குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 12 December 2011

ரஜினியின் பஞ்ச் தந்திரம்



வணக்கம் 


பஞ்ச் டயலாக் என்றாலே ரஜினிகாந்த் அவர்கள் தான் நம் நினைவிற்கு வருவார்.( இப்போ பாதி படம் முடிஞ்ச வருங்கால முதல்வர்கள் எல்லாம் பேச ஆரம்பிக்கிறாங்க ) அவர் படத்தில் உபயோகப்படுத்திய பல பஞ்ச் டயலாக் பற்றி ,பாலசுப்ரமணியம்,மற்றும் கிருஷ்ண மூர்த்தி ( நடிகர் கிட்டி ) இருவரும் இணைந்து ஒரு புத்தகம் எழுதி இருக்காங்க.அந்த புத்தகம் ஏதோ ரஜினிகாந்த் பற்றி புகழ் படும் புத்தகமாக இல்லை .அவர் இதழில் இருந்து நம் செவிக்கு வந்த பல பஞ்ச் டயலாகினை எவ்வாறு நம் வாழ்க்கைக்கும்,தொழிலுக்கும் பொருத்திக் கொள்ளலாம் என்று உதாரணங்களுடன் எழுதி உள்ளனர்.மிக சிறப்பாகவும் உள்ளது. .அவர்களின் பார்வையில் பஞ்ச் டயலாக் மேலும் புத்துணர்ச்சி அடைகிறது.எப்படி எழுதி உள்ளனர் என்பதை புத்தகம் வாங்கி படியுங்கள் .( காபி ரைட் பிரச்சினை ) ஆனால் எந்தெந்த பஞ்ச் டயலாக் என்பதை மட்டும் இங்கு குறிப்பிடிகிறேன். ( டயலாக் எல்லாம் சினிமாவில் வந்ததாலும்,படிக்கும்  ஆர்வத்தை தூண்டும் என்பதாலும் ) மொத்த பஞ்சையும் பாருங்கள் .சும்மா அதிருமில்ல.





1 . என் வழி தனி வழி 

2 . நான் ஒரு தடவை சொன்னா ,நூறு தடவை சொன்ன மாதிரி 

3 . பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல 

4 . நான் சொல்றதையும் செய்வேன்,சொல்லாததையும் செய்வேன்

5 .நான் யோசிக்காம பேச மாட்டேன்,பேசின பிறகு யோசிக்க மாட்டேன்

6 . நான் எப்போ வருவேன்,எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது,ஆனா   
     வர வேண்டிய நேரத்தில கரைட்டா வருவேன்.

7 . நீங்க சட்டப்படி தர்மம் பண்ணும்னு சொல்றிங்க ,நான் தர்மம் பன்றதையே 
     சட்டமா வெச்சுருக்கேன்.

8 . நான் தட்டி கேட்பேன், ஆனா கொட்டி கொடுப்பேன்

9 . கதம் ...கதம் ... முடிஞ்சது முடிஞ்சு போச்சு 

10 கையளவு காசு இருந்தா அது நம்மளை காப்பாத்தும் ,
     அதுவே கழுத்து வரை இருந்தா
     அதை நாம காப்பாத்தனும் 


11 பொன் ,பெண், புகழ் பின்னாடி ஆம்பளை போககூடாது
      ஆம்பளைங்க பின்னாடி இதெல்லாம் வரணும்

12 ஆண்டவன் சொல்றான் ,அருணாசலம் செய்றான் 


13 இந்த உலகத்துல எது எடுத்தாலும்
     ஒன்னை விட ஒன்னு பெட்டராதான் தெரியும் 


14 சொல்றததை தான் செய்வேன்,செய்றததை தான் சொல்வேன்

15 நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ,கை விட மாட்டான் 
     கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பன் ,ஆனா கை விட்ருவான்


16 பார்த்து வேலை செய்யுங்க ,பார்க்கும் போது வேலை செய்யாதிங்க


17 பன்னிங்க தான் கூட்டமா வரும் ,சிங்கம் சிங்கிளா தான் வரும் 


18 அசந்த அடிக்கிறது உங்க பாலிசி ,அசராம அடிக்கிறது பாபா பாலிசி 


19 கெட்டுப் போனவன் வாழலாம்,ஆனா நல்ல வாழ்ந்தவன் கெட்டு 
போயிடக்கூடாது
 
20 நம்ம வாழ்க்கை நம்ம கையில் தான் இருக்கு 


21 சொல்றான் ,செஞ்சிட்டான்


22 நாங்க கொடுத்த வாக்கையும் ,கொடுத்த பொருளையும்
     திருப்பி வாங்கறதே இல்லை 


23 கஷ்டப் படமா எதுவும் கிடைக்காது ,
     கஷ்டப்படமா கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது


24 பாபா கவுண்டிங் ஸ்டார்ட் 1 .. 2 .. 3 ...

25 சாகிற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும் 


26 கிடைக்கிறது கிடைக்கம இருக்காது      கிடைக்காம இருக்கிறது கிடைக்காது


27 வாழ்கையில் பயம் இருக்கலாம் 
     ஆனா பயமே வாழ்க்கையகிடக் கூடாது 


28 இது எப்படி இருக்கு 


29 நாம நம்மளை கவனிசுகிட்டா தான்
     ஆண்டவன் நம்மளை கவனிப்பான் 

30 நான் யானை இல்லை ...குதிரை
     கீழே விழுந்த உடனே டக்குனு எழுந்திப்பேன்.











   வரட்டா,


   உண்மையுடன்

   அவனி சிவா


 டிஸ்கி - இரு எழுத்தாளர்களும் மனித வள மேம்பாட்டுத்துறையில் பணிபுரிபவர்கள்.


  பின் குறிப்பு - இது ஒரு மீள் பதிவு 

1 comment:

  1. சூப்பர் எப்படி சார் ?

    ReplyDelete

கருத்து மேடை