வணக்கம்
நீ ஏழையாக பிறந்தது உன் குற்றமல்ல
நீ ஏழையாக இறப்பது உன் குற்றமே , இப்படி ஒரு முது புது மொழி ஒன்று உண்டு.
எங்கப்பா எனக்கு ஒன்னும் சேர்த்து வைக்கல , அதுனால என்னால எந்த சாதனைகளும் செய்ய முடிய வில்லை. இப்படி நாம் ( நானும் தான் ) அடிக்கடி புலம்பி இருப்போம்.இந்த உலக சாதனையாளர்களின் பக்கங்களை கொஞ்சம் புரட்டிப் பார்த்தல் நமக்கு கண்டிப்பாய் உந்து சக்தியை கொடுக்கும்.
வில்லியம் சேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரிக்கும் பணியினை செய்தவர்.
எடிசன் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஒரு ஏழை
பிராங்க்ளின் தந்தை மெழுகுவர்த்தி வாங்கி விற்பனை செய்த ஒரு வியாபாரி.
பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லர் அவருடைய தந்தை ஒரு சாதாரண கட்டிட தொழிலாளி .
ஆங்கில அகராதியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சன் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த ஒரு புத்தக வியாபாரி .
மொழிகளை தாண்டி உலக மக்களை அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்திய சாப்ளினின் தந்தை வீட்டு வேலையாளாக இருந்தவர்.
இசை என்ற சொல்லிற்கு இளையராஜா என்ற சொல்லாக மாறிய இசைஞானி இளையாராஜாவின் தந்தை ஒரு சாதாரண விவசாயி.
பல சாதனயளர்கள் உலகில் இருந்தாலும் இவர்கள் ஒரு பதமே .
காவல் அதிகாரி திரு .சைலேந்திர பாபு IPS அவர்கள் எழுதிய ஒரு புதிய ஆத்திச்சூடி ஒன்றை நாம் நினைவில் நிறுத்தி கொண்டு நாமும் சாதனை புரிவோம்.
அணுகு முறையில் மாற்றம் கொள் .
ஆசைபடு அத்தனைக்கும்
இயலும் என நம்பு
ஈட்டி போல் விரைக
உன்னால் முடியும்
ஊக்கம் கொள்
எண்ணிச் செய்க
ஏனென கேள்
ஐய்யம் அகற்று
ஒன்றில் திறன் கொள்
ஓம்புக உடலை
ஓ ளவை போல் புகழ் பேரு .
மீண்டும் சிந்திப்போம்
உண்மையுடன்
அவனி சிவா
நல்ல கருத்து!
ReplyDeleteசோமாலியாவில் சொல்லி பாருங்களேன் இந்த கருத்தை..
ReplyDelete