குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 30 April 2012

சூடான சோறு உண்டு ஆனால் சூடு சொரணை கூடாது

வணக்கம் 


அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்




தொழிலாளர் தினம் கொண்டாடப் படும் காரணம் அணைத்து தொழிலாளர்களுக்கும் எட்டு மணி நேர வேலை மட்டுமே செயல் பட வேண்டும் என போராடி பெற்ற தினம்.ஆனால் இன்று 


 எல்லாவிதமான பத்திரிகையிலும் வேலை வாய்ப்பு செய்திகள் தவறாமல் இடம் பெற்று வருகின்றன.மிகப் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஆடை அணிகலன் விற்கும் கடை,தங்க நகை கடை,பெரிய தொழிற்சாலைகள்,பன்னாட்டு நிறுவனங்கள், போன்ற பல வணிக நிறுவனங்கள் , சம்பளம் ,வேலை நேரம் , ஆகியவற்றை கூறுவதில்லை மாறாக ஒன்றே ஒன்றை கூறி வருகின்றனர்.அதாகப் பட்டது 

உணவு,மற்றும் தங்குமிடம் இலவசம் ( வெளியூர் நபர்களுக்கு முன்னிருமை )

இவர்களின் இலக்கு மிகப் பெரிய நகரத்தில் இருப்பவர்கள் அல்ல.உதரணமாக மதுரை என்று எடுத்துக் கொண்டால் நகரத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் , திருமங்கலம்,மேலூர், வாடிப்பட்டி,நகர வாசிகள் , இவர்களுக்கு அடுத்து இந்த நகரை சுற்றி இருக்கும் கிராமத்தில் வசிக்கும் அடிமைகள். 


தமிழ்நாடு எங்கும் தன்னுடைய டிபார்ட்மென்ட் ஸ்டோரை விரிவு படுத்திக் கொண்டிருக்கும் கடையில் நான் ஒரு இரண்டு மாதம் கூட வேலைப் பார்க்க முடியவில்லை.அவர்களை பொறுத்த வரை எந்தவித விருப்பங்களுக்கு இடம் கொடுக்க முடியாது.காலையில் சாப்பிட்டு விட்டு 9 .30  மணிக்கு வந்து விட வேண்டும்.அப்படி வர தவறினால் அன்று விடுப்பு எடுத்ததாய் கணக்கில் எடுத்திக் கொள்ளப் படும்.இரவு எவ்வளவு நேரம் ஆகும் என்பது சத்தியமாய்  முதலாளி தவிர எவருக்கும் தெரியாது.


மாதத்திற்கு இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்..அதுவும் சண்டே அன்று கிடையாது. இப்படி பல சட்ட திட்டங்கள்.இவர்களுக்கு தொழிலாளர் தினம் என்று இருப்பது கிடையாது.இவ்வளவு ஏன் அன்று விடுமுறை கிடையாது .( கேட்டால் OT என்று சொல்வார்கள் )


இவர்களை போன்ற தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்க வேண்டும் என்பது தெரியாது, ஆனால் வேலை வாங்கும் அவர்களுக்கு தெரியும்.இப்படி பல நிலைகளில் உண்டு..





மூன்று வேலை சூடான சோறு போடுவோம்.சூடு சொரணை வந்தால் விளக்கி விடுவார்கள் . நீ இல்லை என்றால் அவன் என மிக நம்பிக்கையோடு கடையை நடத்தி வருகிறார்கள்.


இந்த மாதிரி கடைகளுக்கு எப்படி அங்கீகாரம் தருகிறார்கள் என்றே தெரியவில்லை.காலை முதல் நள்ளிரவு வரை மின்சாரத்தை முறை கேடாக பயன்படுத்தியும்,விடுமுறை விடுவது என்பது கல்லை விட்டு எறிந்தால் தவிர கிடையாது.


இந்த நிலையில் தான் நாம் இன்னும் அடிமைகளை வளர்த்து , முதலாளிகளை மேலும் வளர்த்து விட்டு தொழிலாளர்கள் தினம் கொண்டாடி வருகிறோம்.


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 

Sunday 29 April 2012

BCCI, விளம்பரம் , IPL ,இது போதாது என்று MP சச்சினுக்கு கிடைக்கும் சலுகைகள்

வணக்கம் 


இந்தியாவின் பெரும மிக்க ராஜ்யசபா உறுப்பினர் பதவி சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப் பட இருக்கின்றன.அவரின் சாதனைக்காக வழங்கப் பட இருக்கும் , அதே வேளையில் பல பிள்ளை பூச்சிகள் முளைக்கும்.

இப்போதே மேற்கு வங்காளத்தில் கங்குலிக்கு வழங்க வேண்டும் என கூவ ஆரம்பித்து விட்டனர். இனி உள்ளூர் விளையாட்டில் மட்டும் நன்றாக விளையாடினால் அந்த ஜாதிக்கரார்களும் இனி கூவ ஆரம்பிப்பார்கள்.( அவர்களின் அளவில் ) அது போக அடுத்து பா ஜ க , தோழர்கள் ? ,அல்லது வேறு எவரேனும் ஆட்சி அமைத்தாலும் அவர்களுக்கு பிடித்த ( அப்போது சாதனை கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.) நீ அவருக்கு குடுத்த இல்ல , இப்ப எங்க முறை என்று நடத்த ஆரம்பித்து விடுவார்கள். 


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.சச்சின் எவ்வளவோ புகழ், பணம் , சாதனை அடைந்து விட்டார்.ராஜ்ய சபா உறுப்பினர் ஆனா பிறகு அவருக்கு கிடைக்கும் சலுகைகளை பார்த்தல் நமக்கு கொஞ்சம் எரிச்சல் , பணம் சேரும் இடத்தில தான் சேருமா என்ன? பட்டியலை பாருங்கள் 


ஒரு ராஜ்யசபா உறுப்பினரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆகும். இது போக கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ரூ. 2000 தினசரிப் படி கிடைக்கும்.
 மேலும் பதவிஎந்தவிதக் கட்டணமும் இல்லாமல், வாடகையும் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகளை ராஜ்யசபா எம்.பி பெற முடியும்.யில் இருக்கும்போது வீடு கிடைக்கும்.
வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம், 4000 கிலோ லிட்டர் குடிநீர் ஆகியவை இலவசமாக கிடைக்கும்.
ரூ. 500 மட்டும் கொடுத்தால் போதும் எம்.பிக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் கிடைக்கும்.
ஒவ்வொரு எம்.பிக்கும் மாதா மாதம் ரூ. 45,000 படி வழங்கப்படும். இதில் ரூ. 15,000த்தை புக் வாங்க, தினசரி நாளிதழ்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள ரூ. 30,000 பணத்தை செயலாளர், பி.ஏ. ஆகியோரை வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவர் ஒருமுறை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலே அவர் பென்ஷன் பெறத் தகுதியுடையவர் ஆகிறார். ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ. 20,000 பென்ஷன் கிடைக்கும். இதுவே ஒருவரே ஒருமுறைக்கு மேல் எம்.பியானால், இந்த தொகையுடன் கூடுதலாக ரூ. 1500 கிடைக்கும்.
ஆண்டுக்கு 34 முறை மனைவி அல்லது உறவினருடன் இலவசமாக விமானத்தில் பறக்க சலுகை தரப்படும்.
எம்.பியாக இருப்பவரைப் பார்க்க அவரது மனைவி அல்லது கணவர் வருடத்திற்கு 8 முறை இலவசமாக டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்யலாம்.
ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர்கள், தங்களது ஐடி கார்டை மட்டும் காண்பித்து விட்டு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும், ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பி்ல் பயணிக்க முடியும்.
இப்படி சச்சின் டெண்டுல்கருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கவுள்ளன.


இவற்றை எல்லாம் பெற்ற பிறகு மற்ற உறுப்பினரைப் போல் எதுவும் செய்யாமல் இருப்பாரா ? அல்லது கிரிக்கெட்டில் சாதனை படைதத்துப் போல் அரசியலும் சாதனை செய்வாரா.


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 

 

Friday 27 April 2012

ஒரு மற்றும் ஒரே வார்த்தையில் ராஜா எப்போதும் ராஜா தான்.

வணக்கம்


இந்தப் பதிவு  ( எனக்கு வந்த முகநூல் செய்தி )முழுக்க முழுக்க என்னை போன்ற இசை ( இளைய ராஜா ) ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.இந்த நேரத்தில் ராஜாவைப் பற்றி இசைக் குடிமக்கள் எதுவும் மிகப் பிரமாதமாய் கூற முடியாது.

ஒரு மற்றும் ஒரே வார்த்தையில் ராஜா எப்போதும் ராஜா தான்.

சில்வர் ஜூப்ளி' காணும் இசைஞானியின் 'ஹவ் டூ நேம் இட்'! ஹவ் டூ நேம் இட்... இசைஞானியின் ரசிகர்களின் ரத்தத்தில், சுவாசத்தில் கலந்த இந்தப் பெயரை மறக்க முடியுமா... வெளியாகி, இசை வானில் சிறகடித்து, இன்னிசையால் இதயங்களை நனைய வைத்து, இளக வைத்து, உருக வைத்து, அழ வைத்து 25 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது ஹவ் டூ நேம் இட். 1986ம் ஆண்டு வெளியான ஹவ் டூ நேம் இட் அக்காலத்தில் பெரும் இசை லயிப்பலைகளை ஏற்படுத்திய இசைஞானியின் இசை மழைத் தொகுப்பாகும். அதுவரை திரையிசைப் பாடல்களை மட்டுமே கேட்டு வந்த இந்திய இசை ரசிகர்களின் காதுகளை இளையராஜாவி்ன் இந்த இசை ஆல்பம் புதியதொரு பாணியில் லயிக்க வைத்தது. இந்திய மற்றும் மேற்கத்திய இசைக் கலவையாக அமைந்த ஹவ் டூ நேம் இட் இசை ஆல்பத்தில் இடம் பெற்றிருந்த இரு இசைக் கலவைகளை தியாகையருக்கும், ஜெர்மனி இசை மேதை ஜே.எஸ்.பாக்குக்கும் சமர்ப்பித்திருந்தார் இளையராஜா. இந்திய இசையமைப்பாளர் ஒருவர் வெளியிட்ட முதல் இசை ஆல்பம் என்ற பெருமை ஹவ் டூ நேம் இட்டுக்கு உண்டு. இன்று அந்த இசைத் தொகுப்பு 25 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி சென்னையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், ஏப்ரல் 29ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஹவ் டூ நேம் இட் தொகுப்பில் இடம் பெற்றுள்ளவற்றை அம்பி சுப்பிரமணியமும், ராஜேஷ் வைத்யாவும் நேரடியாக ரசிகர்களுக்கு இசைத்து வழங்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இசைஞானியின் இசைப் படையில் இணைந்துள்ள 40க்கும் மேற்பட்ட இசை வீரர்கள் கலந்து கொண்டு காதுகளுக்கு களிப்பூட்டவுள்ளனர்..!! 


மீண்டும் சிந்திப்போம் 

அவனி சிவா
 

Wednesday 25 April 2012

மதுரை எப்பத் தான் மாறும் .- சில விசயங்களில்

வணக்கம் 


மதுரையில் பிறந்து மதுரையிளையிலே வளர்வது என்ன ஒரு கஷ்டம் என்பது மதுரையில் பிறந்து மதுரையில் வசிப்பவருக்கு மட்டும் தான் தெரியும்.


மதுரையின் பெருமை வரிசையினை எவ்வளவோ சொல்லலாம்.24 மணி நேரமும் ஊர் விழித்திருக்கும் .(  இப்போது கிடையாது ) பொங்கல் வகை வகையாய் கிடைக்கும். இட்லி நான்கு வகை சட்னியுடன் கிடைக்கும்
டீகடைக் காட்டிலும் எல்லா சந்து முக்குகளிலும் ( தெரு முனை ) வடை கடை கண்டிப்பாய் இருக்கும்.


பல திரை அரங்குகள் மூடப் பட்டாலும் இன்றும் சில இடங்களில் மிகப் பழைய திரை படங்கள் திரையிடப் பட்டு பணம் அள்ளப் படுகின்றன,


வணிகமும் ஒரு வகை படுத்தப் பட்டு மிகக் சிறப்பாய் பூகோள ரீதியில் அமைக்கப் பட்டன.மீனாட்சி கோவிலை சுற்றி  , முதல் சுற்று நகை வியாபாரம் என்று தொடர்ந்து அனனைத்து வகை வணிகமும் அந்த கோவிலை சுற்றியே முடிந்து விடும்,சுருக்கமாக இப்போதுள்ள தலை முறையினருக்கு விளங்கும் வகையில் சொன்னால்,காபி தூள் முதல் காண்டம் வரை அனைத்தையும் இந்த பகுதியில் வாங்கி விடலாம்.


அரசியலாலும் மதுரை மிகப் பெரிய பெருமை பெற்றது. இதை விட முக்கியமான வெவகாரம் என்னவென்றால்.


1980 க்கு பிறகு பிறந்த பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.அனைவருக்கும் அல்ல வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பது.


தவக்களை ஆரம்பித்து திமுசுக்கட்டை வரை எவர் நடிக்க வந்தாலும் , அதாவது திரையில் தோன்றினாலும் ரசிகர் மன்றம் அமைப்பது மதுரை மக்கள் இன்றளவும் மாற வில்லை .சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளி வந்து ஓடிக் கொண்டுருக்கும் okok  என்கிற படத்தில் நடித்தப் பிறகு , மதுரையில் பூப்புனித நீராட்டு விழாவிற்கு அழைபிதளிலும், திருமண வரவேற்பிலும் உதய நிதியை மையப் படுத்தி சில சுவரொட்டிகள்.இதெல்லாம் மீறி ஒரு சுவரொட்டியில் நிதியை குறுப்பிட்டு வந்த சேதி " போதி தர்மரே " வருக.


அவரும் மதுரையில் கூறிய செய்தியை பாருங்கள்.அடுத்தப் படம் வெளியானப் பிறகு ரசிகர் மன்றம் அமைப்பது பற்றி முடிவு செயப்படும் மதுரையில் உதய நிதி.


சில விசயங்களில் மதுரை மக்கள் எப்போது மாறுவார்கள் . 

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா.

Tuesday 24 April 2012

சிவா மனசில பாஸ் என்கிற கண்ணாடி

வணக்கம்

பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும் , அகில இந்திய வானொலியில் நானும் இளைய பாரதம் என்கிற நிகழ்ச்சியில் நானும் திரை விமர்சனம் வாசித்தேன்.

அன்று கிழமைகளில் முதல் நாளும் , அதற்கு அடுத்து வியாழன் அன்றும்  ஒலி பரப்பு செய்யும்.ந்த நாட்களில் விமர்சனம் என்பதை பல நேயர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பார்கள்.

நானும் திரைப்படத்தை பார்த்து விமர்சனம் வாசிக்கலாம் என்று யோசித்தால் என்னை விட படம் பார்க்காதவர்கள் மிகச் சரியாக சொல்லுவார்கள்.


அது எப்படி என்று யோசித்து தலை வலி ஒன்றும் வரவில்லை .அன்றைய நாட்களில் வரும் அதனை தினசரிகளிலும் வரும் ஒத்த விசயங்களை ஒன்றுப் படுத்தி அதனையே வாசித்து வந்தார்கள்.


அந்த , தினசரிகளை விடுத்து ,இப்போது இயக்குனர்களே அவர்களுகின்று ஒரு பாதை போட்டுக் கொண்டிரிகின்றனர்.


ராஜேஷ் அவர்களின் அடுத்த படத்துலும் இதனேயே கதைக் காலமாக அல்லது களமாகவும் இருக்கலாம்.



மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா   
  

Monday 23 April 2012

SMS தத்துவங்கள்

வணக்கம் 

நான் ரசித்த சில குறுஞ்செய்தி தத்துவங்கள் , தத்துவத்தையும் தாண்டி யோசிக்க வைக்கின்றன.படித்துப்பாருங்கள்.

முதல் காதலில் வெற்றி பெற்றவனக்கு அது தான் கடைசி வெற்றி.
முதல் காதலில் தோற்றவனக்கு அது தான் கடைசி தோல்வி.


 வாழ்கையில் ரெண்டு விசயத்த எப்பவும் மறக்கக் கூடாது.
1 . விரும்பி எது வந்தாலும் take care 
2 . வலகி எது போனாலும் dont care


காதால் என்பது நடுக்கடல்,அதில் விழுந்து விடாதே,அங்கு அலைகள் கூட இல்லை உன்னை கரை சேர்க்க.


இதயத்தில் எதனை வலி இருந்தாலும் , இனிமையாக பேசுங்கள் , உலகமே உங்களிடம் பேச ஆசைப் படும்.


Everything  is valuable only at 2 times first - before getting it.... second - ofter loosing it..... 


don't wast time by thinking about your past or future, better kill some mosquitoes n that time .so that u can sleep better.


நண்பன் - மச்சி காலேகே முடிஞ்சதும் என்னை மறந்துடுவியா 

நண்பன் 2 - சிரிப்புடன் நான் ஒன்னு உன் லவ்வர் இல்ல.


imagination s more power full than knowledge...because " knowledge is limited " imagination is unlimited. 
 
   
இது  சாம்பிள் தான் , நல்ல இருக்குன்னு சொன்னா நெறைய போடலாம்.


மீண்டும் சிந்திப்போம்
அவன் சிவா
 

Thursday 19 April 2012

18 + மட்டும் அல்ல , எல்லாருக்கும்

வணக்கம்

 ஒரு டீச்சர் பையனிடம் ஒரு கேள்வி கேட்டாங்க.நான் உனக்கு இரண்டு பூனை தரேன்.மறுபடியும் ரெண்டு பூனை தாரேன்,அப்புறமும் ரெண்டு பூனை தரேன் .உன்கிட்ட எத்தனை பூனை இருக்கும் அதுக்கு நம்ம கந்தசாமி பையன் ஏழு அப்படின்னான்.மறுபடியும் கணக்கு கேட்டாங்க.அவனும் மறுபடியும் அதே விடை சொன்னான்.அவங்களுக்கு முடியல்ல 

இப்போ வேற மாதிரி கேட்டாங்க பூனைக்கு பதிலா ஆப்பிள் எத்தனை அப்படின்னு கேட்டாங்க , அவன் ஆறு அப்படின்னான்.இப்போ மறுபடியும் கவுண்டர் மாதிரி மறுபடியும் பூனை எத்தனை அப்படின்னு கேட்டாங்க . கந்தசாமி பையன் ஆச்சே மறுபடியும் ஏழு அப்படின்னான்.


எரிச்சலுடன் எப்படிடா அப்படின்னு கேட்க்க எங்க வீட்ல தான் ஏற்கனவே ஒரு பூனை இருக்கு அதையும் சேர்த்துக்குங்க அப்படின்னான்.

---------------------------------------------------------------------------------------------------------------



ஒரு பையன் தன்னுடைய அம்மாகிட்ட கடவுள் கருப்பா , செவப்பா என்று கேட்டான்.அவரு கருப்பும் இல்ல ,செவப்பும் இல்ல  அப்படின்னாங்க.

அப்போ கடவுள் ஆனா ,பெண்ணா அப்படின்னு கேட்டான் அவரு ஆணும் இல்ல பெண்ணும் இல்ல அப்படின்னாங்க 


பையன் ஒரு முடிவிற்கு வந்தான் கருப்பும் இல்ல ,செவப்பும் இல்ல ஆணும் இல்ல பெண்ணும் இல்ல அப்போ அவரு தான் மைகேல் ஜாக்சன் அப்படின்னு அவனா முடிவு பண்ணிட்டான்.

----------------------------------------------------------------------------------------------------------


இப்போ ஒரு படம் சும்மா 
-------------------------------------------------------------------------------------------------------------


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

Sunday 15 April 2012

கணக்குப் புலி எல்லாம் வாங்க 3 - கணக்கு விளையாட்டுக்கள்.

வணக்கம்


இரண்டு முறை கணக்கு விளையாட்டு பதிவை இட்டதில் நல்ல வரவேற்ப்பு இருக்கவே  மூன்றாவது முறை கணக்கு விளையாட்டு.வாங்க


ஒரு ஊருக்கு ஒரு பெரியவர் ஒருவர் வந்தார்.அவருக்கு பணத்தை இரட்டிப்பாக்கும் தந்திரம் தெரியும் என்று ஊரார் பேசிக் கொண்டார்கள்.அதை கேள்விப் பட்டதும் நம்ம கந்தசாமி அவரிடம் போனான்.பெரியவர் அவரின் என்னத்தை புரிந்து கொண்ட " உண்மை தான் தம்பி .பணத்தை இரட்டிப்பாக்கும் விதை எனக்குத் தெரியும் ,நீ நூறு ருபாய் கொண்டு வந்து இந்த மந்திரப் பெட்டியில் போட்டால் அது  உடனே இரு நூறு ரூபாயாக மாறிவிடும் " என்றார்.


கந்தசாமி தன்னுடைய பணத்தை எடுத்து அதிலிருந்து நூறு ரூபாய் போடப் போனான்.பெரியவர் தடுத்தார்." பொறு கந்தசாமி உன் பணத்தை கண்டிப்பாய் இரு மடங் செய்து தருகிறேன் ,ஆனால் ஒரு நிபந்தனை ஒரு முறை இரட்டிப்பாக 120 ரூபாய் எனக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்றார்.கந்தசாமி ஒப்புக் கொண்டான்.


பெரியவர் மந்திரப் பெட்டியை திறந்தார்.கந்தசாமி தன்னிடமிருந்த பணத்தை எல்லாம் அதில் கொட்டினான்.பெரியவர் கண்களை மூடி எதோ மந்திரம் போட்டார்.பிறகு கண்ணை திறந்தார்.என்னே ஒரு ஆச்சரியம் . கந்தசாமி போட்ட பணம் இரு மடங்கு ஆகயிருந்தது.உடனே கந்தசாமி 120 ரூபாயை எண்ணி எடுத்து அவரின் பாதங்களில் காணிக்கையை வைத்தான்.மீதி பணத்தை எடுத்து பையில் போட்டுக் கொண்டான் .

ஆசை விடவில்லை .மீண்டும் மந்திரப் பெட்டியில் தன பணத்தைப் போட்டான்.பெரியவருக்கு மீண்டும் ருபாய் 120  காணிக்கை செலுத்தினான்.

மூன்றாம் முறையும் மந்திரப் பெட்டியில் தன்னிடமிருந்த பணத்தை எல்லாம் போட்டான்.மறு படியும் அந்தப் பணம் இரு மடங்கு ஆனது.வழக்கம் போல் பெரியவருக்கு காணிக்கை வைத்ததும் கந்தசாமி முகம் வாடிப் போனது.மனம் குழம்பியது.கண்களில் நீர் மல்கியது.ஏன் என்றால் , அவன் பையில் ஒரு ருபாய் கூட மீதி இருக்கவில்லை.பாவம் கந்தசாமி

பெரியவர் அவன் மேல் இறக்கம் கொண்டார்." தம்பி உழைத்துப் பிழை .அது தான் பெருமை தரும் வழி. கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு தான் நிற்கும்,அதுவே உனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் " என்று அறிவுரை கூறினார்.


நாள் கதையாய் இருக்கே.அனால் எனக்கு ஒரு சந்தேகம் , கந்தசாமி அந்த பெரியவரிடம் போனப் போது , அவனிடம் இருந்தப் பணம் எவ்வளவு .


எவ்வளவு என்று பின்னூட்டாம் இடலாம் ,அல்லது என்னுடைய மின்னஞ்சலில் cvashree@gmail.com என்கிற முகவரியிலும் பதில் இடுங்கள்.

மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா

Thursday 12 April 2012

ஆயுள் காப்பிட்டு ஆலோசகர்களின் அப்பாடக்கர் ஆலோசனைகள்

வணக்கம் 

ஒரு ஐந்து வருடத்திற்கும் மேல் இருக்கும் . பொதுத்துறை நிறுவனத்திற்கு நிகராக தனியார் நிறுவனமும் ஆயுள் காப்பிட்டு துறையில் நுழைந்தது. போட்டி பலமாகத்தான் இருந்தது.எதில் என்றால் யார் யாருக்கு ஆலோசனை என்ற பெயரில் அவருடைய டவுசரை அவிழ்ப்பது என்பதில்.

வருடத்திற்கு வெறும் பத்து ஆயிரம் ஒரு மூணு வருசத்திற்கு கட்டுங்க.பத்தாவது வருஷம் ஒரு லட்சம் அதுக்கு மேலயும் கிடைக்கும் என்று கூவல்.இதில் தனியாருடன் அரசின் பொதுத் துறை நிறுவனமும் சளைக்காமல் போட்டியிட்டது.இதில் தான் தனியாருடன் அரசின் நிறுவனமும் போட்டியிட்டு அனைவரையும் டவுசரை அவிழ்க்க உதவியது.


அதாகப் பட்டது நாம் கொடுக்கும் பணத்தை நமக்குப் பதிலாக நிறுவனம் பங்குச் சந்தையில் போடும்.அது குட்டிப் போட்டு குட்டி குட்டிப் போட்டு நமக்கு பெருசா கிடக்கும் என்றார்கள்.( பெருசா என்ன கிடைச்சதுன்னு போட்டவங்களை கேட்டுப் பாருங்கள் ) 


நிறுவனம் ஒரு திட்டத்தை போடுகிறது , அதனை மக்களிடம் கொண்டுப் போய் சேர்ப்பது ஆலோசகர்களின் வேலை.அவர்கள் என்ன செய்ய வேண்டும் ,அதில் இருக்கும் உண்மைத் தன்மையினை விலக்கி பிறகு அந்த திட்டத்தில்  சேர்த்துவிட வேண்டும்.நடந்தது என்னவென்றால் ஆலோசகர்கள் எல்லோரும் என்னமோ அவர்களே பங்குச் சந்தையை நடத்துவதுப் போல் , எல்லோரிடமும் உங்கப் பணம் நாற்பது மடங்கு ஆவதற்கு நான் கியாரண்டி என்றாகள்.எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும் தரகிற்கு தான்.என்பது அப்போது பலருக்கு தெரியவில்லை.


சமீபமாக எல்லா ஆயுள் காப்பிடு நிறுவனத்திற்குப் போய் பாருங்கள்.LIC நிறுவனத்தையும் சேர்த்து . பதினைந்து ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை பங்குச்சந்தை பற்றிய எந்தவித விபரம் தெரியாதவர்கள் , தங்களின் பணத்தினை இத்துடன் முடித்துக் கொண்டு எங்களுக்கு சேர வேண்டிய பணத்தினை கேட்க , நிறுவனமும் உங்களின் பணம் இப்போது வெறும் நாற்பது சதமே உள்ளது என்று சொல்ல , பாவம் அவர்கள் அந்த அதிகாரிகளிடம் சண்டையிட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.


இவர்களிடம் பணத்தை வாங்கி இந்த திட்டத்தில் இணையக் காரணமாக இருந்த அரைகுறை அப்பாடக்கர் ஆலோசகர்கள் யாவரும் தொடர்பில் கிடையாது.


Thursday 5 April 2012

பலமான பழ மொழிகள்

வணக்கம்


சரியான பாதையாக இருந்தாலும் ,அங்கேயே உட்கார்ந்து விட்டால் ,நசுக்கப்பட்டுவிடுவோம்.



எல்லோரும் ஒரே திசையில் இழுத்தால் , இந்த உலகம் தலைகீழாக புரண்டு விடும். - 



எதையும் அறியாதாவனக்கு எந்த சந்தேகமும் வராது.  - 



மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்வது நல்ல விசயமாக இருக்கலாம்,ஆனால் மறந்து விடும் ஆற்றல் தான் உயர் பண்பின் அடையாளம்.



பணம், கடல் நீரைப் போன்றது , அதிகமாக குடிக்க குடிக்க தாகம் அதிகரிக்கும்.


மிருகங்களிடம் உள்ள அபாரமான விஷயம்,வளவள பேச்சு இல்லாதுதான்.


நண்பனை ரகசியமாக கண்டனம் செய்யுங்கள்,ஆனால் போற்றும் போது பகிரங்கமாய் புகழ்ந்து பேசுங்கள்.


தனது சுயத்தை ஒருவர் ஏமாற்றுவது தான் , அணைத்து மோசடிகளிலும் மகா மோசமான மோசடி.


நண்பர்கள் தரும் அறிவுரை சரியாக இருந்தாலும்,தவறாக இருந்தாலும் ,குருட்டுத்தனமாய் பின்பற்றக்கூடாது,ஆராய்ந்தே ஏற்றுக் கொள்ள வேண்டும்.      




மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

Monday 2 April 2012

கணக்கு விளையாட்டு -கணக்குபுலி எல்லாம் வாங்க 2

வணக்கம்

மிக நீண்ட நாட்களுக்குபிறகு மீண்டும் இன்று பதிவு இடுகிறேன்.மறுபடியுமா என்று அலற வேண்டாம்.விதி யாரை விட்டது.மேற்கண்ட தலைப்பில் கணித விளையாட்டிற்கு நல்ல வரவேற்பு வந்ததின் விளைவு மீண்டும் கணக்கு விளையாட்டு ( இதுக்கும் வரவேற்பு வருமா ) வந்தாலும் சரி , வராமல் போனாலும் , வாங்க நம்ம கணித விளையாட்டுக்கு போகலாம்.


1 ,கந்தசாமிக்கு நான்கு குழைந்தைகள்,மணி,சீதா, செல்வி,முத்து என்பன அவர்கள் பெயர்கள்.மணி மற்றும் சீதாவின் எடை 25 கிலோ , செல்வி மற்றும் முத்துவின் எடை 50 கிலோ சரியா. ஒரு முறை அவர்கள் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது.ஆழமான ஆறு .எனவே நடந்து போக முடியாது.கரையில் படகு ஒன்று இருந்தது.ஆனால் படகோட்டி கிடையாது . நால்வருக்கும் படகு விட தெரியும்.ஆனால் ஒன்றாகப் போக முடியாது.ஏனெனில் அந்தப் படகு 50 கிலோ எடைக்கு மேல் கொள்ளாது.நால்வரும் எப்படி ஆற்றை கடப்பார்கள் .




 2 , பஞ்சு,பிஞ்சு,அஞ்சு,மஞ்சு நால்வரும் ஒரு நாள் வட்டமான மைதானத்தை சுற்றி நடக்கும் போட்டியில் கலந்துக் கொண்டார்கள்.மைதானத்தின் சுற்றளவு ஒரு மைல்.


மஞ்சு நடக்கும் வேகம் மணிக்கு 5  மைல்
பஞ்சு நடக்கும் வேகம் மணிக்கு  4  மைல்
அஞ்சு நடக்கும் வேகம் மணிக்கு 3  மைல்
பிஞ்சு நடக்கும் வேகம் மணிக்கு 2  மைல்



மாலை நான்கு மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து நால்வரும் புறப்படுகிறார்கள்.நடந்துக் கொண்டே இருக்கிறார்கள் . மீண்டும் அந்த இடத்துக்கு அவர்கள் எப்போது ஒன்றாக வந்து சேர்வார்கள்.


 3 , மூன்று மயிலை மாடுகளும் நான்கு செவலை மாடுகளும் ஐந்து நாட்களில் கறக்கும் பால் - மூன்று செவலை மாடுகளும் ஐந்து மயிலை மாடுகளும் நான்கு நாட்களில் கறக்கும் பாலுக்குச் சமம்.

அதிகம் பால் கறப்பது எது - செவலை மாடா அல்லது மயிலை மாடா 


பதில்களை பின்னூட்டம் இடுங்கள் .அல்லது என்னுடைய  மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்.என்னுடைய மின் அஞ்சல் முகவரி - cvashree@gmail.com    

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா