வணக்கம்
C என்கிற இந்த எழுத்து CRORE என்கிற வார்த்தையில் தான் வருகிறது.
இந்தப் பதிவை முடிந்த வரை இல்லை பொறுமையாகவே படியுங்கள். பொறுமை பற்றி தமிழில் பல வகையான சொற்றொடர்கள் உண்டு.குறிப்பாக திருக்குறளில்
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை"
இகழ்வார்ப் பொறுத்தல் தலை"
"ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்"
பொன்றுந் துணையும் புகழ்"
"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்"
ஆரிருள் உய்த்து விடும்"
இதனை தவிர சொல் வழக்கத்தில் சில சொற்றொடர்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. பொறுமையை சோதிக்காதே என்றும் பொறுமைக்கு ஒரு அளவு இருக்கு என்றும் கோபத்தில் கூட பொறுமை பற்றியே பேசி வருகிறோம் . தலைப்பு ஒன்ன வச்சிக்கிட்டு எங்க பொறுமையை சோதிக்காதே என்று கோவப்படக்கூடாது .
A B C D இந்த நான்கு எழுத்தும் தங்களின் பங்களிப்பினை எப்போது தருகிறது பாருங்கள்.1 முதல் 99 வரை ஆங்கிலத்தில் இந்த எங்களை எழுதும் போது இந்த நான்கு எழுதும் வராது . ஆனாலும் பொறுமை இழக்கவில்லை .
D என்கிற இந்த எழுத்து 100 என்கிற என்னை ஆங்கிலத்தில் எழுதும் போது வருகிறது .HUNDRED
A என்கிற இந்த எழுத்து 1000 என்கிற என்னை ஆங்கிலத்தில் எழுதும் போது வருகிறது. THOUSAND
B என்கிற இந்த எழுத்து BILLION என்கிற வார்த்தையில் தான் வருகிறது.
C என்கிற இந்த எழுத்து CRORE என்கிற வார்த்தையில் தான் வருகிறது.
பொறுமை பற்றி சில
1. இறைவனாகிய சிவபெருமான் பொறுமையையே மலராக ஏற்றுக் கொள்பவனாவான்.
2. அன்பென்னும் விதை முளைத்துப் பயிராகி வளர்வதற்குப் பொறை என்னும் நீரை வற்றாது பாய்ச்ச வேண்டும்.
3. பொறுமையாக இருக்கின்ற இறைவன் நம்மின் தவறுகளைப் பொறுத்துக் கொள்பவன்.
4. உடலிலிருந்து நீங்கிப் பிரிகின்ற காலத்தில் சிறிதும் பொறுமையில்லாமல் சென்றுவிடும்.
5. பொறுமையே வைராக்கியத்தை தந்துதவும் என்பதனை நாவுக்கரசரின் வரலாறு எடுத்துரைக்கின்றது.
2. அன்பென்னும் விதை முளைத்துப் பயிராகி வளர்வதற்குப் பொறை என்னும் நீரை வற்றாது பாய்ச்ச வேண்டும்.
3. பொறுமையாக இருக்கின்ற இறைவன் நம்மின் தவறுகளைப் பொறுத்துக் கொள்பவன்.
4. உடலிலிருந்து நீங்கிப் பிரிகின்ற காலத்தில் சிறிதும் பொறுமையில்லாமல் சென்றுவிடும்.
5. பொறுமையே வைராக்கியத்தை தந்துதவும் என்பதனை நாவுக்கரசரின் வரலாறு எடுத்துரைக்கின்றது.
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா