குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Saturday 29 December 2012

தமிழர்களின் விளையாட்டு எத்தனை என்பது தெரியுமா ?

வணக்கம்


விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்பதும் சில இடங்களில் கால்பந்து கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் காலை இறகுபந்து விளையாடுவதும் அப்படியே இல்லை என்றாலும் கணினியில் செஸ் விளையாடுவதும் இது தான் விளையாட்டு என்றாகி விட்டது . பணம் சம்பாதிக்கவே விளையாட்டு என்றாகி விட்ட நிலையில் தமிழர்களால் விளையாடப்பட்ட பல விளையாட்டுக்கள் இன்று அழிந்து போய் வருகிறது . இதில் பல விளையாட்டுகள் இன்று எவராலும் விளயாடப்படுவதில்லை.சிறுவர் (பையன்கள்) ஆன் ,பெண் என இரு பாலருக்கும் , அணி விளையாட்டு என பல வகை இருந்துள்ளது.நான் படித்து  எனக்கு கிடைத்த அந்த பட்டியலை பதிவாகத் தருகிறேன் . இனி இந்த விளையாட்டை விளையாட ஆசைப் படுவீர்கள்.

வகையாய் பிரிக்கப் பட்டுள்ளது 



சிறுவர் (பையன்கள்)

கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)


 
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்

 
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு

 
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்

1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்

1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு

1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு

1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி
 மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

Friday 28 December 2012

நன்றி யுவகிருஷ்ணா - இசை நம் பொன் வசந்தம்

 வணக்கம்


நீ தான் என்  பொன்வசந்தம் என ராஜாவை பற்றி கூறி என்னைப்ப் போன்றவர்களுக்கு பால் வார்த்த லக்கி லுக் அவர்களுக்கு நன்றி .

கெளதம் மேனன் முதல் முறையாக இசை அரசனுடன் சேர்ந்த போதே இணையத்தில் மறைமுக எதிர்ப்புகள். ஹாரிஸ் , ரஹ்மான் இவர்கள் தான்  சரியான இணை என்பது. கழுதைகளுக்கு தெரியுமா ? கற்பூர வாசனை .மேல குறிப்பட்ட இருவரும் நல்ல ( நல்ல என்றால் என்னவென்று விளங்கிக் கொள்ளவும் )


படம் வெளியான சமயத்தில் இருந்து பத்திரிக்கை , தொலைக்காட்சி , இணையம் இப்படி எந்த ஒரு வடிவத்தில் இருந்தாலும் மறக்கடிக்கப்பட்டது இசை அரசனின் இசை பற்றி .


ராஜாவை புரிந்துக் கொள்ள அவரின் இசையை கேட்டாலே போதும் .அவரைப் புரிந்துக் கொள்ள மட்டும் அல்ல ( புரிந்துக் கொள்ளுங்கள் )


தாமதமாய் எழுதினாலும் எதிர்ப் பார்த்ததை விட சிறப்பாய் எழுதியமைக்கு நன்றி . இதன் தொடர்பை ( லிங்க் ) தருவதைக் காட்டிலும் அவரின் விமர்சனத்தை அப்படியே தருகிறேன் . படித்து மகிழுங்கள் கூடவே அவரின் பதிவிற்கு சென்று பாராட்டுங்கள்.

அந்த விமர்சனம் இதோ





 படம் தந்த கூகுளுக்கும் நன்றி



 யானை விழுந்தால் எழ முடியாது என்பார்கள். ஒருவேளை எழுந்துவிட்டால் முன்பைவிட கம்பீரமாக நடக்கும். நடுநிசிநாய்களில் விழுந்த கவுதம் நீ.எ.பொ.வில், ராஜாவின் தோளில் கைபோட்டு கம்பீரமாக எழுந்து நின்றிருக்கிறார். கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளில் வந்த அத்தனை காதல் படங்களின் உணர்வுகளையும் ஒரே படத்தில் மொத்தமாக கொட்டித் தந்திருக்கிறார். உருகி, மருகி காதலித்த ஒருவராலேயே இம்மாதிரி படமெடுக்க முடியும். கவுதம் நல்ல காதலன். கொஞ்சம் விட்டாலும் ‘குஷி’யாகி விடக்கூடிய ஸ்க்ரிப்ட்டை லாகவமாகக் கையாண்டிருக்கும் கவுதமின் சாமர்த்தியத்தை எப்படி மெச்சுவதென்றே தெரியவில்லை. லைக் யூ கவுதம்.

‘நீதானே என் பொன் வசந்தம்’ உங்களுக்கு பிடிக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட சில தகுதிகளில் ஏதேனும் ஒன்றேனும் இருக்க வேண்டும்.

• நீங்கள் ஆணாக இருக்க வேண்டும். அல்லது பெண்ணாக இருக்க வேண்டும்.

• உங்களுக்கு பார்ப்பதிலோ, கேட்பதிலோ பிரச்சினை இருக்கக்கூடாது.

• குறைந்தபட்சம் ஒரே ஒரு முறையாவது ஒருதலையாகவாவது காதலித்திருக்க வேண்டும்.

• காதலி/காதலன் திருமண ரிசப்ஷனுக்கு தெரியாத்தனமாகப் போய், மனம் நொந்து விடிய விடிய சரக்கடித்து மட்டையாகி இருக்க வேண்டும்.

இதெல்லாம் இல்லாமலேயே கூட பிடிக்கலாம். காதலைப் பிடிக்குமென்றால்...

வருணும், நித்யாவும் மட்டுமே வாழும் ஓர் உலகம். அந்த உலகத்துக்குள் அவர்களுக்கு தெரியாமல் உங்களால் பார்வையாளராக பிரவேசிக்க முடிந்துவிட்டால் போதும். நீ.எ.பொ. ராஜபோதை கொடுக்கும். பின்னணிக்கு ராஜா. போதாதா?

ஐந்தரை நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டாக நீளும் இண்டர்வெல் ப்ளாக் தமிழ் சினிமாவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மகத்தான சாதனைகளில் ஒன்று. இவ்வாண்டின் சிறந்த நடிகை சமந்தா என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஒரே ஷாட் என்றாலும் குளோசப், மிட், லாங் என்று கேமிராமேன் நிகழ்த்தியிருக்கும் மேஜிக்கை உணரமுடியாதவர்கள் சினிமா பார்ப்பதே வீண். 

இசை ஒரு படத்தை எந்தளவுக்கு உச்சத்துக்கு கொண்டுச் செல்லும் என்பதற்கு இப்படம் ஓர் உதாரணம். காதலும், இசையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். இதை உணர்ந்ததால்தான் கவுதம் ராஜாவை தேர்ந்தெடுத்திருக்கிறார். இருபது வருடங்கள் கழித்துக் கேட்டாலும் சிலிர்க்கவைக்ககூடிய இசையை இளையராஜா அள்ளித் தெளித்திருக்கிறார். ராஜா இன்றி இப்படம் சாத்தியமாகியிருக்க வாய்ப்பேயில்லை.

சகலகலா வல்லவன், மன்னன் என்று ஆணாதிக்க மனோபாவமாய் ரசித்து வளர்ந்தவர்களுக்கு நாயகன், நாயகி இருவரையும் ஸ்க்ரிப்ட்டில் பேலன்ஸ் செய்து, கழைக்கூத்தாடியாய் கயிற்றில் நடந்திருக்கும் ‘நீ.எ.பொ.’ மாதிரி சப்ஜெக்டுகளை உடனடியாக ஏற்றுக் கொள்வதில் தயக்கமிருப்பது இயல்புதான். பெண் பார்வையில் காதலை சொன்ன ‘பூ’வுக்கு நேர்ந்த கதிதான் நமக்கு ஏற்கனவே தெரியுமே?

ஆனாலும், ஐஸ்ப்ரேக்கர் என்கிறவகையில் இது முக்கியமான படம். அனுபவ நிகழ்வுகளை அப்பட்டமாக, கொஞ்சம் கூடுதல் புத்திசாலித்தனத்தோடு திரைக்குக் கொண்டுவந்திருக்கும் பரிசோதனை முயற்சி. பின்னால் வருபவர்கள் இதை பின்பற்றி நிச்சயம் சிகரமேறுவார்கள்.

வெர்டிக்ட் : சான்ஸே இல்லை மச்சான். சச் எ வொண்டர்ஃபுல் மூவி...



மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Wednesday 26 December 2012

தமிழ் படிக்க தெரியுமா? எங்க இத .... படிங்க பார்ப்போம்




வணக்கம்


என்னுடைய பள்ளிப் பருவத்தில்  ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படித்த வரை  படிச்சதே அவ்வளவு தான் . ஆசிரியர் பாடம் நடத்தும் போது ஏதாவது ஒரு மாணவனை அந்தப் பாடத்தினை ஒவ்வொரு பத்தியாய் படிக்கச் சொல்லி படம் நடத்துவார் . உங்களுக்கும் தெரிந்து இருக்கும் . என்னுடன் இரண்டு நண்பர்கள் அவர்களுடன் நானும் எந்தப் பாடமானாலும் நாங்களே படிப்போம் .( ஆங்கிலம் தவிர ) மூன்று பேருக்கும் இதை தவிர்த்து ஒரு ஒற்றுமை என்னவென்றால் மூவரின் பெயரும் சிவகுமார் .( மற்ற இருவரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் ) சுயத்தை சொல்லி என்னை நானே பாராட்டிக் கொள்வதைக் காட்டிலும் விசயத்திற்கு வருவோம் .


இந்த பத்தியை நான் படித்தப் போது ஒரே முறை தான் சறுக்கினேன் . நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் உங்களாலும் முடியும் .



உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை.

 முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ளால் பக்டிக முந்தாடில் படியுங்கள்  


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

Monday 24 December 2012

நீரிழிவு இருக்கா? இந்த காய்கறிளை சாப்பிடுங்க...


வணக்கம்


நன்றி - தின இதழ் கண்ணன் மற்றும் தன்னம்பிக்கை நண்பர்கள். படம் மட்டும் நானாக சேர்த்தது , அதற்கும் கூகுளுக்கு நன்றி .


தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம்.

பழங்கள் மற்றும் காய்கறி கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது. உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.

ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த ஒரு உணவை உண்ண வேண்டுமென்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அதிலும் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிச்சயம் இனிப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம், அவற்றிலும் இனிப்புகள் அதிகம் இருக்கும் காய்கறிகளும் உள்ளன.

எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போமா....

பாகற்காய் :
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெந்தயக் கீரை :

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

வெண்டைக்காய் :
 

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சுரைக்காய்:
 
இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.

லெட்யூஸ் (Lettuce) :
இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.

காலிஃப்ளவர்:
 
மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

பூசணிக்காய் :

அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.

பிரெஞ்சு பீன்ஸ்:

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Saturday 22 December 2012

கிட்டிபுல்லு to கிரிகெட் - ஆட்டோகிராப்


வணக்கம்

நீங்களும் இந்த விளையாட்டை விளையாடி இருந்தால் கண்டிப்பாக நீங்கள் 1980க்கு  முன்பு பிறந்திருக்க வாய்ப்பு உண்டு. அதற்க்கு அடுத்த ஆண்டுகளில் நீங்கள் பிறந்து இந்த விளையாட்டை விளையாடிய அனுபவம் இருப்பின் நீங்கள் நகர வாசியாக இருக்க வாய்ப்பு குறைவு.எனக்கு அனுபவம் உண்டு அதனாலேயே நண்பர் எனக்குத் தந்த இந்த செய்தியை பதிவாக தருகிறேன். இந்த ஆட்டோகிராப் பரவசம் தருவதாய் இருக்கும்.

 கிட்டிபுல்லு or கில்லி

இந்த விளையாட்டு எங்கிருந்து தென் இந்தியாவிற்கு வந்தது என்று தெரியவில்லை.
அனால் Lippa (gioco),என்று இத்தாலியில் இந்த விளையாட்டை போல அங்கு ஒரு விளையாட்டு பழக்கத்தில் உள்ளது .


இதற்கு தேவைப்படும் இரண்டு குச்சிகள் (தண்டா,கில்லி),தமிழ் நாட்டிற்கு இது அறிமுகம் தேவை இருக்காது .இதற்கு இவ்வளவு நபர் தான் விளையாட வேண்டும் என்று விதிகளும் கிடையாது
இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவிலும,வடக்கில் பஞ்சாப்,பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்,போன்ற இடங்களில் அதிகம் விளையாடுகிறார்கள். தமிழகத்தில் கிராம புறங்களில் இது தான் தேசிய விளையாட்டு.ஆனால் கிட்டிபுல்லை அடிபடையாக வைத்தே baseball, cricket போன்ற விளையாட்டுகள் வந்திருக்ககூடும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.

நமக்கு தெரியாத செய்தி இதற்கு International championship tournaments நடத்தப்பட்டுள்ளன என்பது.ஐந்து முறை நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி இருக்கின்றன.,மூன்றில் பாகிஸ்தானும் இரண்டு ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமமாக முடிந்துள்ளது.

விதிகள்


ஒரு ஒரு இடங்களில் இந்த விளையாட்டில் விதிகள் திருத்தி விளையாட படுகின்றன.பெரிய செலவு செய்து எதுவும் வாங்க தேவை இல்லை இரண்டு குச்சி செய்தால் இந்த விளையாட்டு ரெடி.அதுவும் சுவாரசியமான விளையாட்டு.

இதன் மற்ற மொழி பெயர்கள்:

கில்லி-தண்டா-தேவநாகரி.
டங்குளி - பங்களாதேஷ்.(பங்களா)
சின்னி-தண்டு-கர்நாடகா.(கன்னடா)
விட்டி-தண்டு-மகாராஷ்டிரா.(மராத்தி)
கிட்டிபுல்லு-தமிழ்.
கூட்டி-பில்லா-ஆந்திரா.(தெலுங்கு)
லப்ப-துக்கி-பஷ்டோ.

விளையாடப்படும் இடங்கள்
 இந்தியா(குறிப்பாக தென் இந்தியா),பாகிஸ்தான்(பஞ்சாப்),இத்தாலி,அமெரிக்கா(பீ-வீ),பிலிப்பைன்ஸ்(சயடோங் )மற்றும் சில ஐரோபிய நாடுகள்.

நம்ம சச்சின் டோனி மாதிரி உள்ள கிட்டிபுல்லு "SUPERSTARS":

இந்தியா



வருன்,அஜய்,ரோகித்மிஸ்ரா(IIT,Bhuvaneshwar,மாணவர்),விஜய் சௌதரி,விவேக் பரன்வல்,உபேந்தர் குமார்,சந்தீப் பிரகாஷ் .
பாகிஸ்தான்


நூர் கான்,அப்துல்ஹமீது, நதீம் ஜமீல்,அஸேம் சித்திகி

மெதுவாக மறந்து வரும் கிரிக்கெட்டிற்கு முன்னோடியான இந்த விளையாட்டை கிராமத்து இளையர்கள் தான் முற்றிலும் அழிந்து விடாமல் ஏதோ விளையாடி வருகிறார்கள்.
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா


Friday 21 December 2012

தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் பிறந்த கதை.. !



'தோணி' திரைப்படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் உரையில் இருந்து...

”1994ல் நான் இசைஞானியிடம் சென்று..

‘சார்..! ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன்..!’

‘எதுக்குய்யா.. ?? பிஸியா நடிச்சிகிட்டு இருக்க..! எதுக்கு இப்போ Produce பண்ணிகிட்டு?

‘இல்ல சார்..! நான் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன்’

‘இப்போதான் பிஸியா இருக்கியே..! இப்போ எதுக்குய்யா?’

‘இல்ல சார்..! சில விஷயங்கள் தோணும்போது பண்ணனும்’..!

‘ஓ! தெளிவா பேசுறதா நெனப்போ ஒனக்கு? சரி என்ன படம்..?’

“சார்..! ஒரு சின்ன கிராமத்துக்கதை.. தெருக்கூத்தை வைத்து… …”

“தெருக்கூத்தா..? என்னய்யா? நான் வேற Journey-ல இருக்கேன்..! ம்ம்ம்..?? சரி..! பார்க்கலாம்’ என்றார். நான் ஏமாற்றம் அடையவில்லை. படப்பிடிப்பிற்குச் சென்றேன். படம் எடுத்தேன். தொகுத்தேன். பின்னணிக்குரல் சேர்த்தேன். பின்னணி ஒலிகள் சேர்த்தேன். ஒரு நாள்..

“சார் நான் படத்தை முடிச்சுட்டேன்..”

“என்ன அதுக்குள்ளேயா?”

‘ஆமா சார்..! நீங்க படம் பார்க்கணும்”

“சரி” என்றவர் படம் பார்த்தார். அந்தப் படம் ‘அவதாரம்’..! படம் முடித்துக் காரில் ஏறி, ‘வீட்டுக்கு வா’ என்றார். எனக்கு ஒரே பயம். பல நூறு படங்களைக் கண்ட ஒரு மாபெரும் கலைஞன் என் படத்தைப் பார்க்கிறான். ஒரு விமர்சனம், ஒரு பாராட்டுதல் இல்லாமல் ‘வீட்டுக்கு வா’ என்றால் என்ன அர்த்தம்? ஒரு வேளைத் திட்டப் போகிறாரோ? என்று பயந்துகொண்டே சென்றேன். அவருடைய வீடு சாத்வீகமாக, ஒரு கோயில் போல இருந்தது.

‘எப்படிய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்க..? நல்லாயிருக்கே..! சரி நாளைக்கு ரெக்கார்டிங் வச்சுக்கலாம்’

‘சார்…! நாளைக்கு…. … வச்சா … … .. ப்ரொடியூசர் ஊரில் இல்ல சார்..’

‘ப்ரொடியூசர் எதுக்குய்யா? டைரக்டர் நீ இருக்க..! மியூசிக் டைரக்டர் நான் இருக்கேன்..! வா.. பாத்துக்கலாம்..!’

‘சார்..! அதில்ல சார்..!’

‘புரியுதுய்யா..! போய்யா அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..! ப்ரொடியூசர் எங்க இருக்காரு?’

‘சார்… வந்து... அமெரிக்காவில்’

‘சரி..! வரட்டும் ..! அப்பறம் பாத்துக்கலாம்..! ரெக்கார்டிங் நாளைக்கு…”

உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் அட்வான்ஸ் என்ற ஒன்று இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. பலவிதமான Excitement-க்கு நடுவே இதனால் எனக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள் ஆறு மணிக்கு வரச்சொன்னார். பதைபதைப்புடன் போனேன்.

வெள்ளை வெளேர் என்ற ஒரு அறை. கருப்பு வெள்ளையில் ரமண மகரிஷியின் ஒரு புகைப்படம். அதனருகில் அம்மா என்கிற ஒரு ஆத்மாவின் புகைப்படம். அதே கருப்பு வெள்ளை 3D Animation போல அருகில் இளையராஜா, அவர் பக்கத்தில் ஒரு கோப்பையில் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகள்..! இவைகளைத் தவிர அந்த அறையில் இருந்த மற்றொரு முக்கியமான விஷயம் ”அமைதி”. நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் உட்காரவா வேண்டாமா என்று தயங்கி நின்றுகொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் போட்டார். நான் அதைப் பிடித்தேன். அந்த சாக்லேட் பேப்பரின் ஒலிதான் அந்த அறையில் நான் நுழைந்து ஐந்து நிமிடங்களில் நான் கேட்ட முதல் ஒலி. ”இதைப்பிரித்தால் சாக்லேட் பேப்பரின் ஒலி இவரை Disturb செய்துவிடுமே..? இதைப் பிரிக்கலாமா வேண்டாமா? சாப்பிடுவதா இல்லையா?” என்று எனக்கு யோசனை.

அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எழுதிக்கொண்டே இருக்கிறார். வேகமாக எழுதுகிறார். கோபத்துடன் எழுதுகிறாரா, பாசத்துடன் எழுதுகிறாரா, யாருக்கு எழுதுகிறார், என்ன எழுதுகிறார், எதுவும் தெரியவில்லை. நான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறேன். மெதுவாக எனக்குக் கோபம் வரத்துவங்குகிறது. ”என்ன இது? நான் ஒரு டைரக்டர்..! என்னை வரச்சொல்லிவிட்டு இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்..! அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார்? ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வரச்சொல்லியிருக்கலாமே?”

பக்கம் பக்கமாக வேகமாக எழுதியவர், நிமிர்ந்து ‘புரு...’ என்றார். அவர் கூறியது ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்திருந்த என் வரைக்கும்தான் கேட்டிருக்கும். ஆனால் வெளியில் இருந்து ‘புரு’ என்கிற ஆறடி உயர ‘புருஷோத்தமன்’ வந்தார். அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு Intimate communication..! Sheets எல்லாம் அவரிடம் கொடுத்துவிடுகிறார். ‘இதை Distribute பண்ணிடு’ என்கிறார்.

”சரி..! அவர் வேலை முடிந்தது..! இனி நம் வேலைக்கு வருவார்” என்று நினைத்தேன்.

‘என்ன சார்..?”

‘அது போய்டுச்சுய்யா’

'சார்.. ..'

‘அதுதான்.. அந்த first பாட்டு..! போய்டுச்சுய்யா..’

‘சார் .. எந்த Scene?’

‘யோவ்..! அதான் உன் படம் சொல்லிடுச்சேய்யா..! எந்தெந்தப் பாட்டு எங்கெங்க வரணும்னு’

‘அப்டியா சார்?’

‘ரொம்ப நல்லா வந்திருக்குதுய்யா.. கேளு..’ என்றவர், பாடத் துவங்குகிறார்.. ‘தன்னனன தான தான தான நான நா…. (தென்றல் வந்து தீண்டும்போது)’. அவர் போட்டிருந்த டியூன் எனக்குப் பிடிக்கவில்லை.

‘என்னய்யா? என்னய்யா யோசிக்கிற? கேளு..!’ என்றவர் மறுபடி ‘தன்னனன’ பாடத் துவங்கினார்.

அப்போதான் தெரிகிறது. நான் எவ்வளவு பெரிய ஞானசூன்யம் என்பது. ’நல்லாயிருக்குது என்று சொன்னால் எது நல்லாயிருக்குது என்று கேட்பார். நல்லாயில்லை என்று சொன்னால் என்னய்யா நல்லாயில்ல என்பாரே’ என்ற யோசனையுடன்..

‘இல்ல சார்..! இதற்கு முன்னால் வரும் பாடலில் காட்சிகள் கொஞ்சம் வேகம் குறைந்ததாக இருக்கும். இது கொஞ்சம் வேகமான பாட்டா இருந்தா நல்லா இருக்கும்.’

‘அதுதான்யா இது..! நல்லா வரும்யா..!’

’சார்..! கொஞ்சம் Tempo-வாவது ஏத்த முடியுமா?’

............ என் மேல் உள்ள அன்பா அல்லது ரீரெக்கார்டிங்கின்போது என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு என் மேல் ஏற்பட்ட நல்ல ஒரு உணர்வா எதுவென்று தெரியவில்லை. வேறு எந்த மியூசிக் டைரக்டரிடம் நான் இதைச் சொல்லியிருந்தாலும் என்னை அடித்து ‘போடா வெளியே’ என்று துரத்தியிருப்பார்கள். ஒரு ஞானியிடம் சென்று ஒரு ஞானசூன்யம் சொல்கிறது ‘கொஞ்சம் Tempo ஏத்துங்க’..!

அவர் சிரித்தார். எனக்கு வேலை இருக்கிறதா என்று கேட்டு பின்னர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.

நான் சென்றவுடன் என்னுடைய Assistant Directors எல்லாம் டியூன் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். 'ஏதோ இருந்தது' என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ‘அவர் அப்படித்தான் சார் போடுவார். நாமதான் சார் நாலஞ்சு டியூன் போடச் சொல்லிக் கேட்டு வாங்கணும்’ என்றார்கள். நான் அதற்கு, ‘விடுங்கய்யா.. நாலு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் Tempoவை கூட்டச்சொல்லியிருக்கிறேன்” என்றேன்.

நாலு மணிக்குச் சென்றேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒரு கல்யாண மண்டபம் போன்று இருந்தது. பலவிதமான வாத்தியக்கருவிகளின் பலவிதமான சப்தங்கள்..! பரவாயில்லை. நம் பாட்டுக்கு இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்று ஒரு சந்தோஷம். சரியாய் நாலரை மணிக்கு சொல்கிறார்…

’…புரு….!’ (இம்முறை கொஞ்சம் சத்தமாக). சரி ஒரு மானிட்டர் பார்க்கலாம்’

எங்கும் அமைதி…!

1…..! 1..2..3..4..

‘தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தன்னானா..’ பாடலின் கோரஸ் துவங்குகிறது.

'....... ...... ....'

'....... ...... ....'

I cried..... நான் அழுதேன். பக்கத்தில் அவர் முழங்கால்கள் இருந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு.. ‘சார்..! தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க சார். நான் தெரியாம எதோ சொல்லிட்டேன்’ என்றேன்.

‘இருய்யா..! முழுசாக் கேளுய்யா’ என்றார்.

அப்படி உருவானதுதான் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எப்படி ஒரு மனிதன் சரளமாக, ஒரு கவிஞன் கோபத்தில், காதலில் அல்லது வீரத்தில் எழுதுவது போல இவ்வளவு வேகத்தில் இசையை எழுதமுடியும் என்பதுதான் (கைகளால் காற்றில் வேகவேகமாக எழுதிக்காட்டுகிறார்).

இளையராஜாவின் வெற்றிக்கு மற்றொரு காரணம் ‘கற்றல்’. எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறார். அவதாரம் திரைப்படத்தின் ஒரு மூன்று காட்சிகளை..

‘யோவ்..! இந்த மூணு சீன் ரொம்ப திராபையா இருக்கேய்யா’ என்றார்.

‘இல்ல சார்..! அவன் திரும்பத் திரும்ப எப்படியாவது என்னைக் கூத்துக்குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகின்றான். அதை விளக்குவதற்காகத்தான் அந்த மூணு சீனையும் வைத்திருக்கிறேன். அது எனக்கு ரொம்ப தேவை சார்’ என்றேன்.

‘உனக்குத் தேவைய்யா..! ஆனால் பார்க்கிறவனுக்கு Interesting-ஆக இருக்கணும் இல்லையா?’ நீ அரை நாளில் ஷூட் பண்ணுவது போல இந்த இடத்தில் ஒரு பாட்டு போட்டுக்கொடுத்துவிடுகிறேன்’ என்றார். அந்தப் பாடல்தான் ‘அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆசை’. அதாவது ஒரு ஏழரை நிமிஷத்து வறட்சியான மூன்று காட்சிகளை மிக அழகாகக் கொண்டுவந்து விட்டார். அவதாரம் படத்தின் ஒவ்வொரு பாட்டும் முத்தான பாடல்கள். அந்த ஐந்து பாடல்களும் இரண்டரை நாட்களில் பதிவு செய்யப்பட்டவை. இன்றைக்கு மாதங்கள் ஆகின்றன. சிலருக்கு வருடங்கள் ஆகின்றன.

போன வருடம் ஒரு படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு ரோடு வழியாகச் செல்லவேண்டியிருந்தது. அது ஒரு விழாக்காலம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும் டீ கடைகளிலும், கோவில் விழாக்களிலும் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தன. சரி.. மக்கள் யாருடைய பாடல்களை கேட்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுக்கலாம் என்று நினைத்தேன். மேடைக்காக மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான் கேட்டதில் ஏழு எம்.எஸ்.வி. பாடல்கள், மூன்று ஏ. ஆர். ரகுமான் பாடல்கள், இருபத்தெட்டு இளையராஜா பாடல்கள். தமிழ் சமூகம் இளையராஜாவின் பாடல்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது."

இசை என்பது வியாபாரம் மட்டுமே அல்ல. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்திஜி கூறினார். கிராமங்களில் வாழும் மனிதர்களின் மனதில் இன்னும் இளையராஜா பாடல்கள்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு விழா இளையராஜாவுக்கு மிகச் சிறியது. ஆனால் எங்கள் மனது 




மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Thursday 20 December 2012

யார் திருடர்கள் ? - உலக அழிவு சிறப்புப் பதிவு



வணக்கம்

திருடர்கள் எப்படி இருப்பார்கள் எங்கு இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது . ஆட்சியாளர்கள் எப்படி இருப்பார்கள் என்பதும் நமக்குத் தெரியாது . புராணத்தில் கலியுகத்தில் நடக்ககூடிய சம்பவங்களும் , நடக்ககூடிய சூழ்நிலைகளும் இப்படி இருக்கின்றன . எல்லாவற்றையும் கொடுக்க வில்லை சிலது தான் . என்ன ஒரு ஒற்றுமை படித்துப் பாருங்கள் .

• திருடர்கள் அரசர்களாவார்கள், அரசர்கள் திருடர்களாவார்கள்.
• ஆட்சியாளர்கள் (மக்களின்) செல்வங்களை திருடி அவற்றை துஷ்பிரயோகம் செய்வார்கள்.
• அவர்கள் (ஆட்சியாளர்கள்) மக்களை காத்திடமாட்டார்கள்
• சிறிதளவே கல்வியறிவு பெற்ற (அதையும் பயன்படுத்திட தெரியாத) வீனர்கள் ஞானிகள் என போற்றப்படுவர்
• அகதிகளாக பலர் நாடு விட்டு நாடு செல்வார்கள்
• தாயின் கர்ப்பத்திலேயே சிசுக்கள் கொலை செய்யப்படுவார்கள்
• தவறான கருத்துக்களையே மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்
• எவரையுமே நம்ப முடியாமல் போகும்
• மக்கள் பொறாமை நிறைந்திருப்பார்கள்
• பிறக்கும் பல குழந்தைகள் வாலிப வயதை தாண்டமாட்டர்கள்
• பசியாலும் பயத்தினாலும் மக்கள் நிலவரைகளுக்குள் தஞ்சம் புகுவார்கள்
• இளம் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை விலை பேசுவார்கள்
• மேகங்கள் சீராக மழை பொழிய மாட்டா.
• வணிகர்கள் நேர்மையற்ற வணிகத்தில் ஈடுபடுவார்கள்
• பிச்சைக்காரர்களும் வேலையற்றோரும் நிறைந்திருப்பார்கள்
• கடுமையான மற்றும் கொச்சையான மொழிகளை மக்கள் பயன்படு்த்துவார்கள்
• செல்வம் சேர்ப்பதிலேயே மக்கள் ஈடுபடுவார்கள், பணங்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்
• ஆட்சி தலைவர்கள் மக்களை காத்திடாமல், வரிகளின் மூலம் செல்வங்களை பறித்துக்கொள்வார்கள்
• நீர் கிடைக்காமல் போகும்
• விரைவுணவு எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும்
எப்பூடி , இதில் உலகம் அழியப் போகும் விஷயம் வரவில்ல , இப்படியே தொடரும் பட்சத்தில் உலகம் அதுவாய் அழியத் தேவை இல்லை . 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Tuesday 18 December 2012

நீயே சொல்லு - உன் இஷ்டம்...ஒரு பொண்ணு ஒரு பையன்

 வணக்கம்


நீங்க காதலிச்சு வெளியே போயிருந்தா உங்களுக்கும் இப்படி நடந்திருக்கும் . நடக்கலன்ன சந்தோசம்.படிச்சுப் பாருங்க .


பையன்: எங்கேயாவது நல்ல
ஹோட்டலா போய் சாப்பிடலமா?
பொண்ணு: உன் இஷ்டம்
பையன்: சரவணபவன்?
பொண்ணு: போன மாசம்
அங்கதானே சாப்பிட்டோம்... ?
பையன்: அப்போ செட்டிநாடு...?
பொண்ணு: எனக்கு புடிக்கல..
காரமா இருக்கும்
பையன்: ம்ம் கேஎஃப்சி....?

பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ்
கூட அங்க சாப்பிட்டேன்..
பையன்: அப்போ வேற எங்க
போலாம்னு நீயே சொல்லு
பொண்ணு: உன் இஷ்டம்...
.
.
பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற
எங்கயாவது போலாமா?
பொண்ணு: உன் இஷ்டம்...
பையன்: படத்துக்கு போலாமா....?
பொண்ணு: இப்போ வந்திருக்க
எல்லா படமும் பாத்தாச்சு...
பையன்: அப்போ ஏதாச்சும்
மாலுக்கு போலாமா?
பொண்ணு: வேணாம்...
பையன்: காஃபி ஷாப்....?
பொண்ணு: நான் டயட்ல
இருக்கேன்...
பையன்: அப்போ வேற என்னதான்
செய்யறது....?
பொண்ணு: நீயே சொல்லு...
.
.
பையன்:
சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்....
பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல
போய் விட்டுட்டு போ..
பையன்: ஓ... நான் இன்னிக்கு பைக்
எடுத்துட்டு வரல... பஸ்லதான்
போகனும்
பொண்ணு: நோ பஸ்ல வேணாம்.
ட்ரெஸ் அழுக்காகிடும்
பையன்: அப்போ ஆட்டோ..?
பொண்ணு: வேணாம்,
பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?
பையன்: அப்போ நடந்து போகலாம்..
பொண்ணு: என்னால முடியாது,
எனக்கு பசிக்குது....
பையன்:
அப்போ சாப்பிட்டே போவோம்?
பொண்ணு: உன் இஷ்டம்...
பையன்:......
இதுக்கு மேல அந்த பையன்
நெலமைய
யோசிச்சுபார்க்க வே முடியல....
  பொண்ணு என்னமோ சிரிக்கும் , பயன் நெலமை பின்னாடி சிரிப்பா சிரிக்கும்.
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  

Monday 17 December 2012

ஆணியே புடுங்க வேணாம் போடி!


வணக்கம்



கீழே நடக்கும் உரையாடல் உங்க வீட்டிலும் நடந்தா , நடந்தா என்ன நடந்திருக்கும். இது ஒரு பக்கம் இருந்தாலும் சரக்கு விலை ஏன் கண்ணா பின்னான்னு ஏறினாலும் நம்மளும் விடாம வாங்கி நாட்டுக்கு வருமானம் உயர்த்தி தர்றோம். ஏன் சரக்கு விலை ஏறுது அப்படின்னு யோசிச்சா முகப்புதகத்தில் நண்பர்கள் சில படங்கள் போட்ருக்காங்க . நீங்களும் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கு. இதிலேயும் இவங்க போட்டிக்கு வந்தா நாம என்னதான் செய்றது.


இந்த உலகப்பிரசித்தி பெற்ற இந்த உரையாடலை பாருங்கள்.


மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?

கணவன்: பருப்பும் சாதமும்.

மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.

கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.

மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.

கணவன்: முட்டைப் பொரியல்?

மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.

கணவன்: பூரி?

மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.

கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?

மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.

கணவன்: மோர் குழம்பு?

மனைவி: வீட்ல மோர் இல்ல.

கணவன்: இட்லி சாம்பார்?

மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.

கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.

மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.

கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?

மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.

கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!
 
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
இனி சரக்கு மீட்டருக்கு வருவோம் 
 
 
 



காவல் துறை பாதுகாப்போடு - டாஸ்மாக்

 வணக்கம்


  எங்கள் பகுதியில் ஒரே சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உண்டு. ( எந்த ஏரியா என்று கேட்க்கக் கூடாது ) கடை என்னவோ பாத்து மணிக்கு தான் திறப்பார்கள் . ஆனாலும் ஆறு மணி முதல் சரக்கு தாராளமாய் கிடைக்கும். இரண்டு கடைகள் போக அதனருகில் இருக்கும் அணைத்து பொட்டிக் கடைகளிலும் சரக்கு கிடைக்கும். குடிமகன்களின் அட்டகாசம் காலையில் இருந்து ஆரம்பித்து இரவு வரை நீடிக்கும். இன்று காலை ஒன்பது இருக்கும் எப்போதும் போல் அலுவலகம் நோக்கி கிளம்பி வந்துக் கொண்டிருந்தேன்.கடைகளின் முன்பு காவல் துறை ஆய்வாளர் கடையின் அருகே உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தார் . ( காபி தான் ) நானும் ஏதோ நல்ல விஷயம் நடக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் சரக்கு வியாபாரம் நடந்து தான் கொண்டிருந்தது. மின்சாரம் இருக்குமோ , இருக்காதோ என நினைத்ததில் இந்த விஷயம் மறந்துப் போனது. 



விஷயம் இப்போது  தான் விளங்கியது.


 

இன்று டாஸ்மாக் கடைகளில் பூரண போலீஸ் பாதுகாப்புடன் மது வாங்க ஏற்பாடு

பா.ம.க. இன்று டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 6,823 மதுக் கடைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
இன்று காலை கடை திறக்க முடியுமோ, முடியாதோ என்ற அச்சத்தில், கடை ஊழியர்களை நேற்று இரவே கடைகளில் தங்க வைத்தனர் போலீஸார்.  இதற்கு ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இரவில் பா.ம..கவினரோ அல்லது சமூக விரோதிகளோ வந்து தாக்குதல் நடத்தினால் யார் பொறுப்பு ஏற்பது என்று அவர்கள் புலம்பியதை போலீஸ் கண்டுகொள்ளவில்லை.
நேற்று இரவு ரோந்து போலீசாரையும், டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து செல்லும்படி உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


 தமில்நாடு வெளங்கிரும் . - சரக்கு பற்றின விஷயம் என்பதால் தமிழ்நாடு இப்படி ஆகிவிட்டது.


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 

 

பல் போனாலும் பக்கோடா சாப்பிடனும் - தமிழ்நாட்டில்


வணக்கம்

இந்தப் பதிவுக்கு மின்சாரம் சேமிப்பது எப்படி என்று தலைப்பு வைக்க நினைத்தேன் .   இல்லாததை பத்தி தலைப்பை வச்சா சத்தியமாய் தமிழ்நாட்டில் கண்டிப்பாக படிக்கும்  வாய்ப்பு இல்லை . மின்சாரம் இல்லாமல் தமிழ் நாட்டில் பிழைப்பு நடத்திவரும் நமக்கு இந்த தலைப்பே மிகவும் சாலச்சிறந்தது. மின்சாரம் சேமிப்பது எப்படி என்கிற தகவலை தந்த நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றி.



இதை நாம ஒவ்வொருத்தரும் ஃபாலோ பண்ணுனா.. நிச்சயம் மின்தேவை/மின்பற்றாக்குறைய பாதியா குறைக்க முடியும்..!!

**************************************************************************************************************************

இந்திய வீடுகளில் 30 சதவீத எரிபொருள் செலவு, மின் விளக்குகளால் மட்டும் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதனால் தேவையில்லாத நேரத்தில் விளக்குகள், மின் சாதனங்களை அணைத்துவிடுவது உத்தமம். அலுவலகத்திலும் வீட்டிலும் தேவையில்லாமல் இயங்கும் மின்சாதனங்களை நிறுத்திவிடுங்கள். எதையும் ஸ்டாண்ட் பை நிலையில் வைக்காதீர்கள். முழுமையாக நிறுத்திவிடுங்கள். இதனால்தான் அதிக மின்சார விரயம் ஏற்படுகிறது. அத்துடன் விளக்குகளை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்தால் அதிக வெளிச்சமும், மின்சாதனங்களை முறைப்படி பராமரித்தால் அதிக பயனும் கிடைக்கும்.

**************************************************************************************************************************

தற்போது மின்சாரத்தை மிகக் குறைவாகப் பயன்படுத்தும் சி.எப்.எல். குறுங்குழல் விளக்குகள் வந்துவிட்டன. எடுத்துக்காட்டாக 75 வாட் திறன் கொண்ட சாதாரண விளக்கு 100 மணி நேரம் எரிய 7.5 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. ஆனால் அதேநேரம் 15 வாட் சி.எப்.எல் விளக்கு அதே அளவு வெளிச்சத்தைக் கொடுத்தாலும் 1.5 யூனிட் மின்சாரத்தையே செலவழிக்கும். இதன் காரணமாக மின்சார செலவு குறையும்.

**************************************************************************************************************************

மேலும் நமது வீட்டை சூரியஒளி பரவும் வகையில் வடிவமைப்பதும், முடிந்த வரை இயற்கை வெளிச்சத்தை பயன்படுத்துவதும் அவசியம். இது மின்சார செலவை குறைப்பது மட்டுமின்றி கண் பார்வைத்திறனையும் பாதுகாக்கும். அதேபோல காற்று வீசும் திசையைப் பார்த்து ஜன்னல்களை அமைத்தாலே வீடு குளிர்ச்சியாக இருக்கும். காற்று வரும் திசையில் பெரிய ஜன்னல்கள், காற்று வெளியேறும் பகுதியில் சிறிய ஜன்னல்களை பொருத்த வேண்டும்.

**************************************************************************************************************************

மின்சாதனங்களை வாங்கும்போது, பி.இ.இ நட்சத்திர குறியீட்டைப் பார்த்து வாங்க வேண்டும். அதிக நட்சத்திரம் கொண்ட மின் சாதனங்கள் அதிக மின்சாரத்தை சேமிக்கும் தன்மை கொண்டவை.

எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள உள்ள மிகப்பெரிய பிரச்சினை நாம் தேவையில்லை என்று ஒதுக்கும் மின்சாதனக் கழிவுகளே. எத்தனை கணினிகள், அவை சார்ந்த உபரி பொருள்கள் சில வருடங்களிலேயே வீணாக உள்ளன என்று பார்த்தால் அது உங்களை ஆச்சரியப்படுத்தும். எனவே, எந்த ஒரு மின்சாதனத்தை வாங்குவதற்கு முன்பும் அது தேவையா, அவசியமா என்று யோசித்து வாங்குங்கள்.

அதேநேரம் நமக்குத் தேவையற்ற மின் ஸ்சாதனங்கள் இயங்கும் நிலையில் அரசு பள்ளிகள், தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுத்து விடலாம். முடிந்த வரை எல்லாவற்றையும் பயன்படுத்துவது மட்டுமே சூழலை காக்க கைகொடுக்கும்.



 மீண்டும் சிந்திப்போம்
அவனி  சிவா 

Saturday 15 December 2012

FACEBOOK பாவித்துப்பார்,காதலித்துப்பார்





FACEBOOK பாவித்துப்பார்...
உன்னை சுற்றி REQUEST தோன்றும்...
நட்பு அர்த்தப்படும்...
நாளிகையின் நீளம் குறையும்....
உனக்கும் கவிதை வரும்...
... ... டைப்பிங்க் வேகமாகும்...
INTERNET தெய்வமாகும்...
உன் கைவிரல் பட்டே KEYBORS உடையும்...
கண்ணிரண்டும் கமெண்ட் ஐ தேடும்...
FACEBOOK பாவித்துப்பார்...


நித்திரை மறப்பாய்...
6 முறை LOG IN பண்ணுவாய்...
LOG OUT பண்ணினால் நிமிசங்கள் வருஷங்கள் என்பாய்...
LOG IN பண்ணினால் வருஷங்கள் நிமிசம் என்பாய்...
காக்கை கூட உன்னை கவனிக்கும்...
ஆனால்,யாருமே உன்னை கண்டுகொள்ளவில்லை என் உணர்வாய்...
உனக்கும் நண்பருக்கும் இடையில் இனந்தெரியாத உறவொன்று உருவாகக் காண்பாய்...
இந்த போஸ்ட், இந்த கமெண்ட், இந்த லைக், எல்லாம் FACEBOOKஐ கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்...
FACEBOOK பாவித்துப்பார்...

இருதயம் அடிக்கடி ஓய்வெடுக்கும்...
EMPTY POSTஇல் உனது கமெண்ட் மட்டும் இருக்கும்...
உன் நண்பனே உனக்கு கலாய்த்து கமெண்ட் அடிப்பான்...
FACEBOOKஇன் பாஸ்வேட்டை நீயே மறப்பாய்...
அதற்காக மெயில் முகவரியை தேடுவாய்...

பின் பாஸ்வேட்டை மாற்றுவாய்...
FACEBOOK பாவித்துப்பார்...

சின்ன சின்ன கமெண்ட் களில் சிலிர்க்க முடியுமே அதற்காக வேணும்...
நட்பை மீண்டும் உருவாக்க முடியுமே ஆதற்காக வேணும்...
நட்பேன்ற சொல்லுக்கு அகராதியில் இல்லாத அர்த்தங்கள் விளங்குமே அதற்காக வேணும்...
FACEBOOK பாவித்துப்பார்...

அப்பன் அடித்தாலும்...
ஆத்தா ஏசினாலும்...
விளித்துப்பார்க்கையில் நீ நடுறோட்டில் நின்றாலும்...
நீ நேசிக்கும் முகப்புத்தகம் உன்னை நேசிக்க மறந்தாலும்...
வாழ்வு சாவு இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்...
FACEBOOK பாவித்துப்பார்.



மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா    


பில்கேட்ஸ் ஆனாலும் மனைவி ஆனாலும் ....... நீதி வெல்லும்


வணக்கம்


ஒருநாள் பில்கேட்ஸ் இறந்து வானுலகம் சென்றார். அங்கே எமனுக்கு ஒரே குழப்பம்..
பில்கேட்ஸை பார்த்து 'எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, உங்களை சொர்க்கத்திற்கு அனுப்புவதா , இல்லை நரகத்திற்கு அனுப்புவதா என்று,நீங்கள் கணணி விசயத்தில் எவ்வளவோ நல்லது செய்தாலும் மக்களை நீங்கள் ரொம்பவே ஏமாத்தி இருக்கிறீர்கள்.

நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.... நீங்களே எங்கு செல்லவேண்டுமென்று முடிவ
செய்துகொள்ளலாம்..'

இதை கேட்ட பில்கேட்ஸ் ' சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார்?'

'நீங்களே ஒரு தடவை இரண்டையும் பார்த்து விடுங்களேன் ' என்று எமன் அவருக்கு சாய்ஸ் கொடுத்தார்.

முதலில் ஒரு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே அழகான அரண்மனை கடற்கரையில் இருந்தது, அழகான தேவதைகள்
ஆயிரகணக்கில் இருந்தனர். மொத்த இடமும் குளிர் பதன வசதி செய்யப்பட்டிருந்தது..
பில் கேட்ஸ்க்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. இது என்ன இடம் என்று கேட்டார்.
நரகம் என்று பதில் வந்தது.. அட நரகமே இப்படின்னா சொர்க்கம் எந்த அளவுக்கு இருக்கும் என நினைத்து கொண்டார்.

அப்புறம் சொர்க்கத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கே சாதாரண சிறு சிறு வீடுகள், வெள்ளை மேகங்கள் , அழகான பெண்கள் பாடிக்கொண்டிருந்தனர்.


உடனே பில் கேட்ஸிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது..நான் நரகத்திற்கே போறேன்.
உங்கள் விருப்பம் என்று பதில் வந்தது..


2 வாரம் கழித்து எமதர்மன், அமரர் பில்லியனர் எப்படி இருக்கிறார் என்று பார்த்துவரலாம்னு நரகத்திற்கு விசிட் அடித்தார்.

அங்கே ஒரு சுவரில் உடல் முழுவதும் ஆணி அடிக்கப்பட்டு , தீ ஜுவாலைகள் மத்தியில் , கருப்பு குகைக்குள் சாத்தான்களால் சித்திரவதை பண்ணப்பட்டு கொண்டிருந்தார்.

'எப்படி இருக்கிங்க பில் கேட்ஸ்'

'என்ன ஒரு கொடுமை, நீங்கள் காண்பித்த மாளிகை,கடற்கரை, தேவதைகள் எங்கே?' என்று கேட்டார்.

அதற்கு எமதர்மன் அமைதியாக

'ஓ அதுவா ! அது ஒரு ஸ்கிரீன் சேவர் ' (screen saver)


 -----------------------------------------------------------------------------------------------------------------------------------



 

ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,''நீங்கள

் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்

ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.


அந்தக் கஞ்சனும் பெருமையாக,எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன், என்றான்.அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,


கஞ்சன் சொன்னான்,என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.


# நீதி

என்னதான் இருந்தாலும்... காசேதான் கடவுளடா...
(அப்பாடா.. இருநூறு ரூபாய் மிச்சம்)

 -----------------------------------------------------------------------------------------------------------------------------------

 மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா   
  

Saturday 8 December 2012

ஒன்னுமே புரியலே .....2

வணக்கம்


இந்த நாள்  இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்க்கள்.


"வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்"

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்ல
ாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.
 
 
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  

Friday 7 December 2012

ஒண்ணுமே புரியல்லே ......

வணக்கம்



சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வராது என்கிற நம்பிக்கையில் இருந்தால் வந்தே விட்டது . ( காங்கிரஸ் காங்கிரஸ் தான் ) இது பாராட்டு அல்ல.


பிட்ச் சரியில்ல அப்படின்னு டோனி ஸ்பின் பிட்சா மாத்தனும் அப்படின்னு சொன்னதும் எதிர்ப்பு வந்துச்சு அதையும் மீறி அவருக்கு  மாதிரி மாற்றியதும் பிச்சு உதறுது இங்கிலாந்த் .



நல்ல இலக்கிய நயம் உள்ள பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தி மு க விற்கு போவாருன்னு எதிபார்த்தா அம்மாவிடம் சரண் அடைகிறார்.


இப்படி நாம ஒன்னு நெனைச்சா அது ஒன்னு நடக்குது. அதுனால  சீரியஸா எதாவது ஒரு பதிவு போடறதுக்கு பதிலா இப்படி ஒரு பதிவு .


உலக சினிமா பார்க்கிற ரசனை உள்ளவர்கள் இவர் யார் என்று கண்டுபிடிங்கள் . சரியா கண்டுபிடித்தால் சிறந்த ரசனையாளர் என்கிற விருதை சூடிகொள்ளலாம் . யார் என்பதை பதிவின் கடைசியில் பார்த்துக் கொள்ளுங்கள்.







நம்ம கார் என்னக்கு வாங்குறது காருக்கு ஏன் அந்த பேரை வச்சிருக்காங்க அப்படிங்கிறதை தெரிஞ்சுகிறது . அத விடுங்க பேருக்கு இதன் விளக்கமா இருக்குமா ?


FIAT: Failure in Italian Automotive Technology.

FORD: For Only Rough Drivers.

HYUNDAI: Hope You Understand Nothing's Driveable And Inexpensive....

VOLVO: Very Odd Looking Vehicular Object.

PORSCHE: Proof Of Rich Spoiled Children Having Everything.

OPEL: Old People Enjoying Life

TOYOTA: The One You Only Trust, Always.

HONDA: Hung Over, Now Driving Away

KIA : Kills In Accident

And the last
:
:
:
:
BMW: Brings Me Women...

இது டிசம்பர் 6 க்கும் பொருந்தும் . இந்தியா - பாகிஸ்தானுக்கும் பொருந்தும் . இந்து - இஸ்லாம் ஒற்றுமைக்கும் பொருந்தும் .





யாருன்னு கண்டு பிடித்தவர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் .




தி கிரேட் சார்லி சாப்ளின்


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

Thursday 6 December 2012

சூப்பர் ஸ்டாரை பின்பற்றும் இளையதளபதி

வணக்கம்


ஏற்கனவே இளையதளபதி எந்த படத்தை ரீமேக் செய்ய விருப்பம் என்கிற ஒரு கேள்விக்கு  அவர் அளித்த பதில் , அண்ணாமலை அல்லது ராஜா சின்ன ரோஜா என்கிற இரண்டு படத்தை சொல்லி இருந்தார். எப்போதும் ரஜினி அபிமானியாக இருக்கும் விஜய் இப்போது தங்கமகன் என்கிற தலைப்பில் நடிக்க இருக்கிறாராம் . இந்த தகவலை தந்த A .j .சினிமா களம் முகப்புத்தகத்திற்கு  நன்றி .  மேலும் பல சினிமா தகவல் தேவைபடுவோர்கள் இவரின் பக்கத்திற்கு சென்று பார்க்கலாம் . இனி அந்த செய்தி.

ரஜினி நடித்த ‘தங்கமகன் பட டைட்டிலில் நடிக்க விரும்புகிறார் விஜய். பட டைட்டிலுக்கு அனுமதி கிடைக்குமா என்பது பற்றி விரைவில் தெரியும். ‘கிரீடம் விஜய் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இதன் தொடக்க விழா நடந்தது. மும்பையில் ஷூட்டிங் நடக்கிறது....
இதற்கிடையில் இப்படத்துக்கு டைட்டில் வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விஜய் திரையுலகுக்கு வந்து இந்த ஆண்டுடன் 20 வருடம் ஆகிறது. இதையடுத்து அதற்கு பொருத்தமாக பட டைட்டில் இருக்க வேண்டும் என்று இயக்குனர் கருதினார். ரஜினி நடித்த ‘தங்கமகன் டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்று பட குழுவினர் கருத்து தெரிவித்தனர். 






ஆனால் இந்த தலைப்புக்கு அனுமதி கிடைக்குமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஏற்கனவே மலையாள ‘பாடிகாட் ரீமேக்கில் விஜய் நடித்தபோது, அதற்கு எம்ஜிஆர் நடித்த ‘காவல்காரன் பட பெயரை வைக்க திட்டமிடப்பட்டது. காவல்காரன் படத்தை தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம், இதற்கு அனுமதி தர மறுத்துவிட்டது. இதையடுத்து காவலன் என்று டைட்டில் வைத்து ரிலீஸ் செய்தனர். இப்போது விஜய் தனது புது படத்துக்கு ‘தங்கமகன் என தலைப்பு வைக்க விரும்புகிறார். ஏதேச்சையாக இதுவும் சத்யா மூவிஸ் தயாரிப்புதான். ஏற்கனவே விஜய்க்கு எம்ஜிஆர் பட தலைப்பு தர அந்நிறுவனம் மறுத்துள்ளது. இந்நிலையில் ரஜினி பட தலைப்பை விட்டுக்கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா     

Wednesday 5 December 2012

கருப்பு எம்ஜியாருக்கு இது தெரியுமா ?


வணக்கம் 

சம்பவம் 1



தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரை தன்னுடைய ஜீப்பில் அமரும் படி அடிக்க முயன்றது முயற்சி செஞ்சாரா இல்லை அடித்தாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்

சம்பவம் 2

கட்சியின் m l a மூன்று பேர் வெளியேறியவுடன் விமான நிலையத்தில் நிருபரிடம் அவர் நடந்து கொண்ட விஷயம் 


இது கருப்பு எம்ஜிஆரின் வரலாறு. இனி ஒரிஜினல் எம்ஜிஆரின் வரலாறு .


ஒருமுறை முதலவர் எம்.ஜி.ஆரின் வாகனத்தின் முன்புறம் சென்ற ஒரு ஆட்டோ டிரைவர் செய்த தவறால் எம்.ஜி.ஆரின் வாகனம் பிரேக் போட, பின்னால் வந்த போலீஸ் ஜீப் எம்.ஜி.ஆரின் காரின் மீது பயங்கரமாக மோதியது. இதில் எம்.ஜி.ஆரின் கார் 
சேதமடைந்தது. வேறு காரில் எம்.ஜி.ஆர். சென்றுவிட்டார்.. விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் ஸ் டே டேஷனுக்கு அழைத்து சென்றுவிட்டனர். வழக்கும் போட முடிவு எடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர். கோட்டைக்குப் போனவுடன் தனது செயலாளரை அழைத்து, ''அந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் இந்நேரம் கைது செய்திருப்பார்கள். அவரை உடனே கோட்டைக்கு அழைத்து வாருங்கள்..''என்றார்.


பயந்து போய் எம்.ஜி.ஆர். முன் வந்து நின்ற ஆட்டோ டிரைவரிடம் எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி, '' போலீஸார் உன்னை அடித்தார்களா? ''ஆட்டோ டிரைவர் அடி வாங்கியிருந்தாலும் '' இல்லண்ணே ''என்றவுடன்,அவருக்கு புத்திமதி சொல்லி சாலையில் பாத்து ஓட்ட வேண்டும். உனக்கு குடும்பம் உள்ளதை மனதில் வைத்து ஓட்ட வேண்டும். எனக்கூறி ஆட்டோ டிரைவரை அனுப்பி வைத்தார்.. எம்.ஜி.ஆர். அன்று அந்த ஆட்டோ டிரைவரை பற்றி நினைக்காதிருந்தால் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவித்தார் என்று எதாவது ஒரு பிரிவின் கீழ் சிறைக்குப் போயிருப்பார்.


இந்த தகவல் பழைய வரலாற்றை புரட்டிய போது கிடைத்தது .


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா



Monday 3 December 2012

படிங்க , கோபப்படாதிங்க



வணக்கம் 


இந்தப் பதிவை பதிவு என்றும் எடுத்துக் கொள்ளலாம் . காக்டெயில் பதிவாக தந்துள்ளேன் .

படிங்க கோபப்படாதிங்க . வாங்க போகலாம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------



ரொம்ப ஆசைப்பாடதிங்க .

ரொம்ப பிரெண்ட்ஸ் வச்சிக்காதிங்க .

ரொம்ப படிக்காதிங்க

ரொம்ப கோபப்படாதிங்க .

ரொம்ப பேசாதிங்க.

வாய் வலிக்கும் அளவு சிரிக்கதிங்க.

இதெல்லாம் பண்ணா... மேல்மாடி கொலாப்ஸ்



------------------------------------------------------------------------------------------------------------



-------------------------------------------------------------------------------------------------------------


ஃப்ளாஷ் பேக்
------------------------------------
“நீங்கள் ஒரு கார் வாங்கிக்கொள்ளவேண்டும்..”

- வைரமுத்துவிடம் சொல்லிக்கொண்டே ஒரு பெருந்தொகையும் கொடுக்கிறார் ஏவி.எம். சரவணன் சார்.

முதன்முதலாக கார் வாங்குகிறார் கவிஞர். அதை ஏவி.எம். சரவணனிடம் காட்டுகிறார்.. அப்போது சரவணன் சார் சொன்னது இது...

“காரில் ஏறுவது பெரிதில்லை.. அதைவிட்டு இறங்காமல் இருப்பது பெரிது!”


-----------------------------------------------------------------------------------------------------------



-----------------------------------------------------------------------------------------------------------


ஒரு வியாபாரி தன்னுடையது தான் பெரிய கடை என்பதைக் காட்ட இந்த ஊரிலேயே பெரிய கடை.. என்று போர்டு மாட்டினான்.
இன்னொருவன் இந்த தேசத்திலேயே பெரிய கடை என்று போர்டு மாட்டினான். எதிர்சாரியில் மற்றொருவன் இந்த உலகத்திலேயே பெரியகடை என்று போர்டு மாட்டினான்..
நான்கு கடை தள்லி இடம் பிடித்த ஒரு வியாபாரி இவர்கள் மூன்றுபேரையும் விட புத்திசாலி. அவன் தன் கடையின் முகப்பில் போர்டில் எழுதியது என்ன தெரியுமா?
இந்தத் தெருவிலேயே இந்தக்கடைதான் பெரியது..!

------------------------------------------------------------------------------------------------------------------------------



மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா