வணக்கம்
திருடர்கள் எப்படி இருப்பார்கள் எங்கு இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது . ஆட்சியாளர்கள் எப்படி இருப்பார்கள் என்பதும் நமக்குத் தெரியாது . புராணத்தில் கலியுகத்தில் நடக்ககூடிய சம்பவங்களும் , நடக்ககூடிய சூழ்நிலைகளும் இப்படி இருக்கின்றன . எல்லாவற்றையும் கொடுக்க வில்லை சிலது தான் . என்ன ஒரு ஒற்றுமை படித்துப் பாருங்கள் .
• திருடர்கள் அரசர்களாவார்கள், அரசர்கள் திருடர்களாவார்கள்.
• ஆட்சியாளர்கள் (மக்களின்) செல்வங்களை திருடி அவற்றை துஷ்பிரயோகம் செய்வார்கள்.
• அவர்கள் (ஆட்சியாளர்கள்) மக்களை காத்திடமாட்டார்கள்
• சிறிதளவே கல்வியறிவு பெற்ற (அதையும் பயன்படுத்திட தெரியாத) வீனர்கள் ஞானிகள் என போற்றப்படுவர்
• அகதிகளாக பலர் நாடு விட்டு நாடு செல்வார்கள்
• தாயின் கர்ப்பத்திலேயே சிசுக்கள் கொலை செய்யப்படுவார்கள்
• தவறான கருத்துக்களையே மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்
• எவரையுமே நம்ப முடியாமல் போகும்
• மக்கள் பொறாமை நிறைந்திருப்பார்கள்
• பிறக்கும் பல குழந்தைகள் வாலிப வயதை தாண்டமாட்டர்கள்
• பசியாலும் பயத்தினாலும் மக்கள் நிலவரைகளுக்குள் தஞ்சம் புகுவார்கள்
• இளம் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை விலை பேசுவார்கள்
• மேகங்கள் சீராக மழை பொழிய மாட்டா.
• வணிகர்கள் நேர்மையற்ற வணிகத்தில் ஈடுபடுவார்கள்
• பிச்சைக்காரர்களும் வேலையற்றோரும் நிறைந்திருப்பார்கள்
• கடுமையான மற்றும் கொச்சையான மொழிகளை மக்கள் பயன்படு்த்துவார்கள்
• செல்வம் சேர்ப்பதிலேயே மக்கள் ஈடுபடுவார்கள், பணங்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்
• ஆட்சி தலைவர்கள் மக்களை காத்திடாமல், வரிகளின் மூலம் செல்வங்களை பறித்துக்கொள்வார்கள்
• நீர் கிடைக்காமல் போகும்
• விரைவுணவு எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும்
எப்பூடி , இதில் உலகம் அழியப் போகும் விஷயம் வரவில்ல , இப்படியே தொடரும் பட்சத்தில் உலகம் அதுவாய் அழியத் தேவை இல்லை .
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
ஆஹா ! அருமையான விளக்கங்கள் நல்ல பதிவு.
ReplyDelete