குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 10 September 2012

நாகரிகத்துடன் நாட்டி ஜோக்ஸ் - பயப்படாம படிக்கலாம்

வணக்கம்


அந்த மாதிரி ஜோக்ஸ் பதிவு போட்டப் போது நயமாய் சில நண்பர்கள் எச்சரித்தனர் . அவர்களுக்கு நன்றி . இப்போ போகலாம் நாட்டி ஜோக்ச்க்கு .


முதலில் ஒரு புதிர் . எந்த கெட்ட எண்ணம் இல்லாம இருந்த சரியான வார்த்தையை கண்டு பிடிக்கலாம் . சரியான வார்த்தையை பதிவின் இறுதியில் .





 B _ _ _ S  - இதுக்கு ஒரு க்ளு இது ரெண்டு பக்கம் இருக்கும் .


 _ _ NDOM  - இதுக்கு க்ளு எல்லாம் கிடையாது யோசிங்க.


F _ _ K  - இது குத்துறது .

------------------------------------------------------------------------------------------------------------------


நம்ம கந்தசாமி ஒரு முறை ரயிலில் பயணம் செய்தாரு . அப்போ டிக்கெட் பரிசோதகர் பக்கத்துக்கு கம்பாட் மேண்டில் டிக்கெட் வாங்கதவர்களுக்கு அபராதம் விதிச்சார் . முதலில் சுடிதார் போட்ட பொண்ணுக்கு 250 அபராதம் போட்டார் . பிறகு ஸ்கர்ட் போட்ட பொண்ணுக்கு 100 , அப்புறம் மினி ஸ்கர்ட் போட்ட பொண்ணுக்கு 50 அபராதம் போட்டாரு . அடுத்த பொண்ணுக்கு அபராதம் போடவேஇல்ல. ஏன்னு கந்தசாமி தப்பா யோசிச்சாரு . நீங்களும் அந்த மாதிரி யோசிக்காம நல்ல பிள்ளையா யோசிங்க . ஏன்னா 
                                         

                                                             ?
                                                             ? 
                                                             ? 

 அந்த பொண்ணு டிக்கெட் வங்கி இருந்தது .

------------------------------------------------------------------------------------------------------------------

கந்தசாமி ஒரு சண்டே அன்னிக்கு வீட்டுல இருந்தாரு . அப்போ அவருடைய மனைவி அவரை கூப்ப்பிட்டங்க .

மனைவி  - எங்க இந்தக் கதவு பிடிக்குதுங்க என்னனு பாருங்களேன்.

கந்தசாமி  - என்னை என்ன கார்பெண்டர் அப்படின்னு நெனச்சியா 

சிறிது நேரம் கழித்து மறுபடியும் 

மனைவி  - எங்க வாஷ்பேசின் குழாய் சரியா மூடல , வந்தி பாருங்களேன் 

கந்தசாமி - நான் என்ன பிளம்பரா அப்படினார். 

இப்படியே அடுத்து காஸ் அடுப்பு சரியா எரியல்ல அப்படின்னு கூப்பிட்டா , அவரும் நான் என்ன மெக்கானிக்கா அப்படின்னுட்டு , வெளியே போனார். சில மணி நேரங்களுக்குப் பிறகு திரும்ப வீட்டுக்கு வந்து பார்த்தார். மனைவி சொன்ன எல்லா வேலையும் முடிஞ்சிருந்தது . 

மனைவியிடம் கேட்டார். எல்லாம் எப்படி முடிஞ்சது . அது ஒன்னும் இல்ல பக்கத்து வீடு சுரேஷ் வந்தான் . நான் சொன்னேன் . அதுக்கு அவன் எல்லாம் சரி பண்ணிராலாம் ஆனா ஒரு கண்டிசன் அப்படின்னான்.

என்ன கண்டிசன் அப்படின்னு கேட்டாரு கந்தசாமி .

ஒன்னும் இல்ல எனக்கு புடிச்ச மல்லிகபூ இட்லி சுட்டு கொடுங்க , இல்லன்ன ஒரு ஒரு மணி நேரம் என்கூட இருக்கணும் அப்படின்னான்.

எனக்கு நல்ல தெர்யும் தங்கம் நீ இட்லி சுட்டு செஞ்சி அசதி வேலை வாங்கியுருப்ப அப்படினார்.

அதுக்கு அந்த தங்கம் நான் என்ன முருகன் இட்லி கடையா அப்படின்னு சொல்ல மயங்கினார் கந்தசாமி.

------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு தத்துவம் 


காதலும், சாப்பாடும் ஒரு விதத்தில் ஒன்னு தான் அளவிற்கு மேல் போனால் வாந்தி எடுத்தே ஆகணும்.

-----------------------------------------------------------------------------------------------------------------

சரியா வார்த்தையை கண்டு பிடிச்சுருந்தா , உங்க சட்டை காலரை தூக்கி விட்டுக் கொள்ளவும் . 

BOOKS

RANDOM

FORK 

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Tuesday 4 September 2012

ஓஷோவின் தியானம் - சிறு கதை







தியானம் – ஓஷோவின் கதை - 


இது ஒரு ஜென் கதை.



ஒரு இளவரசன் ஒரு ஜென் குருவிடம் வந்து தியானம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினான். ஆனால் அவனுக்கு அவசரம். ஏனெனில் அவனது தந்தைக்கு வயதாகி விட்டது. அவர் இவனை இந்த ஜென்குருவிடம் தியானம் கற்றுக்கொள்ள அனுப்பியிருக்கிறார். 


உனது காலத்தை வீணடிக்காதே”. என தன் மகனிடம் கூறிவிட்டு, “நீ இந்த குருவிடம் சென்று தியானம் செய்ய கற்றுக்கொண்டு நான் இறப்பதற்குள் திரும்பி வா. நீ தியானம் செய்ய தெரிந்து கொண்டு விட்டால் நான் சந்தோஷமாக இறப்பேன். நான் இதை தவிர வேறு எதையும் கொடுக்கமுடியாது. இந்த ராஜ்ஜியம் சிறிதும் மதிப்பற்றது. 



அதனால் இளவரசன் இந்த ஜென்குருவிடம் வந்து, நான் அவசரத்திலிருக்கிறேன். எனது தந்தைக்கு வயதாகிவிட்டது. அவர் எந்த விநாடியும் இறந்து விடுவார். எனக் கூறினான். 



குரு, தியானத்திற்கான முதல் அடிப்படையே அவசரப்படக்கூடாது என்பதுதான். பொறுமையில்லாதது வேலைக்காகாது. போ வெளியே, இங்கிருந்து போய்விடு திரும்பவும் இங்கே வராதே. யாராவது ஒரு போலி குருவை கண்டுபிடிக்க முயன்று பார். அவர் ஜபிக்க ஒரு மந்திரம் சொல்லித் தருவார், இதை காலை பதினைந்து நிமிடம், மாலை பதினைந்து நிமிடம் அமர்ந்து சொல்லி வா. உனக்கு முக்தி கிடைக்கும் என்று உனக்கு ஆறுதலாகக் கூறிவிடுவார். 



ஆனால் நீ இங்கிருக்க விரும்பினால் கால நேரத்தை மறந்து விடு. ஏனெனில் தியானம் அழிவற்றதை தேடுவது. உனது வயதான தந்தையை பற்றி மறந்து விடு. – எப்போதும் யாரும் இறப்பதில்லை. என்னை நம்பு. ஒருநாள் நான் கூறுவதை உண்மை என நீ உணர்வாய். யாருக்கும் எப்போதும் வயதாவதுமில்லை, யாரும் இறப்பதுமில்லை. கவலைப்படாதே. எனக்கு உன் தந்தையை தெரியும். ஏனெனில் அவர் என்னிடம்தான் தியானம் கற்றுக்கொண்டார். அவர் இறக்கப்போவதில்லை – அவரது உடல் அழியலாம். ஆனால் நீ தியானம் கற்றுக்கொள்ள விரும்பினால் நீ உனது தந்தை உனது அரசாங்கம் ஆகிய எல்லாவற்றையும் மறந்து இருக்க வேண்டும். அதற்கு ஒருமுனைப்பட்ட அர்ப்பணிப்பு வேண்டும். என்றார். 



அந்த குரு அப்படிப் பட்டவர். அவரது இருத்தல் வலிமையானது. அந்த இளைஞன் தங்க முடிவெடுத்தான்.



மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. குரு தியானத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த இளைஞன் குருவுக்கு எல்லாவழிகளிலும் சேவை செய்து வந்தான். காத்திருந்தான், காத்திருந்தான், இங்கிருந்து வெளியே போய்விடு , நீ மிகவும் அவசரப்படுகிறாய் எனக் கூறிவிட்டால். அதனால் அவன் அதைப் பற்றி பேசக் கூட இல்லை. 



ஆனால் மூன்று வருடங்கள் என்பது மிக அதிகம். முடிவில் ஒருநாள் காலை குரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, குருவே, மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் இன்னும் எனக்கு தியானம் என்பது என்ன. அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கூட கூறவில்லை. எனக் கேட்டான். 



குரு அவனை திரும்பி பார்த்துவிட்டு, பின்னர், நீ இன்னும் அந்த அவசரத்திலேயே இருக்கிறாய். சரி, இன்று உனக்கு நான் தியானத்தை சொல்லித் தருகிறேன். என்றார். 



அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில் கற்றுத் தர ஆரம்பித்தார். இளைஞன் கோவிலின் தரையை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார். மிகவும் பலமாக தாக்கினார். அந்த இளைஞன் புத்தமத சாரங்களை படித்துக் கொணடிருக்கும்போது வந்து குரு தாக்கினார். அவர் மிகவும் அமைதியான மனிதர். அவருடைய காலடி ஒசையை கூட உன்னால் கேட்க முடியாது. திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது இறங்கும். 
இளைஞன், என்ன வகையான தியானம் இது என நினைத்தான். ஏழு நாட்களில் அவன் மிகவும் சோர்ந்து போனான். காயங்களும் சிராய்ப்புகளும் அடைந்த அவன் குருவிடம், என்ன செய்கிறீர்கள் நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனக் கேட்டான். 



குரு இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை. கவனமாயிரு, தன்ணுணர்வோடு இரு, அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி என்றார்.



தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான். மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். அவர் ஒரு பூனையைப் போல வருவார். பூனை எலியை பிடிக்க போகும்போது மிகவும் மெதுவாக சப்தமின்றி போகும். குரு உண்மையிலேயே வயதான பூனை போல. 



ஆனால் இளைஞன் கவனமாகி விட்டான். அவன் அவருடைய காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். மூன்று மாதங்களுக்குள் குருவால் அவனை ஒருமுறை கூட அடிக்க முடியாமல் போய்விட்டது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் எப்போது முயற்சி செய்தாலும் அவன் என்ன செய்துகொண்டு இருந்தாலும் குதித்து தப்பித்து விடுவான். 



அப்போது குரு, முதல்பாடம் முடிந்தது. இப்போது இரண்டாவது பாடம் ஆரம்பிக்கிறது. இப்போது நீ உன்னுடைய தூக்கத்திலும் விழிப்போடு இருக்கவேண்டும். உன்னுடைய கதவுகளை திறந்து வைத்திரு. ஏனெனில் நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன். என்றார்.



இது உண்மையிலேயே கடினமானது. ஆரம்பத்தில் அவர் வந்து அவனை கடினமாக அடித்தார். வயதானவருக்கு இரண்டு மணி நேர தூக்கம் போதுமானது. ஆனால் இவன் இளைஞன். இவனுக்கு எட்டு மணி நேர தூக்கம் தேவை. ஆனால் முழு இரவும் போராட்டமாக இருந்தது. பலமுறை குரு வந்து அவனை அடித்தார். ஆனால் முதல் பாடம் மிகவும் சிறப்பாக அவனை மிகவும் கவனமானவனாகவும் அமைதியானவனாகவும் மாற்றியிருந்ததால் அவன் இந்த முறை அவரை, இது என்ன மடத்தனம், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என கேட்கவில்லை.



குருவோ, கவலைப்படாதே. தூக்கத்தில் கூட கவனமாக இரு. நான் எவ்வளவு கடினமாக உன்னை அடிக்கிறேனோ அவ்வளவு விரைவாக தூக்கத்தில் கூட சுதாரிப்பாவாய். சூழ்நிலை உருவாக்கப் பட வேண்டும், அவ்வளவுதான். என்றார்.



மூன்று மாதங்களுக்குள்ளாகவே அவன் தூக்கத்தில் கூட கவனமடைந்தான். அவன் உடனடியாக தனது கண்களை திறந்து, இருங்கள். இதற்கு அவசியமில்லை. நான் விழித்திருக்கிறேன். என்பான்.



மூன்று மாதங்களுக்கு பிறகு குரு, நீ இரண்டாவது பாடத்திலும் தேர்ந்து விட்டாய். இப்போது மூன்றாவதும் கடைசியுமானது. என்றார். 
இளைஞன், இரண்டு நிலைகள் – நடப்பது, தூங்குவது – தானே இருக்கின்றன. மூன்றாவது என்னவாக இருக்கும் என்றான். 



குரு, இப்போது நான் உன்னை உண்மையான கத்தியினால் அடிக்கப்போகிறேன். – இதுதான் மூன்றாவது. என்றார். 
மரக்கத்தியினால் அடிக்கப்படுவது பரவாயில்லை. ஏனெனில் அதிகபட்சமாக பலமாக அடிபடும் அவ்வளவே. நீ இறந்து விடமாட்டாய். இப்போது குரு உண்மையிலேயே அசல் கத்தியை கொண்டு வந்தார். அவர் உறையிலிருந்து அசல் கத்தியை எடுத்தவுடன் இளைஞன் முடிந்தது நான் செத்தேன். இது ஒரு அபாயகரமான விளையாட்டு. அவர் இப்போது உண்மையான கத்தியினால் குத்தப் போகிறார். நான் கவனமின்றி ஒருமுறை இருந்தால்கூட அவ்வளவுதான் நான் முடிந்தேன். என நினைத்துக் கொண்டான். 



ஆனால் அவன் ஒருமுறை கூட தவற விடவில்லை. விஷயம் மிகவும் அபாயமானதாக இருக்கும்போது நீயும் அந்த அபாயத்தை சந்திக்கும் அளவு சக்தி பெற்று விடுவாய். மூன்று மாதங்களில் குருவால் அவனை ஒருமுறை கூட உண்மையான கத்தியால் அடிக்க முடியவில்லை. 



பின் குரு, உன்னுடைய மூன்றாவது பாடமும் முடிந்தது. – நீ தியானிப்பவனாக மாறி விட்டாய். நாளை காலை நீ புறப்படலாம். நீ போய் உன் தந்தையிடம் எனக்கு உன்னைப் பற்றி முழுத் திருப்தி என்பதை சொல். என்றார்.



நாளை காலை அவன் புறப்படப் போகிறான். அன்று மாலை சூரியன் மறைந்துக் கொண்டிருந்தான். குரு மரத்தடியில் அமர்ந்து புத்தமத சூத்திரத்தை படித்துக் கொண்டிருந்தார். இளைஞன் வேறு எங்கோ அமர்ந்திருந்தான். அவன் மனதில், நான் போவதற்கு முன் ஒருமுறை இந்த கிழவனை அடிக்க வேண்டும். என்று தோன்றியது. இந்த எண்ணம் பலமுறை அவன் மனதில் ஓடியது. இதுதான் கடைசி சந்தர்ப்பம். இதை விட்டால் இனி முடியாது. நாளை காலை நான் புறப் பட வேண்டும் என எண்ணினான்.



அதனால் அவன் போய் மரக்கத்தியை எடுத்துவந்து ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். அப்போது குரு, நிறுத்து எனக் கூறினார். அவர் அவனை பார்க்கக் கூட இல்லை. இங்கே வா. நான் வயதானவன், என்னை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் நல்லதல்ல – அதிலும் நான் உன் குரு என்றார். 



இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆனால் நான் எதையும் சொல்லவில்லையே எனக் கேட்டான்.



குரு, ஒருநாள் உண்மையிலேயே நீ மிகவும் விழிப்புணர்வு அடையும்போது சொல்லாததும் கேட்கும். முன்பெல்லாம் என்னுடைய காலடி ஓசையை உன்னால் கேட்க முடியாது. பின் கவனமாக இருந்து அவற்றை கேட்க ஆரம்பித்தாய். முன்பெல்லாம் எனது காலடி சத்தத்தை உனது தூக்கத்தில் உன்னால் கேட்க முடியாமலிருந்தது. ஆனால் இப்போது தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட எனது காலடி ஓசையை உன்னால் கேட்க முடியும். அதைப்போல ஒருநாள் உனக்கு தெரியும். உனது மனது அமைதியாக மெளனத்தில் இருக்கும்போது உச்சரிக்காத வார்த்தைகளையும் உன்னால் கேட்க முடியும். சொல்லப்படாத எண்ணங்களையும் உன்னால் படிக்க முடியும். உள்ளுணர்வை தெரிந்து கொள்ள முடியும். உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும். அது உனது முயற்சியினால் அல்ல – நீ ஒரு கண்ணாடி போல மாறிவிடுவாய். அதனால் பிரதிபலிப்பாய். அவ்வளவே. என்றார்.


நன்றியுடன் 
அவனி சிவா 

Monday 3 September 2012

கூட்டி , கழிச்சுப் பாருங்க சரியா வரும் - கணக்கு விளையாட்டுக்கள்

வணக்கம்

நேரடியா விளையாட்டுக்குப் போகலாம் . ஆனா ஒரு விஷயத்தை நினைவுப் படித்துட்டு  , ஏற்கனவே கணக்கு விளையாட்டுக்கள் , புதிர்கள்  சம்மந்தமான சில பதிவுகள்  நல்ல வரவேற்ப்பை பெற்றன. ஆனாலும் தொடர முடியவில்லை . வழக்கமாக என்னுடைய பதிவை படிப்பவர்கள் ? நேரடியா விளையாட்டுக்கு போகலாம். 


இப்போ தான் என்னுடைய பக்கத்துக்கு வர்றவங்க ஏற்கனவே போட்ட

கணக்கு 
புதிர்கள்,
விளையாட்டு 
பதிவுகளையும் 

படிச்சுட்டு 
இந்த பதிவையும் படிக்கலாம் . .இல்ல இந்த பதிவை படித்தப் பிறகும் அந்தப் பதிவுகளையும் படிக்கலாம் . 

போதும் வாங்க விளையாடலாம்.



1 , 3 , 6 , _ , 15 , 21 , 28 , _


இதுல விடுபட்ட எண்களை கண்டுப்பிடித்து நிரப்புங்க. புலிகளுக்கு ( கணக்குப் புலிகளுக்கு ) இது சர்வ சாதாரணம் . சுட்டுப் போட்டாலும் கணக்கு வராதுன்னா  இது சதா ரணம்.





259 * உங்களோட வயது  * 39

பெருக்கிப் பாருங்க . விடையை பார்த்து அசந்து போவிங்க . 3 தடவை ரிபீட் ஆகும் . எதுன்னு கேட்டா ? பெருக்கித் தான் பாருங்களேன்.























இதுல 1 மட்டும் வித்தியாசம் , இதுலலேயே களு இருக்கு , பார்த்தவுடனே தெரிஞ்சா களுக்குன்னு சிரிங்க. 







6 , 24 , 60 , 120 , _ , 336 , 504 


முதல் புதிருக்கும் , இதற்கும் உள்ள ஒரு ஒற்றுமை விடுபட்ட எண்களை  நிரப்புவது தான் . அதுக்கும்  இதுக்கும் ஒரு குறியை மட்டும் மாற்றி போடணும். 




போதும் , இப்போ கூட்டி , கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும் . அப்படியும் வரல்லைன்ன கூட்டி , பெருக்கியாவது பாருங்க கண்டிப்பா விடை வரும் . 


விடை தெரிஞ்சவங்க , கருத்துக்களில் விடை போடலாம். விடை தெரியவில்லை என்றாலும் கருத்தாவது போடலாம்.



மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா