குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday 29 February 2012

மூணு புரோட்டா ஒரு ஆம்லேட்

வணக்கம்


இன்று பன்முக முகம் கொண்ட என் அபிமான ( எனக்கு மட்டும் அல்ல ) எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நான்காம் ஆண்டு நினவு தினம் . காலங்கள் எவ்வளவு வேகமாக நகர்கின்றன.இவர் இப்போது இருந்திருந்தால் கூடங்குளம் பிரச்சனைக்கு ஒரு தீர்க்கமான முடிவுகளை தந்திருப்பார்.தெரிஞ்ச சினிமா தெரியாத விசயம் என்கிற நூலிலுருந்து .






தமிழ் சினிமாவை மற்றுமொரு தளத்துக்கு அழைத்து சென்றவர். இவரின் "கரை எல்லாம் செண்பக பூ" தொடங்கி, கணேஷ் -வசந்த்தை கடந்து, ஜீனோவை அதிசயித்து நின்ற தலைமுறைதான் இன்றைய தலைமுறை.

கணையாழியின் கடைசி பக்கங்கள் இப்போதும் இவரது புகழை இலக்கியவாதியாகவும் நிலை நாட்டி கொண்டிருக்கிறது.

"கனவுத் தொழிற்சாலை" தொடருக்கு ஆனந்த விகடனில் அண்ணாசாலையில் பேனர் வைத்தது வரலாறு. "கற்றதும் பெற்றதும்" மூலமாக இன்றைய இளம் எழுத்தாளர்கள் அவரிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம்.

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவரின்றி தமிழின் நவீன எழுத்து தலைமுறை இல்லை என்பது நிதர்சனம்.

சுஜாதா என்று பரவலாகவும், வாஞ்சையாகவும் அறியப்பட்ட ரங்கராஜனின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று. 










--------------------------------------------------------------------------------------------------------------



மேலும் ஒரு சங்கடம் தரும் ஒரு செய்தி . எழுத்தாளர் பாலகுமாரன் மூச்சுதினரலால் அப்போல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.அவர் நலம் பெற்று மீண்டும் வீடு திரும்ப பிரார்த்திப்போம் .





--------------------------------------------------------------------------------------------------------------


 நேரம் இல்லை , நேரம் இல்லை என புலம்பி தீர்க்கும் நமக்கு இந்த ஆண்டு ஒரு நாள் அதிகமாக கிடைத்துள்ளது.பயன் உள்ளதாக செய்வோம் . ( எனக்கும் தான் )



 -------------------------------------------------------------------------------------------------------------


சங்கரன் கோவில் வெற்றி யாருக்கு என தெரியாத நிலையில் ஆளாளுக்கு கண்டிப்பாய் நாங்க தான் வெற்றிப் பெறுவோம் என அறிவித்துள்ளனர்.எப்போதும் போல் எல்லா உதிரி கட்சிகளும் ( காங்கிரசும் தான் ) தி மு க விற்கு ஆதரவு தெரிவித்து விட்டன.மருத்துவருக்கு இப்போது தான் தெரிந்து ( எவ்வளவு வருஷம் ) எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லையாம்.காம்ரேட் நிலைமை படு பாவம்.கேப்டனுக்கு ஆதரவாம்.செங்கொடித் தோழர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

-------------------------------------------------------------------------------------------------------------


மீண்டும் நாளக்கி புரோட்டாவும் ஆம்லேட் சாப்பிட ரெடியா இருங்க .


 மீண்டும் சிந்திப்போம்.
உண்மையுடன்
அவனி சிவா

 

1 comment:

  1. எல்லாவற்றிலும் வெற்றிகரமாக தடம் பதித்தவர் சுஜாதா. ஈடு செய்ய முடியாத இழப்பு தான்.

    ReplyDelete

கருத்து மேடை