வணக்கம்
இனி கலைஞரை முரசொலி இதழ் முதல் facebook , tweet ஆகிய இடங்களிலும் காணாலாம் . இது உண்மையில் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி . இது அவரின் வயதை தொட்டவர்களும் , அவரின் வயதை கடக்கப் போகிறவர்களும் கணினி என்றவுடன் அதில் காமம் மட்டுமே பிரதானமாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கும் , கணினி என்பதே பொழுது போக்க என்றும் இது ஒன்றும் உருப்படியாக இருக்காது என நினைப்பவர்களுக்கும் கலைஞர் இணையத்தில் இணைந்திருப்பது ஒரு சிறந்த பதிலாகவும் ,மறுப்பாகவும் இருக்கும்.
ஏனெனில் கலைஞர் ஏதும் அறியாத மனிதர் அல்ல. எழுத்து , பேச்சு , உரையாடல் இது தவிர்த்து மிகச் சிறந்த அரசியல் வாதியாகவும் திகழ்ந்தவர்.இணையத்தில் எழுதும் என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த மகிச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. இதற்க்கு முன் பிரபலங்கள் பலரும் இணையத்தில் இருந்தாலும் இவரின் வரவு எல்லாமட்ட மக்களிடமும் இணையம் சேரும் என நம்பலாம்.
நன்றி , நிற்க
இந்த வயதில் இவர் இணையத்தில் இணைந்து தன்னுடைய கருத்தையும் தான் இருக்கும் கழகம் செய்யும் சிறப்பான செயல்கள் எல்லா இடங்களில் சேரும் வேலையில் ......
திராவிடர் கழகத்தில் அண்ணா பிரிந்ததற்கும், தி மு க வில் இருந்து எம் ஜி ஆர் பிரிந்ததற்கும் அதே கழகத்தில் இருந்து வை கோ பிரிந்ததற்கும் சில அவர்களின் பார்வையில் காரணங்கள் உண்டு . இதற்கிடையில் வெளியேறிய சில அவர்களின் பெயர்களில் கழகத்தை ஆரம்பித்து கலகம் செய்து மீண்டும் இணைந்தும் இருக்கின்றனர் , சிலர் காணாமல் போனவர்களும் உண்டு . இப்படி நடப்பதை பற்றி கலைஞர் கவலைப் படாமால் போவதின் விளைவே
மதுரையில் நாங்க எல்லாம் அண்ணன் தி மு க என்கிற போஸ்டர் .
இதைப் பற்றி இவர் கண்டுக் கொள்ளாமல் போனால் , கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையாக கழகம் ஆவதற்கும் வாய்ப்பு உண்டு. இணையத்தில் இணைந்த இந்த வேலையில் , இந்த மாதிரி நடத்தைகளை வெளியேற்றினால் அவருக்கும் கழகத்திற்கும் நல்லது .
அம்புட்டு தான்
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
உடன் தகவலை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...