குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Thursday 4 April 2013

அம்பானி பிரதர்சும் அப்பிராணி மக்களும்


வணக்கம்


அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் , நீ அழுற மாதிரி அழுவனும் . இது தமிழ்நாடு மக்களுக்கு ரொம்பவும் பிட்சுப் போன மேட்டர். ஒரு பக்கம் மாறன் பிரதர்ஸ் கொடிகட்டி பிரபல பணக்காரகளில் முதல் நூறு இடத்தில் ( உலக அளவில் ) இடம் பிடித்து தமிழர்களின் பெருமையை உயர்த்துவார்கள். இன்னொரு பக்கம் இந்த்யாவின் பெருமையை உலகுக்கு உணர்த்த அம்பானி பிரதர்ஸ். 


அம்பானி தன்னுடைய சொத்தை காப்பாற்ற என்னவெல்லாம் செய்தார்கள் ? என்பதை சவுக்கு , வினவு போன்ற தளங்கள் புட்டு வைத்தால் நல்லது. சரி மீட்டருக்கு , சீ மேட்டருக்கு வருவோம். இனி மேல் அண்ணன் தம்பி உறவு எல்லாம் கிடையாது . சொத்தை பிரித்து சேவை செய்து வந்த பிரதர்ஸ் மீண்டும் இணைகிறார்கள் . மக்களுக்கு மேலும் சேவை செய்ய இன்னும் என்னவெல்லாம் நாடகம் நடத்தப் போராங்களோ ? வாழ்க பிரதர்ஸ் சம்மந்தப்பட்ட செய்த இதோ 


4ஜி சேவைக்காக பிரிந்த அம்பானி சகோதரர்கள் கைகோர்ப்பு 
 
 
சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு தனித்தனியே தொழில் செய்துவந்த அம்பானி சகோதரர்கள் முதன்முறையாக 4ஜி சேவைக்காக ரூ.1200 கோடிக்கு புதிய ஒப்பந்தம் செய்து கொண்டு இணைந்து களமிறங்குகின்றனர்.

பிரபல தொழிலதிபர் திருபாய் அம்பானியின் மறைவுக்கு பின்னர், அவரது மகன்கள் முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் கடந்த 2005 ஆம் ஆண்டில் சொத்துகளை பிரித்துக் கொண்டு பிரிந்தனர். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 1 லட்சத்து 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு ஆப்டிகல் பைபர் கேபிளை பதித்துள்ளது. இதன் மூலம், அந்நிறுவனம் தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது.

முகேஷ் அம்பானியும் 2010 ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பு துறையில் காலடி பதித்தார். ரிலையன்ஸ் ஜியோ என்ற அவரது நிறுவனம் 4ஜி சேவைகளை வழங்க உள்ளது. இந்நிறுவனத்துக்கு புதிதாக ஆப்டிகல் பைபர் கேபிள்களை பதிப்பதற்கு பதிலாக, அனில் அம்பானி நிறுவனத்தின் ஆப்டிகல் கேபிள்களை பயன்படுத்தி கொள்ள முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.1,200 கோடியை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு வழங்கும். இதுதவிர ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் செல்போன் கோபுரங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய ஒப்பந்தத்தால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் விலை 17.08% உயர்ந்தது.
 
மீண்டும் சிந்திப்போம் 
 
அவனி சிவா
 

No comments:

Post a Comment

கருத்து மேடை