வணக்கம்
நம்ம கந்தசாமி காசு விசயத்துல கறாரு அப்பிடின்னு சொல்றதை விட கஞ்சன் அப்படின்னு சொல்லலாம்.கந்தசாமி அப்பா முடியாம இருந்தாரு .டாக்டர் வந்து பார்த்துட்டு இனிமே ரொம்ப கஷ்டம் அப்பிடின்னார்.அவரு பேர்ல எக்கச்செக்க சொத்து இருந்ததால அவரு டாக்டர் கிட்ட இப்பிடி சொன்னாரு ,டாக்டர் எங்க அப்பாவ எப்பிடியாவது காப்பாத்துங்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அதோட உங்களுக்கு 5 லட்சம் தரேன் அப்படின்னார்.டாக்டரும் எல்லா விதமான சிகிச்சையும் சென்ஜார்.ஆனாலும் அவரு செத்து போயுட்டார் .கந்தசாமியும் மேலான காரியங்களை எவ்வளவு சுருக்கமா செய்ய முடியுமோ செஞ்சி கருமாதிய முடிச்சார்.டாக்டரும் அந்த 5 லட்சம் ரூபக்காக காத்திருந்து கந்தசமிட்ட கேட்டார்.
அதுக்கு கந்தசாமி எதுக்கு டாக்டர் உங்களுக்கு பணம் தரனும் அப்பிடின்னு கேட்டார்.என்ன இப்பிடி கேட்குறிங்க அப்பிடின்னு டாக்டர் கேட்க ,எங்க அப்பா என்ன ஆனாரு , இறந்து போயுட்டார்.அதுக்கு கந்தசாமி நீங்க தான் எங்க அப்பாவ கொன்னது ,ஐயோ அவரு தானா இறந்து போனார்.அப்ப நீங்க எங்க அப்பாவ காப்பதல்ல.அப்படின்னு கேட்க ,நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன் , அப்ப எங்க அப்பாவ கொன்னுடீங்க அப்பிடிதான மறுபடியும் கேட்க டாக்டர் உன்னோட பூசரிதனமும் வேண்டாம்,பொங்கலும் வேண்டாம் அப்பிடின்னு தலை தெறிக்க ஓடினர்.
--------------------------------------------------------------------------------------------------------------
நீதி : அப்பன் ,ஆத்தா ,சொந்த பந்தம் எவன் செத்தாலும் காசில தான் குறியா இருப்பாங்க
--------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பையனுக்கு 50 ரூபா தேவைப்பட்டது , கடவுள் கிட்டநாளா வேண்டினான் .ஒன்னும் நடக்கல்ல,முடிவா கடவுளுக்கு லெட்டர் எழுதினான்.
போஸ்ட் ஆபிஸ்ல லெட்டர் கடவுள் பேருல இருக்கிறத பார்த்துட்டு, அத கொண்டு போய் அவரோட மேலிடத்துக்கு அனுப்பி வச்சார் .
கடித்த பார்த்த அதிகாரி பாவப்பட்டு தன்னோட உதவியாளர் கிட்ட 20 ரூபா பணத்த கொடுத்து அந்த பையனுக்கு அனுப்ப சொன்னார் . அவரும் அனுப்பி வச்சார்.
பையனுக்கு 20 ரூபா கடைச்சது .ரொம்ப சந்தோசமா கடவுளுக்கு மறுபடியும் ஒரு கடிதம் எழுதினான்.
அன்புள்ள கடவுளுக்கு
தாங்கள் எனக்கு அனுப்பிய பணம் கிடைத்தது , மிக்க மகிழ்ச்சி ,நான் உனக்கு ஒரு முக்கியமான விசயத்தை தெருவிக்க விரும்புகிறேன்.அதாவது தாங்கள் எனக்கு அனுப்பிய பணம் ,ராஸ்டிரபதி பவனில் இருந்து வந்தது .அதில்முப்பது ரூபாய் சில ஊழல் செய்யும் கழுதைகளிடம் சிக்கி எனக்கு கிடைக்கவில்லை என்பதை தெருவித்து கொள்கிறேன்.
தாங்கள் எனக்கு அனுப்பிய பணம் கிடைத்தது , மிக்க மகிழ்ச்சி ,நான் உனக்கு ஒரு முக்கியமான விசயத்தை தெருவிக்க விரும்புகிறேன்.அதாவது தாங்கள் எனக்கு அனுப்பிய பணம் ,ராஸ்டிரபதி பவனில் இருந்து வந்தது .அதில்முப்பது ரூபாய் சில ஊழல் செய்யும் கழுதைகளிடம் சிக்கி எனக்கு கிடைக்கவில்லை என்பதை தெருவித்து கொள்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் சிந்திப்போம்
உண்மையுடன்
அவனி சிவா

