வணக்கம்
மதுரையில் பிறந்து மதுரையிளையிலே வளர்வது என்ன ஒரு கஷ்டம் என்பது மதுரையில் பிறந்து மதுரையில் வசிப்பவருக்கு மட்டும் தான் தெரியும்.
மதுரையின் பெருமை வரிசையினை எவ்வளவோ சொல்லலாம்.24 மணி நேரமும் ஊர் விழித்திருக்கும் .( இப்போது கிடையாது ) பொங்கல் வகை வகையாய் கிடைக்கும். இட்லி நான்கு வகை சட்னியுடன் கிடைக்கும்
டீகடைக் காட்டிலும் எல்லா சந்து முக்குகளிலும் ( தெரு முனை ) வடை கடை கண்டிப்பாய் இருக்கும்.
பல திரை அரங்குகள் மூடப் பட்டாலும் இன்றும் சில இடங்களில் மிகப் பழைய திரை படங்கள் திரையிடப் பட்டு பணம் அள்ளப் படுகின்றன,
வணிகமும் ஒரு வகை படுத்தப் பட்டு மிகக் சிறப்பாய் பூகோள ரீதியில் அமைக்கப் பட்டன.மீனாட்சி கோவிலை சுற்றி , முதல் சுற்று நகை வியாபாரம் என்று தொடர்ந்து அனனைத்து வகை வணிகமும் அந்த கோவிலை சுற்றியே முடிந்து விடும்,சுருக்கமாக இப்போதுள்ள தலை முறையினருக்கு விளங்கும் வகையில் சொன்னால்,காபி தூள் முதல் காண்டம் வரை அனைத்தையும் இந்த பகுதியில் வாங்கி விடலாம்.
அரசியலாலும் மதுரை மிகப் பெரிய பெருமை பெற்றது. இதை விட முக்கியமான வெவகாரம் என்னவென்றால்.
1980 க்கு பிறகு பிறந்த பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.அனைவருக்கும் அல்ல வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பது.
தவக்களை ஆரம்பித்து திமுசுக்கட்டை வரை எவர் நடிக்க வந்தாலும் , அதாவது திரையில் தோன்றினாலும் ரசிகர் மன்றம் அமைப்பது மதுரை மக்கள் இன்றளவும் மாற வில்லை .சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளி வந்து ஓடிக் கொண்டுருக்கும் okok என்கிற படத்தில் நடித்தப் பிறகு , மதுரையில் பூப்புனித நீராட்டு விழாவிற்கு அழைபிதளிலும், திருமண வரவேற்பிலும் உதய நிதியை மையப் படுத்தி சில சுவரொட்டிகள்.இதெல்லாம் மீறி ஒரு சுவரொட்டியில் நிதியை குறுப்பிட்டு வந்த சேதி " போதி தர்மரே " வருக.
அவரும் மதுரையில் கூறிய செய்தியை பாருங்கள்.அடுத்தப் படம் வெளியானப் பிறகு ரசிகர் மன்றம் அமைப்பது பற்றி முடிவு செயப்படும் மதுரையில் உதய நிதி.
சில விசயங்களில் மதுரை மக்கள் எப்போது மாறுவார்கள் .
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா.
ஹி..ஹி .ஹி ..மதுரை மக்கள் பாசத்திலும் கோவத்திலும் ஒரே மாதிரி இருப்பார்கள்
ReplyDelete