வணக்கம்
நான் வசிக்கும் பகுதியில் ஒரு பெருமாள் கோவிலை நிர்மாணித்து , இன்று கும்பாபிஷேகம் இனிதே முடிந்தது. பல பேர் ஆசிர்வாதம் வாங்கிப் போனார்கள்.இரவு வானவேடிக்கை நிகழ்சிகள் உண்டு . பார்க்க காத்திருக்கிறேன் குழந்தைகளுடன். பகுதியில் அணைத்து கடைகளும் அடைக்கப்பட்டு , அவரவர் சொந்த பந்தங்களுடன் வந்திருந்தனர்.காலையில் இருந்து விளையாடமால் இருந்த சிறுவர்கள் , பக்தர்களை சோதிக்கும் விளையாட்டை ஆரம்பித்தனர்.
அதாகப்பட்டது என்னவெனில் ஒரு கிழிந்த பத்து ரூபாய் நோட்டு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.அதை வைத்து யாரோ ஒரு புண்ணியவான் விளையாட்டை ஆரம்பித்தான்.பெருமாளை பார்க்க வரும் பக்தர்கள் தரிசிக்க ஒரே வழி தான் இருந்தது. ( வேறு வழிகள் வேலை நடைபெற்று வருகிறது ) அது தான் நண்பர்களுக்கு வசதியாய் போனது.உள்ளே செல்ல ஏழு படிகள் உண்டு , ஏதாவது ஒரு படியில் அந்த நோட்டை வைக்க வேண்டியது அதற்குப் பிறகு எல்லோரும் ( சுமார் நாற்பது பேர் ) ஒரு ஓரத்தில் நிற்க, மேலே செல்லும் அணைத்து பக்தர்களும் அந்த நோட்டை எடுத்து உள்ளே வைக்கப் போக ஊ வென கூச்சல் போட்டு அதனை வங்கி மறுபடியும்.
இது என்னடா விளையாட்டு என நான் ஒருவனிடம் கேட்டேன்.அனைவரும் சுற்றி வந்து ஒரே குரலில் சொன்னார்கள் , இந்த நோட்டை எடுக்கும் எவரும் இது யாருடையது என்று கேட்கும் வரை விளையாட இருப்பதை சொன்னார்கள்.இரண்டு மணி நேரம் யாரும் கேட்க்க வில்லை.பெரிய மனிதர்கள் போங்கடா என விரட்டி விட்டார்கள்.
பாவம் பெருமாள் , வந்த எவனும் ( மன்னிக்கவும் ) பயந்து தான் வந்திருக்கிறார்கள் , எவரும் பக்திக்கு வரவில்லை.
நான் வசிக்கும் பகுதியில் ஒரு பெருமாள் கோவிலை நிர்மாணித்து , இன்று கும்பாபிஷேகம் இனிதே முடிந்தது. பல பேர் ஆசிர்வாதம் வாங்கிப் போனார்கள்.இரவு வானவேடிக்கை நிகழ்சிகள் உண்டு . பார்க்க காத்திருக்கிறேன் குழந்தைகளுடன். பகுதியில் அணைத்து கடைகளும் அடைக்கப்பட்டு , அவரவர் சொந்த பந்தங்களுடன் வந்திருந்தனர்.காலையில் இருந்து விளையாடமால் இருந்த சிறுவர்கள் , பக்தர்களை சோதிக்கும் விளையாட்டை ஆரம்பித்தனர்.
அதாகப்பட்டது என்னவெனில் ஒரு கிழிந்த பத்து ரூபாய் நோட்டு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.அதை வைத்து யாரோ ஒரு புண்ணியவான் விளையாட்டை ஆரம்பித்தான்.பெருமாளை பார்க்க வரும் பக்தர்கள் தரிசிக்க ஒரே வழி தான் இருந்தது. ( வேறு வழிகள் வேலை நடைபெற்று வருகிறது ) அது தான் நண்பர்களுக்கு வசதியாய் போனது.உள்ளே செல்ல ஏழு படிகள் உண்டு , ஏதாவது ஒரு படியில் அந்த நோட்டை வைக்க வேண்டியது அதற்குப் பிறகு எல்லோரும் ( சுமார் நாற்பது பேர் ) ஒரு ஓரத்தில் நிற்க, மேலே செல்லும் அணைத்து பக்தர்களும் அந்த நோட்டை எடுத்து உள்ளே வைக்கப் போக ஊ வென கூச்சல் போட்டு அதனை வங்கி மறுபடியும்.
இது என்னடா விளையாட்டு என நான் ஒருவனிடம் கேட்டேன்.அனைவரும் சுற்றி வந்து ஒரே குரலில் சொன்னார்கள் , இந்த நோட்டை எடுக்கும் எவரும் இது யாருடையது என்று கேட்கும் வரை விளையாட இருப்பதை சொன்னார்கள்.இரண்டு மணி நேரம் யாரும் கேட்க்க வில்லை.பெரிய மனிதர்கள் போங்கடா என விரட்டி விட்டார்கள்.
பாவம் பெருமாள் , வந்த எவனும் ( மன்னிக்கவும் ) பயந்து தான் வந்திருக்கிறார்கள் , எவரும் பக்திக்கு வரவில்லை.
No comments:
Post a Comment
கருத்து மேடை