வணக்கம்
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
நம்ம சாப்பிட்டாலும் சாப்பிடாம போனாலும், தூங்கினாலும் தூங்காமல் போனாலும், சம்பாதித்தாலும் சம்பாதிக்காமல் போனாலும், காதல், கல்யாணம், கருமாதி, கவுச்சித் தனம், என்ன செய்தாலும், செய்யாமல் போனாலும் காலம் நம்மிடையே நிற்பதில்லை. சில நிகழ்வுகளை பாருங்கள் நாம் செய்ய வேண்டிய காரியம் நிறைய இருப்பதை நமக்கு நினைவுறுத்தும்.
மும்பையில் இன்னும் ஒரு திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே வெளிவந்து பதினாறு வருடங்கள் ஆகின்றன. ( இப்பதான் வந்த மாதிரி இருந்துச்சு )
இந்தியாவின் மெட்ரோ ரயில் டெல்லியில் ஓட ஆரம்பித்து பத்து வருடங்கள்
ஆகின்றன.( இன்னும் இந்தியா முழுவதும் வருவதற்கு எத்தனை வருடங்கள் ஆகுமோ )
மதர் தெரசா இறந்து பதினைத்து வருடங்கள்
ஆஸ்கர் விருது வாங்கிய ரஹ்மான் திரை இசைக்கு வந்து இருபது வருடங்கள் . ( இன்னும் சின்ன பையன் போல இருக்கிறார் )
ஐஸ்வர்யா ராய் , சுஸ்மிதா சென் இவர்கள் உலகப் புகழ் பெற்ற தினம் பதினேழு வருடங்கள்.
தூர்தர்சனில் வெளிவரும் ஜங்கிள் புக் ஒளி பரப்ப ஆரம்பித்து பதினைந்து வருடங்களுக்கு மேல் .
விண்டோஸ் XP வெளிவந்து பத்து வருடங்களுக்கு மேல் . ( இன்னும் சரியா பழகாத மாணவர்களும் , மக்களும் உண்டு ) வெளிவந்தது 2001 ல்.
இப்படி பல நிகழ்வுகள் மேலே குறிப்பட்டது எல்லாம் இப்போது நடந்தது போலவே இருக்கிறது . இப்படி பல நிகழ்வுகள் நடந்துள்ளது . நாம் யாரை ஏமாற்ற நினைத்தாலும் காலம் நம்மை கண்டிப்பாய் தண்டிக்கும் . அப்பாடா பதிவில் மெசேஜ் சொல்லியாச்சு .
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
நல்ல மெசேஜ் நண்பரே... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDelete