வணக்கம்
வாழ்கையில் நாம் யாரையோ சார்ந்தே வாழ்கிறோம். எல்லா உறவுகளும் நமக்கு நெருக்கத்தையும் , உருக்கத்தையும் , கிறக்கத்தையும் தருபவை . பணம் , புகழ் , வெளிச்சம் இது நமக்கு தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன . சிறு வயதில் விளையாட்டிலும் , வாலிப வயதில் காதலிலும் ,நடுத்தர வயதில் பயத்திலும் , முதுமை காலத்தில் அன்பிலும் வாழ்க்கை ஓடி விடுகின்றன.
இவையல்லாம் இயல்பாய் இருப்பவை தான் . நடுத்தர வயதில் பணமும் , புகழ் சம்பாதிக்க குடும்பத்தினரை மட்டும் ,அதிலும் ஒருவரை மட்டும் சார்ந்து கால மாற்றத்தில் ஒன்றும் இல்லாமலும் போவதும் உண்டு. குடும்பத்தினர் மட்டும் அல்லாது நண்பர்கள் , பணியாற்றும் நண்பர்கள் உண்டு.
இன்று காலையில் ஒருவரை சந்தித்தேன் . அவரின் தோற்றம் என்னை நிலைகுலைய செய்யவில்லை .அடிமனதில் சிறு மகிச்சியை உணர்ந்தேன். அவரிடம் பணம் பெற்று , குடுக்க முடியாமல் அவரிடம் அவமானப் பட்டு மீண்டும் அவரிடமே பணத்திற்காக போய் நின்றுள்ளேன் .
மதுரையில் இன்று லலிதா நகை மாளிகை இருந்த ஒரு பகுதியில் இருந்தது கோல்டன் ஜுவல் பாரடைஸ். நகை வியாபாரம் மட்டும் இன்றி வீட்டு மனை வியாபாரத்திலும் ஈடுபட்டார்.அப்போது எல்லாம் இப்போது இருப்பதை போன்று ஜடாமுனி , தெற்கு ஆவணி வீதிகளில் மட்டுமே நகை கடைகள் இருந்தன . மிகப் பிரமாண்டமாய் இவர் நகைக்கடை திறந்தார். கூடவே பர்னிச்சர் கடையும் , இதுவே இவரும் முதல் வியாபாரம். ஆட்சியில் இருந்தவர்களும் , காவல் துறையும், ஆட்சியரும் , முக்கிய பிரமுகர்களும் அவரின் வியாபார நடைமுறைகளுக்கு மிகவும் உதவியாய் இருந்தனர்.
அவருக்கு மூன்று தம்பிகள் , ஒருவரை தவிர மற்ற இருவரும் அவருடைய நிழலிலும் , அவருடைய வியாபாரத்தையும் பணம் கொடுக்கல் , வாங்கல் தொழிலும் ஈடுபட்டனர்.( எல்லா மட்டத்திலும் அவருக்கு அப்போது செல்வாக்கு இருந்ததால் ) சில காலங்களுக்கு பிறகு அவரின் உண்மை முகம் வெளியே வர , தவறும் வரிசையாக வந்தது. சமயத்தில் சரியானவையும் , தவறாகவே அமைந்தது. விதி அவரை வீதிக்கு அழைத்து வந்தது .
அவருடைய தம்பிகளில் ஒருவர் ஊரை விட்டு ஓடிப் போனார். ஒருவர் பர்னிச்சர் கடையில் வேலைப் பார்த்து வருகிறார்.
அவரை சாராமல் இருந்த இன்னொருவர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஏதோ சார்ந்திருந்தால் தவறே நடக்கும் என்கிற மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டாம் .
வாழ்க்கை என்பது யாரோ ஒருவரை ஒருவர் சார்ந்து தான் போகும் . அண்ணலும் நம்முடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தால் மகிழ்சியாய் இருக்கும் என்பதை காலையில் பார்த்த மனிதரை பார்த்ததும் புரிந்தது
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
வாழ்க்கை என்பது யாரோ ஒருவரை ஒருவர் சார்ந்து தான் போகும் . அண்ணலும் நம்முடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தால் மகிழ்சியாய் இருக்கும் என்பதை காலையில் பார்த்த மனிதரை பார்த்ததும் புரிந்தது//
ReplyDeleteமிகச் சரியான கருத்து
எந்த நிலையில் இருந்தாலும்
தனித்துவத்தைக் காப்ப்தே என்றும் நல்லது
நல்ல வழிகாட்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்று..
ReplyDelete