வணக்கம்
ஒரு முறை உண்மை பேசிவிட்டு மறந்து விட்டாலும் கூட சொன்ன ,கேட்ட , படித்த , செய்திகள் மீண்டும் எந்த வித நெருக்கம் இன்றி அப்படியே வரும் . பொய் பேசினாலோ , எழுதினாலோ ,சொன்னாலோ அதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் .
தமிழ் தாத்தா நம் வள்ளுவர் சில இடங்களில் பொய்யையும் உண்மைககாக்க பயன் படுத்தலாம் எனக் கூறுகிறார் , அது உண்மைத் தன்மை இழந்து விடாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் .
சில விசயங்களை நினைவுப் படுத்துகிறேன் . உண்மையின் வெளிச்சம் நமக்குப் புலப்படும் . நேற்று முன் தினம் நிகழ்ந்த ஒரு நிகழ்வு இது .
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற நாடுகளில் அல்ஜிரீய நாட்டை சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர் கலந்துக் கொண்டார் . அவரின் தகுதி சுற்றில் அவர் பங்கேற்க முடியாது என ஒலிம்பிக் சங்கம் தெரிவித்தது , அதனை அந்த நாடு விளையாட்டு துறைக்கு அனுப்பி வைத்தது . தகுதி சுற்ற பங்கேற்ற்றப் நேரத்தில் அவரின் கால்கள் முறிவு ஏற்ப்பட்டு இருந்தாதால் அவரால் அவரின் திறனை வெளிக் கொண்டு வர முடியாமல் போனது . இதனை மிகத் தெளிவாக சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நடந்த உண்மையை விளக்கி , கடிதம் அவரின் சார்பாக அந்த நாட்டின் விளையாட்டுத் துறையினரால் அனுப்பப்பட்டது . ஏற்றுக் கொண்டார்கள் ஒலிம்பிக் சம்மேளத்தினர் .
முடிவில் அவர் வென்றது தங்கத்தை ,இருக்கிற உண்மையை சொன்னால் கண்டிப்பாய் தங்கம் கிடைக்கும் அல்லது தங்கம் மாதிரி பொண்டாட்டி கிடைக்கும் . கல்யாணாம் முடிஞ்சவர்களுக்கு தகரம் கூட கிடைக்காது ( பொய் சொல்லி இருந்தால் )
முடிக்கிறதுக்கு முன்னாடி உண்மையை ஒரு தத்துவத்தோடு சொல்வோம் .
வெள்ளை என்பது ஒரு நிறம் தான் அழகு அல்ல .
ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான் அறிவு அல்ல .
இப்படி உண்மையா யோசிங்க கண்டிப்பாய் வெற்றி கிட்டும் . அனைவரும் வெற்றிப் பெறவே , படம் பார்க்கவும்
உண்மையுடன் ( சின்ன சின்ன பொய்யுடன் )
அவனி சிவா
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
அருமையாக முடித்துள்ளீர்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி…