குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 19 July 2013

கடைய எப்ப சார் தொரப்பிங்க ? அரசுக்கு ஒரு அவசர வேண்டுகோள்.

வணக்கம் 


நம்ம தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்கும் , எல்லா வயதினருக்கும் ஒரு ஒற்றுமை இருக்குன்னு நினைக்கிறேன்.வயது வாரியா சில ஒற்றுமை   பார்ப்போம் .பிறகு அரசின் வேண்டுகோளை வைப்போம்.இது இப்போ உள்ள மக்களின் அடிப்படையில் .

குழந்தைகள் - இவங்களுக்கு யாரு  சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை .அது எப்படி எல்லாரும்  டாம் & ஜெர்ரி பார்த்க்கிட்டு இருந்தாங்க , பின்பு டோராவுக்கு மாறினாங்க .இப்போ நிஞ்சா ஹட்டரிக்கு.என்ன மாயம் என்பதே புரியவில்லை.அது எப்படி எல்லா குழந்தைகளுக்கும் ஒரே வேவ் லென்த் .


வாலிபப்பசங்க - அந்தக் காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை இவர்களும் ஒரே மனநிலையில் . சினிமாவை மட்டும் எடுத்துக் கொள்வோம்.குஷ்பு பிடிச்சா எல்லாருக்கும் பிடிச்சது.பிறகு சிம்ரனை , இப்போ ஹன்சிகா .

வீட்டுப்  பெண்கள் - மாமியாரை போட்டு தாக்குறது , மருமகளை அடிச்சு நொருக்கிறது , ஆண்கள் எல்லாம் பாவாமாய் சித்தரிப்பது.இப்படி என்ன  
கருமாந்திர கதையை எடுத்தாலும் ,அது எல்லா பெண்களுக்கும் பிடிக்கிறது.

பொதுவா - அஞ்சி வருசத்துக்கு ஒரு முறை நமக்கு ஒரு வாய்ப்பு  குடுப்பாங்க , நாம நல்லா இருக்கிறதுக்கு .அப்போயும் பாரபட்சம் இல்லாமா ஒரேடியா ,ஒரே ஆட்கள கொண்டு வந்து நாசமா போறது.

இப்போ அரசுக்கு வேண்டுகோள்- இந்த டாஸ்மாக் கடைய காலை 10 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 10 மணி வரை குடிமகன்களுக்கு ஊத்திகுடுக்குது .  நான் என்னுடைய வீட்டிலுருந்து அலுவலகம் வரும் வரை இருக்கும் டாஸ்மாக் கடைகள் மொத்தம் 12 இருக்கு ( மெயின் ரோட்டில் உள்ளது மட்டும் ) அதில் சுமார் எட்டுகக்கடைகளில் காலை 6 மணிக்கு  போனாலும் பார் கதவை ஒரு மாதிரியா தொறந்து அருமையா வியாபாரம் நடக்குது.அதே போல் இரவு 10 மணிக்குப் பிறகும் நடக்குது . இன்னைக்கு மட்டும் இல்ல நாள் தோறும் நடக்கின்ற நிகழ்வு . இது போக மூன்று பெட்டிக் கடைகளிலும் சரக்கு கிடைக்கின்றன . 

ஆகவே , அரசு கவனத்தில் கொண்டு பொது மக்களை காப்பாற்ற முழுவதுமாய் மூடிவிடுவது நல்லது.அதற்கு எல்லாம்  சான்சே இல்லை எனும் பட்சத்தில் காலை 6 மணிக்கு திறந்து 12 மணி வரை திறந்து வைத்தால் . அடுத்த தேர்தலின் போது வாசிங் மிசின்,DVD , வாக்குவம் கிளீனர், இது போல் அணைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஏதுவா இருக்கும்.

இதுல என்ன ஒற்றுமை என்னன்னா இது எல்லா ஊரிலும்  நடக்கும் என நம்புகிறேன்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

1 comment:

கருத்து மேடை