குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)
Showing posts with label ஒற்றுமை. Show all posts
Showing posts with label ஒற்றுமை. Show all posts

Thursday, 25 July 2013

டைம்பாஸ் இதழில் வரவேண்டிய விளையாட்டு - 18 +

வணக்கம் 


சில   படங்களை கீழே  இணைத்துள்ளேன்.அதனை கவனமாக சிலநிமிடங்கள் பாருங்கள். பார்த்த பின்பு இந்த  அழகிகளிடம் இருக்கும் ஒற்றுமை என்ன ? என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



இந்த  படங்களை பார்த்த பின்பு பெண்களிடமும்,ஆண்களிடமும் இதே கேள்வி கேட்கப் பட்டது.பெண்கள் 15 வினாடிகளிலும் , ஆண்கள் 30 வினாடிகளிலும் பதில் கூறி உள்ளனர்.பெண்களில் 100 ல் 99 பேர் சரியான பதிலையும் , ஆண்களில் 100 பெரும் தவறான பதிலையே தந்துள்ளனர்.





சரியான பதில் - பதிவின் கடைசியில்



































எத்தனை முறை பார்த்தீங்க ? கரைட்டா கமெண்ட்ல போடுங்க பார்ப்போம்.

என்ன ஒற்றுமைன்னா ?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
எந்த அழகிகளும் கழுத்தில் எந்த வித அணிகலன்களை அணியாமால் இருப்பார்கள் . ( விகடன் வாசகர்கள் கண்டிப்பாய் கண்டுபிடித்திருக்க வாய்ப்பு உண்டு.)


பெண்களின் கண்களுக்கு கழுத்து தெரிந்தது , பல ஆண்களுக்கு தெரியவில்லை .


மீண்டும் சிந்திப்போம்
 அவனி சிவா

Friday, 19 July 2013

கடைய எப்ப சார் தொரப்பிங்க ? அரசுக்கு ஒரு அவசர வேண்டுகோள்.

வணக்கம் 


நம்ம தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்கும் , எல்லா வயதினருக்கும் ஒரு ஒற்றுமை இருக்குன்னு நினைக்கிறேன்.வயது வாரியா சில ஒற்றுமை   பார்ப்போம் .பிறகு அரசின் வேண்டுகோளை வைப்போம்.இது இப்போ உள்ள மக்களின் அடிப்படையில் .

குழந்தைகள் - இவங்களுக்கு யாரு  சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை .அது எப்படி எல்லாரும்  டாம் & ஜெர்ரி பார்த்க்கிட்டு இருந்தாங்க , பின்பு டோராவுக்கு மாறினாங்க .இப்போ நிஞ்சா ஹட்டரிக்கு.என்ன மாயம் என்பதே புரியவில்லை.அது எப்படி எல்லா குழந்தைகளுக்கும் ஒரே வேவ் லென்த் .


வாலிபப்பசங்க - அந்தக் காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை இவர்களும் ஒரே மனநிலையில் . சினிமாவை மட்டும் எடுத்துக் கொள்வோம்.குஷ்பு பிடிச்சா எல்லாருக்கும் பிடிச்சது.பிறகு சிம்ரனை , இப்போ ஹன்சிகா .

வீட்டுப்  பெண்கள் - மாமியாரை போட்டு தாக்குறது , மருமகளை அடிச்சு நொருக்கிறது , ஆண்கள் எல்லாம் பாவாமாய் சித்தரிப்பது.இப்படி என்ன  
கருமாந்திர கதையை எடுத்தாலும் ,அது எல்லா பெண்களுக்கும் பிடிக்கிறது.

பொதுவா - அஞ்சி வருசத்துக்கு ஒரு முறை நமக்கு ஒரு வாய்ப்பு  குடுப்பாங்க , நாம நல்லா இருக்கிறதுக்கு .அப்போயும் பாரபட்சம் இல்லாமா ஒரேடியா ,ஒரே ஆட்கள கொண்டு வந்து நாசமா போறது.

இப்போ அரசுக்கு வேண்டுகோள்- இந்த டாஸ்மாக் கடைய காலை 10 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 10 மணி வரை குடிமகன்களுக்கு ஊத்திகுடுக்குது .  நான் என்னுடைய வீட்டிலுருந்து அலுவலகம் வரும் வரை இருக்கும் டாஸ்மாக் கடைகள் மொத்தம் 12 இருக்கு ( மெயின் ரோட்டில் உள்ளது மட்டும் ) அதில் சுமார் எட்டுகக்கடைகளில் காலை 6 மணிக்கு  போனாலும் பார் கதவை ஒரு மாதிரியா தொறந்து அருமையா வியாபாரம் நடக்குது.அதே போல் இரவு 10 மணிக்குப் பிறகும் நடக்குது . இன்னைக்கு மட்டும் இல்ல நாள் தோறும் நடக்கின்ற நிகழ்வு . இது போக மூன்று பெட்டிக் கடைகளிலும் சரக்கு கிடைக்கின்றன . 

ஆகவே , அரசு கவனத்தில் கொண்டு பொது மக்களை காப்பாற்ற முழுவதுமாய் மூடிவிடுவது நல்லது.அதற்கு எல்லாம்  சான்சே இல்லை எனும் பட்சத்தில் காலை 6 மணிக்கு திறந்து 12 மணி வரை திறந்து வைத்தால் . அடுத்த தேர்தலின் போது வாசிங் மிசின்,DVD , வாக்குவம் கிளீனர், இது போல் அணைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஏதுவா இருக்கும்.

இதுல என்ன ஒற்றுமை என்னன்னா இது எல்லா ஊரிலும்  நடக்கும் என நம்புகிறேன்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

Monday, 19 November 2012

ஒற்றுமை இப்படியா இருக்கணும் ?

வணக்கம்
  1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம்
மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.
 
 
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  

Tuesday, 13 December 2011

கொலை வெறி உங்களுக்கு வந்தா, இதப் பாருங்க



இணையத்தில் எங்கு பாரத்தாலும் Why This கொலவெறி பரபரப்பாகவே காணப்படுகிறது. இந்தக் கொலவெறியக் கொண்டாடும் மக்கள் பலர் அறிந்திராத  சில காட்சிப் படங்கள் இவை.
இவை சாதாரண இடங்களில் நடந்வை அல்ல. இலங்கை மற்றும் இந்திய நாடாளுமன்றங்களில் நடந்த சம்பவங்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எவ்வளவு கொலவெறியோடு அடித்துக் கொள்கின்றார்கள்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் 2011 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை, கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்சவினால்  வாசிக்கப்பட்ட போது, அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் இவை.
பாராளுமன்றத்தின் Off Video கமெரக்களினால் படம் பிடிக்கப்பட்டிருந்தது. எனினும் அன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்த தொலைக்காட்சிகள் குறித்த வன்முறை சம்பவங்கள் தொடங்கப்பட்ட போது, உடனடியாக இதை தவிர்த்து கொண்டதுடன், வெற்று பாராளுமன்ற புகைப்படத்தை அதற்கு பதிலாக காண்பித்திருந்தது.
இது 'திருமண ஜோடிகள் இல்லாது, திருமண ரிஷப்ஷன் மண்டபத்தை மாத்திரம் படம்பிடிக்கும் காட்சிகளுக்கு ஒப்பானது' என வர்ணித்திருக்கும் Gossip Lanka இணையதளம், உண்மையாக அப்போது பாராளுமன்றில் என்ன நடைபெற்றது என்பதை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது.
இனிவருவபவை இந்திய நாடாளுமன்ற அவைகளில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக தொலைக்காட்சிப் பதிவுகளில் வெளிவந்தவை.
இவ்வளவு சண்டை பாராளுமன்றங்களில் நடைபெறும் போது, குழாயடிச் சண்டைப் பெண்களைப் பற்றி மட்டும் குறைப்பட்டுக் கொள்வது ஏன்..?

நன்றி : 4 தமிழ் மீடியா