குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)
Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Tuesday, 9 July 2013

இளவரசன் மற்றும் திவ்யா அவர்களுக்கு





 வணக்கம் 

 இளவரசன் இறந்தப் பின் அதனை பற்றி போஸ்ட்மார்டம் செய்து அத்தனையையும் இழிவுபடுத்த விரும்பவில்லை.தவறு யார் மேல் என்று பேசி எல்லோரையும் நியாயபடுத்த விரும்பவில்லை . சம்பவங்களை பற்றி பலர் பல மாதிரி கருத்து  கூறினாலும் எதுவும் பொருந்துமா என தெரியவில்லை .படித்த கதையை  இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன் இளவரசன் மற்றும் திவ்யா அவர்களுக்கும் , அவர்களை போன்றவர்களுக்கும் . 



 ஒரு வியட்நாமியக் கதை ,

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?



மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Saturday, 9 March 2013

கமெண்ட் போடாதவங்க ரத்தம் கக்கியா சாவாங்க ?



 வணக்கம்


கலியுகம் போய் வலையுகம் வந்தாலும் , கலியுக காலத்திற்கு முன்னிலிருந்து ஏதோ ஒரு வடிவத்தில் ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன் , ஒரு நோட்டீஸ் விநியோகம் செய்யப்படும் .அதில் இதை படித்தவர்கள் , இதே போல் நூறு நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யவேண்டும்.இதனை உதாசீனப் படுத்தினால் சில நாட்களில் ஒரு  கெட்டக் காரியம் ஒன்று நடக்கும் என்று எச்சரிக்கை மணி வேறு.நாற்பதை நெருங்கிய நண்பர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.அதற்க்கு அடுத்த தலை முறைக்கு மொபைலில் இது போல , இதனை இத்தனை பேருக்கு farward செய்ய வேண்டும் என்று.இது இன்றும் நின்ற பாடில்லை . இது வேறு மாதிரி ,காலத்திற்கு ஏற்ற மாற்றம் .  முகப்புதகத்தில் ஒரு செய்தி போடுவார்களாம் . அதற்க்கு நாம் கமெண்ட் போட வேண்டும்.போடாத பட்சத்தில் .......




 இதோ என் முகப்புதகத்தில் வந்த செய்தி .......



 இது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்

கண்டமன்னூர் பக்கத்தில் உள்ள காரமடை கோவிலில் சாமி கும்பிட சென்ற தம்பதியினர் கோவில் வளாகத்தில் இரண்டு மாத குழந்தையை வைத்துவிட்டு சாப்பிட்டு கைகழுவி விட்டு பார்த்த அந்த தம்பதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர், அங்கு அந்த கோவிலுக்கு சொந்தமான பாம்பும் , அந்த இரண்டு மாத குழந்தையும் பேசிக்கொண்டு இருந்தனர், இவர்கள் வருவதை பார்த்த அந்த பாம்பு இவர்களிடம் 


"இப்பொழுது நீங்கள் பார்த்த விஷயத்தை ஸ்டேடஸ்-ஆ போடுங்க, அதை படிப்பவர்கள் லைக் போட்டு சேர் செய்யவேண்டும் அப்படி செய்தால் லைக், சேர் செய்த 15 நாட்களில் அவர்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்கும்" என்று சொல்லி அந்த பாம்பு மறைந்து விட்டது.....


உடனடியாக அந்த தம்பதியினர் ஸ்டேடஸ் போட்டனர், அவர்கள் போட்டு 12 நாட்களில் அவர்களுக்கு சொந்தமான வீட்டின் மீது இருந்த கேஸ் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது
இதை படித்து விட்டு லைக் ,சேர் செய்யாமல் அலட்சியபடுத்திய பட்டுகோட்டையை சேர்த்த பரந்தாமன் 2 நாட்களில் ரத்தம் கக்கி செத்தான்.



மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா