வணக்கம்
சரியான பாதையாக இருந்தாலும் ,அங்கேயே உட்கார்ந்து விட்டால் ,நசுக்கப்பட்டுவிடுவோம்.
எல்லோரும் ஒரே திசையில் இழுத்தால் , இந்த உலகம் தலைகீழாக புரண்டு விடும். -
எதையும் அறியாதாவனக்கு எந்த சந்தேகமும் வராது. -
மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்வது நல்ல விசயமாக இருக்கலாம்,ஆனால் மறந்து விடும் ஆற்றல் தான் உயர் பண்பின் அடையாளம்.
பணம், கடல் நீரைப் போன்றது , அதிகமாக குடிக்க குடிக்க தாகம் அதிகரிக்கும்.
மிருகங்களிடம் உள்ள அபாரமான விஷயம்,வளவள பேச்சு இல்லாதுதான்.
நண்பனை ரகசியமாக கண்டனம் செய்யுங்கள்,ஆனால் போற்றும் போது பகிரங்கமாய் புகழ்ந்து பேசுங்கள்.
தனது சுயத்தை ஒருவர் ஏமாற்றுவது தான் , அணைத்து மோசடிகளிலும் மகா மோசமான மோசடி.
நண்பர்கள் தரும் அறிவுரை சரியாக இருந்தாலும்,தவறாக இருந்தாலும் ,குருட்டுத்தனமாய் பின்பற்றக்கூடாது,ஆராய்ந்தே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
அனைவரும் சிந்திக்க வேண்டிய அற்புதமான வரிகள். உங்கள் நன்னோக்கம் கொண்ட முயற்சிக்கு நன்றி அவனி சிவா.!
ReplyDelete