வணக்கம்
சணங்க மட்டும் வாக்குப் போட்டு சனாதிபதியை தேர்ந்தெடுத்தால் காங் மீண்டும் மண்ணை கவ்வி இருக்கும். அவரின் ஒரே சாதனை கல்யாணம் ஆனா நாளில் இருந்து இன்று வரை மனைவியுடன் பிணக்கு வந்தது இல்லையாம் . இனிமேலும் வராது அதான் மேப்பில் பார்த்த எல்லா நாடுகளையும் பார்க்க போகலாம் . மனைவியை பார்க்க நேரமும் இருக்காது அப்படியே மனைவி நச்சரித்தால் அவர்களையும் அழைத்துப் போகலாம் .
ஒரு வழியாக முகர்ஜி குடிமகன் ஆகிவிட்டார். ராணியை தெரிந்த அளவிற்கு பிரணாப்பை குடிமக்களுக்கு தெரியவில்லை - அது போன மாதம் வரை , ஆனால் இப்போது அது இல்லை , இதனை விளக்ககமாக விளக்கவே பதிவு.
பிரணாப் யார் என்று உங்களுக்கு தெரிந்த அளவிற்கு எனக்கு தெரியாது. முன்னாள் அமைச்சர் , முன்னாள் மந்திரி , முன்னாள் எம் பி , பிறகு அது இந்நாள் ஆனது . முன்பு வகித்த பதவிகளில் எதுவும் , எந்த ஆணியையும் புடிங்கினது கிடையாது . அம்பானியை வளர்த்து விட்டதை தவிற , இனி பல வியாபாரிகள் வளர்வார்கள் . மக்கள் எப்ப்போதும் போல் ...................................
இது இப்படி இருக்க இவரு சனாதிபதி ஆனதற்கு மதுரையில் தமிழர்களை காத்த வாழும் மகாத்மா ( கள் ) இருக்கும் காங்கிரஸ் கட்சி ( இன்னும் பல பெருமைகளை சொல்லலாம் காங் பற்றி பிறகு அதுவே ஒரு பதிவாகிடும் )
இனிப்பு வழங்கினார்கள் .
சணங்க மட்டும் வாக்குப் போட்டு சனாதிபதியை தேர்ந்தெடுத்தால் காங் மீண்டும் மண்ணை கவ்வி இருக்கும். அவரின் ஒரே சாதனை கல்யாணம் ஆனா நாளில் இருந்து இன்று வரை மனைவியுடன் பிணக்கு வந்தது இல்லையாம் . இனிமேலும் வராது அதான் மேப்பில் பார்த்த எல்லா நாடுகளையும் பார்க்க போகலாம் . மனைவியை பார்க்க நேரமும் இருக்காது அப்படியே மனைவி நச்சரித்தால் அவர்களையும் அழைத்துப் போகலாம் .
இலங்கைப் பிரச்னை , அணை பிரச்னை , எல்லை பிரச்சனை , நக்சல் , விலைவாசி , குடிமக்களின் பிரச்னை எதப் பற்றியும் கவலைபடாமல் அது பாட்டுக்கு இருக்கலாம் . இதற்குத் தான் இவர் இவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் ஆகியே தீருவேன் என்று ஆகிவிட்டார் .
விளக்கமாய் விளக்கலாம் என்றால் இவருக்கு இந்த விளக்கம் போதும் .
ஒரு நாள் வரும் ராணி முகர்ஜிக்கும் வாய்ப்பு வரும் , வரவேண்டும் என்று பிரார்திர்த்து .................
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
நல்ல விளக்கமா சொல்லி இருக்கீங்க...!
ReplyDeleteநன்றி...
ஆமா ராணி முகர்ஜி என்றால் யாரு????
ReplyDelete\\இது இப்படி இருக்க இவரு சனாதிபதி ஆனதற்கு மதுரையில் தமிழர்களை காத்த வாழும் மகாத்மா ( கள் ) இருக்கும் காங்கிரஸ் கட்சி ( இன்னும் பல பெருமைகளை சொல்லலாம் காங் பற்றி பிறகு அதுவே ஒரு பதிவாகிடும் )
ReplyDeleteஇனிப்பு வழங்கினார்கள் . \\
அமெரிக்காவின் Times பத்திரிகை மன்மோகன் சிங் எதற்கும் லாயக்கில்லாதவர் என்று எழுதியதற்காக சென்னையில் Times of India பத்திரிகையைக் கொழுத்திய புத்திசாளிகலாச்சே!! ராஜீவ் காந்தியின் மகள் பெயர் என்னவென்று இவர்களிடம் கேட்டால் பிரியங்கா சோப்ரா என்று சொல்வார்கள். இனிப்பு வழங்க பிரணாப் முகர்ஜி படத்துக்கு பதிலா ராணி முகர்ஜி படத்தை கூட இவர்கள் போட்டிருக்கலாம். ஹா........ஹா............ஹா.......